17. இரவுஎழுந்தது

 

இதன்கண் மகத மன்னனாகிய தருசகனோடு போர் செய்ய வந்த பகை மன்னராகிய விரிசிகன் முதலிய எண்மரின் வரலாறும், அம் மன்னர் போருக்கு எழுதலும், தருசகன் செயலும், அயிராபதி உதயணனிடம் கூறலும், உருமண்ணுவாவின் செயலும், தோழர் செயலும், மணப் பொருள்களின் வகையும், உண் பொருள்களும், மருந்திற்குரிய பொருளும், மகளிர்க்குரிய பொருளும், பகை மன்னர் செயலும், உதயணன் முதலியோர் செயலும், உதயணன் மறவர் இரவில் போர் புரிதலும் பிறவும் கூறப்படும்.
 

                செய்வது தெரியும் சித்தையோடு இருந்துழித்

 
 

                தகைமலர்ப் பைந்தார்த் தருசகன் தன்னொடு்
                பகைகொண்டு ஒழுகும் பற்றாக் கொடுந்தொழில்
                விடுகணை வில்தொழில் விரிசிகன் உள்ளிட்டு
     5          அலருந் தோற்றத்து அரிமான் அன்னவர்
                மத்தநல் யானை மதிய வெண்குடை
                வித்தக நறுந்தார் விலங்குநடைப் புரவி்
                அத்தின புரத்தின் அரசருள் அரிமான்
                வேண்டியது முடிக்கும் வென்றித் தானை
     10          ஈண்டிய ஆற்றல் எலிச்செவி அரசனும்

 
 

                காண்டற்கு ஆகாக் கடன்மருள் பெரும்படைத்
                தீண்டற்கு ஆகாத் திருந்துமதில் அணிந்த
                வாரண வாசி வளம்தந்து ஓம்பும்
                ஏரணி நெடுங்குடை இறைமீக் கூரிய
     15          படைநவில் தடக்கைப் பைந்தார்க் கருங்கழல்
                 அடவி அரசெனும் ஆண்தகை ஒருவனும்

 
 

                 மலைத்தொகை அன்ன மையணி யானை
                 இலைத்தார் மார்பின் ஏரணி தடக்கைப்
                 பொருந்தா மன்னரைப் புறக்குடை கண்ட
     20          அருந்திறல் சூழ்ச்சி அடல்வேல் தானை
                 அயிர்த்துணைப் பல்படை அயோத்தி அரசனும்

 
 

                 மாற்றோர்த் தொலைத்த கூற்றுஉறழ் கொடுந்தொழில்
                 மிக்குயர் வென்றியொடு வேந்தரை அகப்படுத்து
                 அக்களம் வேட்ட அடல்அருஞ் சீற்றத்துப்
     25          புனைமதில் ஓங்கிய போதன புரத்துஇறை
                 மிலைச்சன் என்னும் நலத்தகை ஒருவனும்

 
 

                 சீற்றத் துப்பின் செருவெனப் புகலும்
                 ஆற்றல் சான்ற அரசருள் அரிமாத்
                 துன்னரும் நீள்மதில் துவரா பதிக்குஇறை
     30          மன்னரை முருக்கிய மதிய வெண்குடைப்
                 பொங்குமலர் நறுந்தார்ச் சங்கர அரசனும்

 
 

                 மல்லன் என்னும் வெல்போர் விடலையும்
                 தானை மன்னரை மானம் வாட்டிய
                 ஊன்இவர் நெடுவேல் உருவக் கழற்கால்
     35          பொங்குமயிர் மான்தேர்த் திருநகர்க்கு இறைவன்
                 வெந்திறல் செய்கை வேசா லியும்என
                 அடல்தகை மன்னர் படைத்தொகை கூட்டிச்          

 
 

                 சங்க மாகி வெங்கணை வீக்கமொடு
                 பகைநமக் காகிப் பணித்துத் திறைகொளும்
     40          மகத மன்னனை மதுகை வாட்டிப்
                 புரிபல இயைந்த ஒருபெருங் கயிற்றினில்
                 பெருவலி வேழம் பிணித்திசின் ஆஅங்கு
                 இசைந்த பொழுதே இடங்கெட மேற்சென்று
                 அருந்திறன் மன்னனை நெருங்கினம் ஆகித

 
 

     45          தன்னுடை யானையும் புரவியும் தன்துணைப்
                 பொன்இயல் பாவையும் புனைமணித் தேரும்
                 அணிகதிர் முத்தமும் அருங்கலம் ஆதியும்
                 பணிமொழிச் செவ்வாய்க் கணிகை மகளிரொடு
                 பிறவும் இன்னவை முறைமையில் தரினும்
     50          இருங்கண் மாதிரத்து ஒருங்குகண் கூடிய
                 கருமுகில் கிழிக்கும் கடுவளி போலப்
                 பொருமுரண் மன்னர் புணர்ப்புஇடைப் பிரிக்கும்
                 அறைபோக்கு அமைச்சின் முறைபோக்கு எண்ணினும்

 
 

