| 6. பதுமாபதியைக்கண்டது    | 
 
 | இதன்கண்; காமன் கோட்டத்தைஅடைந்த பதுமாபதியை உதயணன் காண்டலும், அவனை அவள் 
	காண்டலும், இருவர் மன நிலைகளும், பதுமாபதி காமன் கோயிலை வலம்வருதலும், தானம் 
	வழங்கலும்,ஒருத்தி காமவேளை வாழ்த்திப் பாடுதலும், பதுமாபதி அரண்மனை சேர்தலும், 
	பதுமாபதி கட்டளைஇடு்தலும் உதயணன் கூனியை வினவுதலும் அவள் விடைகூறலும், கூனி 
	உதயணனை வினாதலும், அவன் விடைகூறுதலும் கூன்மகள் போதலும் கூறப்படும், | 
 
 |  | 
 
 |  | வாயில் புக்கபின் வையம் நிறீஇ ஆய்வளைத் தோளி அகம்புக்கு 
 அருளென
 வைய 
 வலவன் வந்தனன் 
 குறுகிப்
 பூண்ட 
 பாண்டியம் பூட்டுமுதல் 
 விட்டபின்
 5      
 மஞ்சுவிரித்து அன்ன வைய 
 வாயில்
 கஞ்சிகை 
 கதுமெனக் கடுவளி 
 எடுப்ப
 வெண்முகில் பிறழும் மின்னென 
 நுடங்கித்
 தன்னொளி சுடரும் தையலை அவ்வழிக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | குறுஞ்சினைப் புன்னை நறுந்தாது ஆடிக் 10      கருங்குயில் சேவல் தன்நிறம் 
 கரந்தெனக்
 குன்றிச் 
 செங்கண் இன்துணைப் 
 பேடை
 உணர்தல் 
 செல்லாது அகல்தொறும் விரும்பிப்
 புணர்தல் உணர்வொடு பொங்குசிறை 
 உளரி
 அளிக்குரல் அழைஇத் தெளித்துமனம் 
 நெகிழ்க்குமக்.
 15     
  குயில்புணர் மகிழ்ச்சி அயிற்கூட் 
 டமைத்த
 செஞ்சுடர் வேலின் நெஞ்சிடம் 
 போழத்
 தன்ஞாழ் 
 நவிற்றிய தாமரை அங்கைப்
 பொன்ஞாண் துயல்வரும் 
 பொங்கிள வனமுலை
 மனைப்பெருங் கிழத்தியை நினைத்தனன் ஆகிக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 20     செம்மை 
 நெடுங்கண் வெம்மை உறாஅத் தெண்பனி உறைத்தரத் 
 திருத்துஞ் சகலத்துப்
 பொன்பூத்தன்ன அம்பூம் 
 பசப்பொடு
 நாண்மலர்ப் 
 புன்னைத் தாண்முதல் 
 பொருந்திக்
 கொடிக்குருக் கத்திக் கோலச் 
 செந்தளிர்
 25     பிடிந்த விரலினன் ஆகிக் 
 கெடுத்த
 அவந்திகை மாதர் அணிநலம் 
 நசைஇக்
 கவன்றனன் இருந்த காலை அகன்று
 | உரை | 
 
 |  | 
 
 |  | போமின் போமின் என்றுபுடை 
 ஓட்டும் காவ லாளரைக் கண்டுஇவண் புகுதரும்
 30     உரிமை உண்டென அரிமான் 
 அன்ன
 வெஞ்சின விடலை நெஞ்சுநிறை துயரமொடு
 | உரை | 
 
 |  | 
 
 |  | நீக்கச் சென்றனென்  நெருநல் 
 இன்றிவண் நீக்கப் பட்டனென் ஆதலின் நிலையா
 ஆக்கமும் கேடும் யாக்கை 
 சார்வா
 35     ஆழிக் காலில் 
 கீழ்மேல் வருதல்
 வாய்மை யாமென மனத்தின் நினைஇ
 | உரை | 
 
 |  | 
 
 |  | நீங்கிய எழுந்தோன் பூங்குழை மாதரை வண்ணக் கஞ்சிகை வளிமுகந்து 
 எடுத்துழிக்
 கண்னுறக் கண்டே தன்னமர் காதல்
 40 
     மான்நேர் நோக்கின் வாசவ 
 தத்தை
 தானே 
 இவளெனத் தான்தெரிந்துஉணரான்
 மந்திர விதியின் அந்த 
 ணாளன்
 தந்தனன் மீட்டெனும் சிந்தையன் ஆகி
 உறுப்பினும் நிறத்தினும் வேற்றுமை 
 இன்மையின்
 45     மறுத்து நோக்கும் 
 மறத்தகை மன்னன்
 | உரை | 
 
