14. நலன்
ஆராய்ச்சி
|
இதன்கண்; கன்னி மாடத்துஇருந்த
உதயணமன்னன் தோழி எழுதித் தந்த அரண்மனை வடிவம் முதலியவற்றைக் கண்டு தன்னுள்
நினைத்தலும், பதுமாபதி செவ்வி அரியள்ஆதலும், கட்டில் வருணனையும், பாக்குவகை
வருணனையும், உதயணன் ஓவியத்தைக் கண்டு வியத்தலும்,
பதுமாபதி ஊடலும், உதயணன் ஊடல் தவிர்த்தலும், பதுமாபதி
யாப்பியாயினிக்குக் கூறுதலும்,யாப்பியாயினி உதயணனை வினாதலும்,
அவன் விடையும், உதயணனும் யாப்பியாயினியும் உரையாடலும், மாலைக்
காலவரவும், உதயணன் பாடிக்கொண்டு யாழ் வாசித்தலும், உதயணனுடைய இசைச்
சிறப்பும், பதுமாபதி வியத்தலும் கூறப்படும். |
|
|
மதலை மாடத்து
மடமொழி
மாதரொடு உதயண
குமரன் ஒடுங்கிய
உவகையன் விண்உறை
தேவரும் விழையும்
போகத்துப் பெண்உறை
உலகம் பெற்றோன் போலவும் |
உரை |
|
|
5 நோக்கருங் கதிரவன்
நீக்கம்
பார்த்துப் பைங்கதிர்
விரிக்கும் பனிமதிக்
கிழவன் அங்கண்
ஞாலத்து அளவை
ஆகிய பன்நாள்
பக்கஞ் செல்லாது
சின்நாள் வெண்முக
நிலாஒளி சுருங்க மெல்என
10 உண்மகிழ் உரோணியொடு ஒளித்தது
போலவும் திகழ்மணி
மார்பன் அகநகர்
ஒடுங்கப் பொருள்புரி
அமைச்சர் புறநகர் கரப்புழி |
உரை |
|
|
இருள்அறு நுண்மதித்
தோழியை
எழுதெனக் கோயில்
வட்டமும் கோணப்
புரிசையும் 15 வாயில்
மாடமும் வஞ்சப்
பூமியும் இலவந்
திகையும் இளமரக்
காவும் கலவம் புகலும்
கான்கெழு
சோலையும் உரிமைப்
பள்ளியும் அருமைக்
காப்பின் படைக்கலக்
கொட்டிலும் புடைக்கொட் டாரமும் |
உரை |
|
|
20 நடைப்பெரு வாயிலும் முடைக்குறும்
புழையும் அவைமண்
டபமும் மாடுஅம்
பலமும் வகைமாண்
தெய்வம் வழிபடு
தானமும் குதிரைப்
பந்தியும் அதிர்தல்
ஆனா யானைத் தானமும்
தானைச் சேக்கையும் 25 எயிலது அகற்றமும்
மயில்விளை
யாடும் சுதைவெண்
குன்றமும் புதையிருள்
தானமும் உடையன
எல்லாம் உள்வுழி
உணர்ந்து தெளிதல்
செல்லாத் தெவ்வன்
இவனெனின் அளியியல்
செங்கோல் அரசுமுதல்
வவ்வலும் 30 எளிதுஎனக்கு என்னும்
எண்ணினன் ஆகிப் |
உரை |
|
|
பெண்பால்
சூழ்ச்சியின் பிழைப்புப்
பலவெனும் நுண்பான்
நூல்வழி நன்கனம்
நாடின் ஏதம் இல்லை
இதுஎனத் தேறி மாதர்
மாட்டு மகிழ்ச்சியொடு தெளிதல் 35 நீதி
அன்றென நெஞ்சத்து
அடக்கிச் செருக்கிய
நெடுங்கண் செவ்வி
பெற்றாங்கு உரத்தகை
அண்ணல் உறைவது வலிப்பத் |
உரை |
|
|