                அங்கண் ஞாலத்து அழகுவீற்று இருந்த
     55         கொங்கலர் கோதை எங்கையைப் பொருளொடு
                தனக்கே தருகுவன் சினத்தின் நீங்கி
                ஊனங் கொள்ளாது தான்அவள் பெறுகெனத்
                தேறும் மாந்தரை வேறுஅவண் விடுத்துத்
                தனித்தர ஒருவரைத் தன்பால் தாழ்ப்பினும்

 
 

     60          என்ன ஆயினு அன்னது விழையாது
                 ஒடுங்கி இருந்தே உன்னியது முடிக்கும்
                கொடுங்கால் கொக்கின் கோள்இன மாகிச்
                சாய்ப்பிட மாகப் போர்ப்படை பரப்பி
                வலிகெழு வேந்தனை வணக்குதும் என்னத்
     65         தெளிவுசெய்து எழுந்து திருமலி நன்னாட்டு
                எல்லை இகந்து வல்லை எழுந்து
                கடுந்தொழில் மேவலொடு உடங்குவந்து இறுத்தலின

 
 

               அகநகர் வரைப்பின் அரசன் அறியப்
               புறநகர் எல்லாம் பூசலில் துவன்றி
     70         அச்ச நிலைமை அரசற்கு இசைத்தலின்
               மெச்சா மன்னரை மெலிவது நாடித்
               தருசகன் தமரொடு தெருமரல் எய்தி
               மாணகன் கண்டுஇந் நிலைமை கூறென்

 
 

               ஆணம் நெஞ்சத்து அயிரா பதிவந்து
     75         அனங்கத் தானம் புகுந்தவன் கண்டு
               கூப்பிய கையினள் கோயிலுள் பட்டதும்
               கோல்தொடி மாதர் கொள்கையும் கூற

 
 

               உகவை உள்ளமொடு பகைஇவண் இயைதல்
               கருமம் நமக்கென உருமண் ணுவாஉரைத்து
     80         இன்னது என்னான் பொன்ஏர் தோழிக்கு
                இருமதி நாளகத்து இலங்கிழை மாதர்
                பருவரல் வெந்நோய் பசப்பொடு நீக்குவென்
                என்றனன் னென்பதைச் சென்றனை கூறிக்
                கவற்சி நீக்கெனப் பெயர்த்துஅவண் போக்கிக்

     85         கடுத்த மன்னரைக் கலங்கத் தாக்கி
                உடைத்த பின்றை அல்லது நங்கையை
                அடுத்தல் செல்லான் அரசன் ஆதலின்
                அற்றம் நோக்கி அவர்படை அணுகி
                ஒற்றி மேல்வீழ்ந்து உடைக்கும் உபாயமா
     90         வாணிக வுருவின மாகி மற்றவர்
                ஆணத் தானை அகம்புக்கு ஆராய்ந்து
                இரவிடை எறிந்து பொருபடை ஓட்டிக்

 
 

                கேட்போர்க்கு எல்லாம் வாள்போர் வலித்தொழில்
                வளமிகு தானை வத்தவர்க்கு இறையைக்
     95         கிளைமை கூறி உளமை கொளீஇக்
                காவினுள் நிகழ்ந்தது காவலற்கு உரைப்பின்
                மன்றல் கருதி வந்த மன்னற்கு
                ஒன்றுபு கொடாமை உண்டு மாகும்

 
 

                ஒன்றினன் ஆயின் பொன்றுஞ் சின்முலைத்
     100        தெரியிழை மாதர் உரிமையின் நோன்தாள்
               அன்னது ஆதல் ஒருதலை அதனால்
               பின்னரும் அதற்குப் பிறபிற நாடுதும்
               இன்னே எழுகென்று எழுந்தாங்கு அணைஇச்
               சின்னச் சோலை என்னும் மலைமிசைப்
     105        பன்னல் கேள்வி பண்வரப் பாடிட

 
 

              எண்ணிய கருமத்து இடையூறு இன்மை
              திண்ணிதின் கேட்டுத் தெளிந்தனர் ஆகி
              ஆனா அன்பொடு மேனாள் அன்றி
              வழிவழி வந்த கழிபெருங் காதல்
     110       பகைஅடு படைநரைத் தொகையவள் காண்புழி
              நூல்திறம் முற்றி ஆற்றுளி பிழையாது
              ஆற்றின் அறிய அத்துணை உண்மையின்
              ஊறுஇன்று இனியென உவகையில் கழுமிக்

 
 

              கரப்பில் வண்மைப் பிரச்சோ தனன்தன்
     115        சினப்படை அழித்த செம்மல் ஆளர்க்குக்
              கனப்படை காக்கைத் தொகைஎனக் கருதும்
              அத்திறத்து ஒன்றி எத்திறத்து ஆனும்
              குவளை உண்கண் இவளொடு புணர்ந்த
              காலை அல்லது கோலக் குருசில்
     120       புலம்பின் தீரான் ஆதலின் பொருபடை
               கலங்கவாட் டுதல்எனக் கருத்திடை வலித்து

 
 

               மலையின் இழிந்து விலைவரம்பு அறியா
               அருவிலை நன்மணி போத்தந்து அவ்வழிப்
               பெருவிலைப் பண்டம் பெய்வது புரிந்து
     125        செழுமணிக் காரர் குழுவினுள் காட்டி