 |  | 
 
 |  | செஞ்சுடர் முகத்தே செருமீக் 
 கூரிய வெஞ்சின வேந்தர்க்கு நஞ்சுமிழ் நாகத்துத்
 தீயோர் அன்ன திறல 
 வாகி
 மூளையேர் முறுவல் முகிழ்த்த சின்நகை
 50     இளையோர் நெஞ்சில் தளைமுதல் 
 பரிந்தவர்க்கு
 அமிழ்தம் பொதிந்த அருளின 
 ஆகித்
 தலைப்பெரும் தாமரைச் செம்மலர் 
 அன்ன
 நலத்தொடு புணர்ந்த இலக்கண நெடுங்கண்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வயப்படல் உற்று வயங்கிழை மாதர் 55     தானும் கதுமென நேர்முகம் 
 நோக்க
 நெஞ்சிறை கொளீஇய நிறைஅமை 
 நெடுந்தாழ்
 வெந்தொழில் காம வேட்கை 
 திறப்பத்
 திண்பொறி 
 கலங்கி திறல்வேறு ஆகி
 வேலை எல்லை மீதூர்ந்து இரண்டு
 60     கோலப் பெருங்கடல் கூடி யாங்கும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | இசைந்த வனப்பின் ஏயர் 
 மகன்கும் பசைந்த காதல் பதுமா பதிக்கும்
 யாப்புறு பால்வகை நீப்புறவு 
 இன்றிப்
 பிறப்புவழிக் 
 கேண்மையின் சிறப்புவழி வந்த
 65    
  காமப் பெருங்கடல் கண்உறக் கலங்கி
 நிறைமதி எல்லைத் துறைஇகந்து ஊர்தர
 | உரை | 
 
 |  | 
 
 |  | நன்நகர் கொண்ட தன்அமர் 
 விழவினுள் கரும்புடைச் செல்வன் விரும்புபு தோன்றித்
 தன்நலங் கதுமெனக் காட்டி 
 யென்னகத்
 70     திருநிறை அளத்தல் கருதிய 
 தொன்றுகொல்
 அந்தண வடிவொடு வந்துஇவண் தோன்றி
 மேவன நுகர்தற்கு மாயைபின் 
 இழிதரும்
 தேவ குமரன் கொல்இவன் தெரியேன்
 யாவன்ஆயினும் ஆக 
 மற்றென்
 75     காவல் 
 நெஞ்சம் கட்டழித் 
 தனன்என
 வெஞ்சின 
 விடலையொடு நெஞ்சுமா றாடி
 | உரை | 
 
 |  | 
 
 |  | உலைப்பருந் தானை உதயண 
 குமரற்கு இலைக்கொழுந்து குயின்ற எழில்வளைப் 
 பணைத்தோள்
 உரிய வாயினன் 
 உணர்மிஎன்றுதன்
 80     அரிமதர் 
 நெடுங்கண் அயல்நின் 
 றோர்க்கும்
 அறியக் 
 கூறுதல் அமர்ந்தன போல
 நெறியில் றிரியா நிமிர்ந்துசென்று ஆட
 | உரை | 
 
 |  | 
 
 |  | வளங்கெழுன் மாவின் இளந்தளிர் 
 அன்ன நயத்தகு 
 மேனியும் நல்லோர் நாடிய
 85     பயப்புள் ளுறுத்த.படியிற்று 
 ஆகக்
 கைவரை நில்லாப் பையுள் ஒடுக்கி
 உட்கும் நாணும் ஒருங்குவந்து 
 அடைதர
 நட்புடைத் தோழி நண்ணுவனள் இறைஞ்ச
 மேதகு வையத்தின் மெல்லென 
 இழிந்து
 90     தாதுகு புனைமலர்த் 
 தண்பூங் 
 காவினுள்
 சூடக 
 முன்கைச் சுடர்க்குழை 
 மகளிரொடு
 ஆடுதல்ஆனா அவாவொடு நீங்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  | வனப்பெனப் படூஉந் தெய்வம் தனக்கோர் உருவுகொண் டதுபோல் திருவிழை 
 சுடரத்
 95     தன்அமர் தோழி 
 தம்புறத்து அசைஇ
 அன்னம் நாண அண்ணலைக் கவற்றாப்
 பொன்அரிக் கிண்கிணி புடைபெயர்ந்து 
 அரற்ற
 அரிச்சா 
 லேகத்து அறைபல பயின்ற
 திருக்கிளர் மாடம் சேர்ந்துவலம் கொண்டு
 | உரை | 
 