தவ்வை ஆயினுந் தாயே
ஆயினும் செவ்வி
அறியார் சென்றுமெய் சாரின் 40 காட்டக்
காணாள் கதம்பாடு
ஏற்றி வாள்கண்
பாவை மருவற்கு
இன்னாக் காட்சியள்
ஆகிக் கருதுவது எதுவெனின் |
உரை |
|
|
வீயா நண்பின் வேத
மகள்உழை யாழும்
பாட்டும் அவைதுறை
போகக் 45 கற்றல் வேண்டும்
இனியெனக்
கற்பதற்கு அன்புடை
அருள்மொழி அடைந்தோர்
உவப்ப நன்பல
பயிற்றிய நாவினள்
ஆகி அமிழ்தின்
அன்ன அறுசுவை
அடிசிலும் இவணே வருக
இன்று முதலெனத் 50 தமர்வயின் நேய
தன்மையள் ஆகி |
உரை |
|
|
மழைஅயா உயிர்க்கும்
வான்தோய்
சென்னி இழைஅணி
எழுநிலை மாடத்து
உயர்அறை வாள்வரி
வயமான் மூரி
நிமிர்வின் நிலைக்கால்
அமைந்த நிழல்திகழ் திருமணி
55 கயில்குரல் வளைஇய கழுத்தில்
கவ்விய பவழ
இழிகைப் பத்திக்
கட்டத்துப் பட்டுநிணர்
விசித்த கட்டமை
கட்டிலுள் பொழுதிற்கு
ஒத்த தொழில
ஆகி எழுதுவினைப்
பொலிந்த இழுதுறழ் மென்மைய
60 முறைமையின் அடுத்த குறைவில்
கோலமொடு நிரப்பம்
எய்திய நேர்பூம்
பொங்கணைப் பரப்பிற்கு
ஒத்த பாய்கால்
பிணைஇ அரக்குவினைக்
கம்மத்து அணிநிலைத்
திரள்காழ் ஒத்த
ஊசி குத்துமுறை கோத்த 65 பவழ மாலையும்
பன்மணித்
தாமமும் திகழ்கதிர்
முத்தின் தெரிநலக் கோவையும் |
உரை |
|
|
வாய்முதல் தோறும்
தான்முதல்
அணிந்த அந்தண்
மாலையும் அகடுதோறு
அணவரப் பைம்பொன்
புளகம் பரந்துகதிர் இமைப்ப 70 ஐவேறு
உருவின் மெய்பெறப்
புனைந்த பொய்வகைப்
பூவும் வைஎயிற்று
அகல்வாய் மகரத்
தங்கண் வகைபெறப்
போழ்ந்த காம
வல்லியும் களிறும்
பிடியும் தேமொழிச்
செவ்வாய்த் திருமகள் விரும்பும் 75 அன்ன
வீணையும் அரிமான்
ஏறும் பன்மரக்
காவும் பாவையும்
பந்தியும் பறவையும்
பிறவும் உறநிமிர்ந்து
ஓவா நுண்ணவாப்
பொலிந்த கண்ணவா
உறூஉம் மீமிசைக்
கட்டின் வாய்முதல் தாழ்ந்த 80 வண்ணப்
படாஅம் கண்ணுறக் கூட்டிப் |
உரை |
|
|
பைங்கருங் காலிச்
செங்களி
அளைஇ நன்பகற்கு
அமைந்த அந்துவர்க்
காயும் இருங்கண்
மாலைக்குப் பெரும்பழுக்
காயும் வைகறைக்கு
அமையக் கைபுனைந்து இயற்றிய 85 இன்தேன்
அளைஇய விளம்பசுங்
காயும் பைந்தளிர்
அடுக்கும் பலமுத
லாகிய மன்பெரு
வாசமொடு நன்பல
அடக்கிய பயில்வினை
அடைப்பையொடு படியகந்
திருத்தி |
உரை |
|
|
உருவொடு புணர்ந்த
உயரணை மீமிசை 90 இருபுடை
மருங்கினும் எழில்பட
விரீஇ ஏமச் செவ்வி
ஏஎர் நுகரும் யாமத்து
எல்லையுள் மாமறைப்
பேரறை உலாவும்
முற்றத்து ஊழ்சென்
றாட நிலாவிரி
கதிர்மணி நின்று விளக்கலும் 95 பள்ளி
தன்னுள் வள்ளிதழ்க்
கோதையொடு மன்நயம்
உரைத்து நன்நலங் கவர்ந்து |
உரை |
|
|
வித்தகர் எழுதிய
சித்திரக்
கொடியின் மொய்த்தலர்
தாரோன் வைத்துநனி
நோக்கிக் கொடியின்
வகையும் கொடுந்தாள்
மறியும் 100 வடிவமை பார்வை வகுத்த
வண்ணமும் திருத்தகை
அண்ணல் விரித்துநன்கு
உணர்தலின் மெய்பெறு
விசேடம் வியந்தனன் இருப்பக் |
உரை |
|
|
கைவளர் மாதர்
கனன்றுகனன்று
எழுதரும் காம வேகம்
தான்மிகப் பெருகப் 105 புலவி நெஞ்சமொடு
கலவியுள்
கலங்கிப் புல்லுகை
நெகிழப் புணர்வுநனி
வேண்டாள் மல்லிகைக்
கோதை மறித்தனள் இருந்து் |
உரை |
|
|
சூட்டுமுகம் திருத்தி
வேட்டுநறு
நீரின் மயிரும்
இறகுஞ் செயிரறக் கழீஇக் 110 கோன்நெய்
பூசித் தூய்மையுள்
நிறீஇப் பாலும்
சோறும் வாலிதின்
ஊட்டினும் குப்பை
கிளைப்புஅறாக் கோழி
போல்வர் மக்கள்
என்று மதியோர்
உரைத்ததைக் கண்ணில்
கண்டேன் என்று கைந்நெரித்து் |
உரை |
|
|
115 ஒண்நுதல் மாதர் உருகெழு
சினத்தள் தம்மால்
வந்த தாங்கரும்
வெந்நோய் தம்மை
நோவது அல்லது
பிறரை என்னதும்
நோவல் ஏதம் உடைத்தெனக் |
உரை |
|
|
கருங்கேழ் உண்கண்
கயலெனப் பிறழ்ந்து 120 பெருங்கயத்
தாமரைப் பெற்றிய
ஆகத் திருநுதல்
வியர்ப்பெழுந்து இருநிலத்து
இழிதர நிலாவுறு
திருமுகம் நிரந்துடன்
மழுங்கிக் கருமயிர்
இவர்ந்து காண்தகக்
குலாஅய்ப் புருவம்
பலகால் புடைபுடை பெயர் |
உரை |
|
|
125 முத்துறழ் ஆலி தத்துவன
தவழ்ந்து பொன்நிறக்
குரும்பை தன்னிறம் அழுங்கத்
தன்னிறங் கரப்பத் தவாஅ வெம்மையொடு
வீழ்அனல் கடுப்ப வெய்துயிர்த்து
அலைஇக் காதல்செய் கலங்கள்
போதொடு போக்கி 130 அந்தண் சாந்தம்
ஆகத்துத் திமிர்ந்து பண்புரை
கிளவி பையெனத் திரியக் |
உரை |
|
|
கரும்பேர் கிளவி
கதிர்முகை முறுவல் பெருந்தடங்
கண்ணி பிழைப்பொன்று உணரேன்
வருந்தல் வேண்டா வாழிய நங்கைஎன்று 135
இரந்தனன் ஆகி ஏற்பக்
காட்டிய இலம்புடை
நறுமலர் எழுதுகொடிக் கம்மத்துச்
சிலம்பிடைத் தங்கிய சேவடி
அரத்தம் கார்இருங் குஞ்சி
கவின்பெறத் திவள அரவுவாய்க்
கிடப்பினும் மலர்கதிர்த் தண்மதிக் 140
குருவுக்கதிர் வெப்பம் ஒன்று மில்லை |
உரை |
|
|
சிறியோர் செய்த
சிறுமைஉண்
டெனினும் தரியாது