 |  | 
 
 |  | 100     கழிபெரும் 
 சிறப்பின் கன்னி 
 மகளிர் அழியும் 
 தானம் அவ்விடத்து அருளி
 நான்முகன் மகளிர் நூன்முதல் கிளந்த
 ஒழுக்கில் திரியாள் ளுறுபொருள் 
 வேண்டும்
 வழுக்கா அந்தணர் வருக யாவரும்
 105    
  விலக்கவும் நீக்கவும் பெறீஇர் என்றுதன்
 தலைத்தாள் முதியர்க்குத் தானே 
 கூறி
 நோன்புமுதல் தொடங்கித் தேங்கமழ் கோதை
 தலைநாள் தானம் தக்கவை 
 அளித்தலில்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பலநாளள் நோற்ற பயனுண்டு எனினே 110    
  வளமையும் வனப்பும் வண்மையும் திறலும்
 இளமையும் விச்சையும் என்றிவை 
 பிறவும்
 இன்பக் கிழமையும் மன்பேர் 
 உலகினுள்
 யாவர்க்கு ஆயினும் அடையும் 
 அடையினும்
 வார்கவுள் 
 யானை வணக்குதற்கு இயைந்த
 115     
 வீணை விச்சையொடு விழுக்குடிப் பிறவுஅரிது
 | உரை | 
 
 |  | 
 
 |  | விழுக்குடிப் பிறந்துஇவ் வீறோடு 
 விளங்கிய வழுக்கா மரபின் வத்தவர் பெருமகன்
 உதயண குமரனொடு ஒப்போன் 
 மற்றுஇவள்
 புதைபூண் வனமுலைப் போகம் பெறுகென
 120   
   மரபறி மகடூஉப் பரவினள் பாட
 அன்ன னாக என்நயந் 
 தோன்எனப்
 பொன்னிழை மாதர் தன்மனத்து இழைப்பத்
 தலைநாள் தானம் இலக்கணத்து இயைந்தபின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மாயிரு ஞாலத்து மன்னவன் 
 மகளே 125     ஞாயிறு படாமல் 
 கோயில் 
 புகுதல்
 இன்றை 
 நன்னாட்கு - இயல்புமற்று அறிகெனத்
 தொன்றியன் மகளிர் தொழுதனர் 
 கூறச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | செய்வதை அறியலள் வெய்துயிர்ப்பு 
 அளைஇத் தெய்வத் தானம் புல்லென வையத்து
 130  
    இலங்கிழை மாதர் ஏற்ற ஏறிப்
 பொலந்தொடி மகளிர் பொலிவொடு 
 சூழ
 வந்த 
 பொழுதில் கதுமென நோக்கிய
 அந்த ணாளற்கு அணிநலன் 
 ஒழியப்
 பெருநகர் புகழத் திருநகர் புக்கபின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 135    
  இகல்அடு தானை 
 இறைமீக்கூறிய தவலரும் 
 வென்றித் தருசகன் தங்கை
 கொங்கலர் கோதை நங்கைநம் 
 பெருமகள்
 புகழ்தற்கு ஆகாப் பொருவில் கோலத்துப்
 பவழச் செவ்வாய்ப் பதுமா 
 பதிதன்
 140     கன்னி நோன்பின் 
 கடைமுடிவு இதனொடு
 முன்னி முற்றும்இன்னது ஈமென
 | உரை | 
 