விடாஅர் தாநனி
பெரியோர் என்பது
சொல்லி எழில்வரை
மார்பன் பொன்புனை
பாவை புறக்குடை நீவிச் 145 செங்கையில்
திருத்திப் பைந்தோடு
அணிந்து கலம்பல
திருத்தி நலம்பா
ராட்டிச் சாந்தம்
மெழுகிச் சாயல்நெகிழ்பு
அறிந்து பூம்புறங்
கவவப் புனைதார்
ஓதி பூண்ட பூணொடு
பொறையொன்று ஆற்றேன் 150 தீண்டன்மின்
பெருமஎனத் தீரிய உரைத்து |
உரை |
|
|
மாடத் தகத்தில்
ஆடுவினைக்
காவினுள் கொம்பர்
மீமிசைக் கூகைவந்து
உலாஅய் வித்தகக்
கைவினைச் சத்தி
யேறி உட்குத்தக
உரைத்தலுங் கட்கின் பாவை 155 நெஞ்சந் துட்கென
கெடுவிடை
நின்ற காற்றெறி
வாழையின் ஆற்ற
நடுங்கி அஞ்சில்
ஓதி ஆகத்து அசைத்தர் |
உரை |
|
|
அச்ச முயக்கம்
நச்சுவனன்
விரும்பி மெல்லியன்
மாதரொடு மேவன கிளந்து 160 புல்லியுந்
தளைத்தும் புணர்ந்தும் பொருந்தியும்
அல்குலும் ஆகமும் ஆற்றநலம்
புகழ்ந்தும் அமரர் ஆக்கிய
அமிழ்தெனக் கினையோள் தன்முளை
எயிற்றுநீர் தானென வயின்றும்
ஒழுகா நின்ற காலை ஒருநாள் |
உரை |
|
|
165 இன்பப் பேரறை நன்பகல்
பொருந்தி அருமறை அறிதற்கு
அமைந்த ஆர்வத்து ஒருதுணைத்
தோழியை ஒன்றுவனள் கூவித்
திருவிற்கு அமைந்த தேந்தார் மார்பன்
உருவிற்கு அமைந்த உணர்வுநன் குடைமை
170 அளத்து நாமெனத் துளக்கிலள்
சூழ்ந்து பலர்புகழ் மார்பன்
பயின்ற விச்சைகள் வல்லவை
ஆய்கென வழிபா டாற்றி் |
உரை |
|
|
நல்லவை யாவென
நகைக்குறிப்பபு ஊர்தர வினவிய
மகளிர்க்குச் சினவுநர்ச் சாய்த்தவன் 175 வேத
விழுப்பொருள் ஓதினர்
உளரெனின் எனைத்துங்
கரவேன் காட்டுவென் யானென் |
உரை |
|
|
எமக்கவை
என்செயும் இசையொடு
சிவணிய கருவிக் கரண
மருவினை
யோவென நீத்தவர்
வேண்டிய துப்புரவு அல்லால் 180 பார்ப்பன
மக்கள் பரிந்துபிற பயிற்றார்
வேள்விக் குரிய கருவி யாவும்
வாளேர் கண்ணி வல்லேன் யானென் |
உரை |
|
|
நல்லதொன்று உண்டெனிற்
சொல்லல்எங்
குறையெனச் தோளுறு
துணைவிக்குத் துயரம் வந்தநாள் 185 சூளுறு கிளவியில்
தொழுதனள்
கேட்ப இடவரை
அருவியின் இம்மென
விசைக்கும் குடமுழ
வென்பது பயிற்றினென் யானென் |
உரை |
|
|
அவைக்குரி விச்சை வல்ல
அந்தணன் சுவைத்தொழின் மகனென
நகைத்தொழி லாடி 190 அந்தர மருங்கின் அமரர்
ஆயினும் மந்திர மறப்ப மனநனி
கலக்கும் பைந்தொடி பயிற்றும்
பண்யாழ் வருகெனத்
தந்துகைக் கொடுக்கலுந் தண்பூங் கொடிபோல் |