 |  | 
 
 |  | நச்சுவனர் வரூஉ நான்மறை யாளரை அச்சங் கொள்ள அகற்றன்மின் 
 என்றுதன்
 ஆணைவைத்து அகன்றனள் யாணர் அமைத்தஇஃது
 145     அறிமின் நீரெனப் பொறியமை 
 புதவின்
 கடைமுதல் 
 வாயில் கடுங்காப்பு இளையரை
 அடைமுது மாக்கள் அமைத்துஅகன்று அமையின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கண்டோர் பெயர்த்துக் காண்டல் 
 உறூஉம் தண்டா வனப்பின் தகைமையள் ஆகிய
 150     கன்னி ஆகம் கலக்கப் 
 பெறீஇயர்எனப்
 பன்மலர்க் 
 காவினுள் பகலு 
 மிரவும்
 உறையுள் 
 எய்திய நிறையுடை நீர்மை
 இளையோன் அமைந்த காலை 
 மற்றுத்தன்
 தளைஅவிழ் கோதைத் தையல் இவளெனும்
 155     மையல் உள்ளமொடு பைதல்எய்தி
 | உரை | 
 
 |  | 
 
 |  | மன்னவன் மடமகள் பின்ஒழிந்து 
 இறக்கும் ஏந்திள வனமுலை எழில்வளைப் 
 பணைத்தோள்
 மாந்தளிர் 
 மேனி மடமான் 
 நோக்கின்
 ஆய்ந்த 
 கோலத்து அயிரா பதியெனும்
 160     
 கூன்மட மகள்தனைக் கோமகன் 
 குறுகி
 யாவள்இந் 
 நங்கை யாதுஇவள் 
 மெய்ப்பெயர்
 காவலர் கொள்ளுங் காவினுள் 
 வந்த
 காரணம் 
 என்னை கருமம்உண்டு எனினும்
 கூறினை செல்லின் குற்றம்இல்லென
 165  
    மாறடு குருசில் வேறிடை வினவ
 | உரை | 
 
 |  | 
 
 |  | அந்த ணாளன் அரும்பொருள் 
 நசையின் வந்தனன் என்னும் 
 வலிப்பினளாகி
 இண்பம் கலந்த இந்நகர்க்கு 
 இறைவன்
 தன்பெரு மாட்டி தலைப்பெருந் தேவி
 170     சிதைவில் கற்பின் சிவமதி 
 என்னும்
 பேருடை மாதர்க்கு ஓரிடம் 
 பிறந்த
 உதையை யோடை என்னும் 
 ஒண்டொடி
 காசி அரசன் காதலி மற்றவள்
 ஆசின்று பயந்த அணியிழைக் குறுமகள்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 175    மதுநாறு தெரியல் 
 மகளிருள் பொலிந்த பதுமா பதிஎனப் பகர்ந்த 
 பேரினள்
 துன்அரும் 
 சிறப்பின் கன்னி தானும்
 வயந்தக் கிழவற்கு நயந்துநகர் 
 கொண்ட
 விழவணி 
 நாளகத்து அழகணி காட்டி
 180    எழுநாள் கழிந்த 
 வழிநாள் காலை
 வேதியர்க்கு எல்லாம் வேண்டுவ 
 கொடுக்கும்
 போதல் 
 வேண்டா பொருள்குறை 
 உண்டெனின்
 ஏதமில்லைஇவண் இராமின்என்று
 | உரை | 
 
 |  | 
 
 |  |        
      இந்நாட் டார்அலிர் ஏனையர் 
 போல்வீர்185     எந்நாட்டு 
 எவ்வூர் எக்கோத் திரத்தீர்
 யாமும் நும்மை அறியப் 
 போமோ
 வாய்மை யாக மறையாது 
 உரைமின்என்று
 ஏயர் குருசிலைத் தூய்மொழி வினவ
 | உரை | 
 
 |  | 
 
 |  | நன்றான் மற்றது கேளாய் நன்னுதல் 190  
    கண்டார் புகழும் கலக்கமில் சிறப்பின்
 காந்தாரம் என்னும் மாய்ந்த 
 நாட்டகத்து
 ஈண்டிய பல்புகழ் இரத்தின 
 புரத்துள்
 மாண்ட வேள்வி மந்திர 
 முத்தீச்
 சாண்டியன் என்னும் சால்புடை ஒழுக்கின்
 195     ஆய்ந்த நெஞ்சத்து அந்தணன் மகன்என்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மாணகன் என்பேன் மற்றுஇந் நாடு காணல் உறலொடு காதலில் 
 போந்தனென்
 என்றது சொல்ல நன்றென 
 லிரும்பி
 ஆய்புகழ் அண்ணலை அறிந்தனள் ஆகிச்
 200    சேயிழைக் கூன்மகள் சென்றனள் விரைந்தென்
 
 | உரை | 
 
 |   |  |  |