உரை |
|
|
எதிர்முகம் வாங்கி
எழினி மறைஇப் 195 பதுமா நங்கையும் பைஎனப்
புகுந்து கோன்மணி
வீணை கொண்டிவண்
இயக்கத் தான
மறிந்தி யாப்பி
யாயினி நீநனி
பாடென நேரிழை
அருளித் துணைவன்
முன்னதன் தொன்னலந் தோன்றக் 200 கணைபுணர்
கண்ணி காட்டுதல் விரும்பி் |
உரை |
|
|
ஒள்உறை நீக்கி
யொளிபெறத்
துடைத்து வன்பிணித்
திவவு வழிவயின்
இறுத்த மெல்விரல்
நோவப் பல்கால் ஏற்றி ஆற்றா
ளாகி அரும்பெறல் தோழியைக் 205 கோல்தேன்
கிளவி குறிப்பில் காட்டக் |
உரை |
|
|
கொண்டவள் சென்று
வண்டலர்
தாரோய் வீணைக்கு
ஏற்ப விசையொடு
மற்றிவை தானந்
திரீஇத் தந்தீக எமக்கெனக் |
உரை |
|
|
குலத்தொடும் வாராக்
கோல்தரும் விச்சை 210 நலத்தகு
மடவோய் நாடினை யாகின்
அலைத்தல் கற்றல் குறித்தேன்
யானென மற்போர்
மார்பஇது கற்கல் வேண்டா
வலியின் ஆவது வாழ்கநின் கண்ணி
தரித்தரல் இன்றிய இவற்றை இவ்விடத்து 215
இருத்தல் அல்லது வேண்டலம் யாமென் |
உரை |
|
|
அன்ன தாயின் ஆமெனில்
காண்கம் பொன்னிழை மாதர்
தாவெனக் கொண்டு திண்ணிய
வாகத் திவவுநிலை நிறீஇப்
பண்ணறி உறுத்தற்குப் பையெனத் தீண்டிச் 220
சுவைப்பட நின்றமை யறிந்தே பொருக்கெனப்
பகைநரம்பு எறிந்து மிகையுறப்
படூவும் எள்ளல் குறிப்பினை
உள்ளகத்து அடக்கிக் |
உரை |
|
|
கோடும் பத்தலுஞ் சேடமை
போர்வையும் மருங்குலும் புறமுந்
திருந்துதுறைத் திவவும் 225 விசித்திரக்
கம்மமும் மசிப்பில
னாகி எதிர்ச்சிக்
கொவ்வா
முதிர்ச்சித் பொத்துஅகத்து
உடையதாய்ப் புனனின்று
அறுத்துச் செத்த
தாருச் செய்தது
போலும் இசைத்திறன்
இன்னா தாகியது இதுவென 230 மனத்தின் எண்ணி
மாசற நாடி நீட்டக்
கொள்ளாள் மீட்டவள் இறைஞ்சிக் |
உரை |
|
|
கொண்ட வாறும்அவன்
கண்ட
கருத்தும் பற்றிய
வுடன்அவன் எற்றிய
வாறும் அறியா
தான்போல் மெல்ல மற்றதன் 235 உறுநரம்
பெறீஇ புணர்ந்த
வண்ணமும் செறிநரம்பு
இசைத்துச் சிதைத்த
பெற்றியும் மாழை
நோக்கி மனத்தே
மதித்தவன் அகத்ததை
எல்லாம் முகத்தினிது உணர்ந்து் |
உரை |
|
|
புறத்தோன் நன்மை
திறப்படத் தெளிந்து 240 தாழிருங்
கூந்தல் தோழியைச்
சேர்ந்திவன்
யாழறி வித்தகன் அறிந்தருள் என்றலின்
இன்னுஞ் சென்றவன் அன்னன்
ஆகுதல் நன்னுதல்
அமர்தர நாடிக் காண்கெனப் |
உரை |
|
|
பின்னுஞ் சேர்ந்து
பெருந்தகை எமக்கிது 245 பண்ணுமை
நிறீஇயோர் பாணிக் கீதம்
பாடல் வேண்டுமென்று ஆடமைத்
தோளி மறுத்துங் குறைகொள
மறத்தகை மார்பன் |
உரை |
|
|
என்கண் கிடந்த
எல்லாம் மற்றிவள்
தன்கண் மதியில் தான்தெரிந்து உணர்ந்தனள்
250 பெரிதிவட்கு அறிவெனத் தெருமந்து
இருந்திது வல்லுநன்
அல்லேன் னல்லோய் நானென் |
உரை |
|
|
ஒருமனத் தன்ன
வுற்றார்த் தேற்றா
அருவினை இல்லென அறிந்தோர் கூறிய
பெருமொழி மெய்யெனப் பிரியாக் காதலொடு
255 இன்ப மயக்கம் எய்திய
வெம்மாட்டு அன்புதுணை யாக
யாதொன்று ஆயினும் மறாஅது
அருளென உறாஅன் போல் |
உரை |
|
|
அலங்குகதிர்
மண்டிலம் அத்தஞ் சேரப்
புலம்புமுந் துறுத்த புன்கண்
மாலைக் 260 கருவி வானம்
கால்கிளர்ந்து
எடுத்த பருவம்
பொய்யாப் பைங்கொடி முல்லை
வெண்போது கலந்த தண்கண்
வாடை பிரிவருங்
காதற்குக் கரியா அதுபோல்
நுண்சா லேகம் நுழைந்துவந் தாட் |
உரை |
|
|
265 ஆராக் காதலின் பேரிசை
கனியக் குரலோர்த்துத்
தொடுத்த குருசில் தழீஇ
இசையோர் தேய இயக்கமும் பாட்டும்
நசைவித் தாக வேண்டுதிர் நயக்கெனக் |
உரை |
|
|
குன்றா வனப்பில்
கோட பதியினை 270 அன்றாண்டு
நினைத்துஅஃது அகன்ற
பின்னர் நலத்தகு
பேரியாழ் நரம்புதொட் டறியா
இலக்கணச் செவ்விரல் ஏற்றியும்
இழித்தும் தலைக்கண்
தாழ்வும் இடைக்கண் நெகிழ்ச்சியும்
கடைக்கண் முடுக்குங் கலந்த கரணமும்
275 மிடறு நரம்பு மிடைதெரி
வின்றிப் பறவை
நிழலில் பிறர்பழித்து ஈயாச்
செவிச்சுவை அமிர்தம் மிசைத்தலின் மயங்கி் |
உரை |
|
|
மாடக் கொடுமுடி
மழலையும் புறவும்
ஆடமை பயிரும் அன்னமுங் கிளியும்
280 பிறவும் இன்னன பறவையும்
பறவா ஆடுசிறகு ஒடுக்கி
மாடஞ் சோரக்
கொய்ம்மலர்க் காவில் குறிஞ்சி முதலாப்
பன்மரம் எல்லாம் பணிந்தன
குரங்க மைம்மலர்க்
கண்ணியும் மகிழ்ந்து மெய்ம்மறப்ப் |
உரை |
|
|
285 ஏனோர்க்கு இசைப்பின் ஏதந்
தருமென மானேர் நோக்கி
மனத்திற் கொண்டு
கண்கவர் உறூஉங் காமனின் பின்னைத்
தும்புரு வாகும்இத் துறைமுறை
பயின்றோன் இவனிற்
பின்னை நயன்உணர் கேள்வி 290 வகையமை
நறுந்தார் வத்தவர்
பெருமகன் உதையணன்
வல்லன்என் றுரைப்ப அவனினும்
மிகநனி வல்லன்இத் தகைமலி மார்பன்என்று் |
உரை |
|
|
உள்ளங் கொள்ளா
உவகையள் ஆகி
ஒள்ளிழை தோழியொடு உதயணன பேணிக 295
கழிபெருங் காமங் களவினில்
கழிப்பி ஒழுகுவனள்
மாதோ உரிமையின் மறைந்தென். |
உரை |
|
|
|