 
 

               உறுவிலை கொண்டு பெறுவிலை பிழையா
               வெண்பூந் துகிலுஞ் செம்பூங் கச்சும்
               சுரிகையும் வாளும் உருவொடு புணர்ந்த
               அணியினர் ஆகிப் பணிசெயற்கு உரிய
     130        இளையரை ஒற்றித் தளைபிணி உறீஇப்

 
 

               பல்உறைப் பையின் உள்அறை தோறும்
               நாகத்து அல்லியும் நயந்ததக் கோலமும்
               வாசப் பளிதமுஞ் சோணப் பூவும்
               குங்குமக் குற்றியுங் கொழுங்கால் கொட்டமும்
     135        ஒண்காழ்த் துருக்கமும் ஒளிநா குணமும்
               காழகில் நூறுங் கட்சா லேகமும்
               கோழிரு வேரியும் பேர்இல வங்கமும்
               அந்தண் தகரமும் அரக்கும் அகிலும்
               சந்தனக் குறையொடு சாந்திற்கு உரியவை
     140        பிறவும் ஒருவா நிறைய அடக்கி

 
 

               முதிர்பழம் மிளகும் எதிர்வது திகழ்ந்த
               மஞ்சளும் இஞ்சியுஞ் செஞ்சிறு கடுகும்
               தலைப்பெருங் காயமும் நலத்தகு சிறப்பின்
               சீரகத்து அரிசியும் ஏலமும் ஏனைக்
     145        காயமும் எல்லாம் ஆய்வனர் அடக்கி

 
 

               அஞ்சன மனோசிலை அணிஅரி தாரம்
               துத்த மாஞ்சி யத்தவத் திரதம்
               திப்பிலி இந்துப்பு ஒப்புமுறை அமைத்துத்
               தாழி மேதை தவாத துவர்ச்சிகை
     150        வண்ணிகை வங்கப் பாவையோடு இன்ன
               மருத்துறுப்பு எல்லாம் ஒருப்படுத்து அடக்கி

 
 

               இலைச்சினை ஒற்றிய தலைச்சுமைச் சரக்கினர்
               நானம் மண்ணிய நீல்நிறக் குஞ்சியர்
               மணிநிறக் குவளை அணிமலர் செரீஇ
     155        யாப்புற அடக்கிய வாக்கமை சிகையினர்
               மல்லிகை இரீஇ வல்லோர் புணர்ந்த
               செம்பொன் மாத்திரை செரீஇய காதினர்
               அங்கதிர்ச் சுடர்மணி அணிபெற விரீஇ
               மாசின்று இலங்கு மோதிர விரலினர்
     160        வாச நறும்பொடி திமிர்ந்த மார்பினர்

 
 

               மகரிகை நிறைய வெகிர்முக மாக்கிப்
               பாடி மகளிர் விழையுஞ் சேடொளிப்
               பத்திக் கடிப்பும் பவழத் திரியும்
               முத்து வடமும் முழுமணிக் காசும்
     165        பன்மணித் தாலியும் மென்முலைக் கச்சும்
               உத்திப் பூணும் உளப்படப் பிறவும்
               சித்திரக் கிழியின் வித்தக மாகத்
               தோன்றத் தூக்கி ஆங்கவை அமைத்து
               நாற்றிய கையர் ஏற்றிய கோலமொடு

 
 

     170        நுரைவிரித்து அன்ன நுண்ணூல் கலிங்கம்
               அரைவிரித்து அசைத்த அம்பூங் கச்சொடு
               போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத்து அசைஇப்
               பொன்தொடி நிறைக்கோல் பற்றிய கையினர்
               கழலும் கச்சும் கலிங்கமும் மற்றவர்
     175        விழைவன அறிந்து வேறுவேறு அடக்கிக

 
 

               காட்சிமுந் துறுத்த மாட்சியர் ஆகிப்
               படைத்திற மன்னர் பாடி சார்ந்து
               விடைப்பேர் அமைச்சன் மேனாள் போக்கிய
               அறிவொடு புணர்ந்த இசைச்சனும் அவ்வழிக்
     180        குறிவயின் பிழையாது குதிரையொடு தோன்றலும்  

 
 

               அதிராத் தோழனை அவணே ஒழித்துக்
               குதிரை யாவன கொண்டுவிலை பகரிய
               வழுவில் சூழ்ச்சி வயந்தக குமரனைக்
               குழுவினோர் கட்குத் தலைஎனக் கூறி
     185        வெம்முரண் வென்றியொடுமேல்வந்து இறுத்த
               ஒன்னார் ஆடற்கு ஒருப்பாடு எய்தி

 
 

               வழக்கொடு புணர்ந்த வாசி வாணிகம்
               உழப்பே மற்றிவன் ஒன்பதிற்று ஆட்டையன்
               மண்டமர்த் தானை மகத மன்னனும்
     190       பண்டையன் போலான் ஆதலின் படையொடு
               தொன்னகர் வரைப்பகம் எந்நக ராக்க
               இருந்தனம் வலித்தனம் யாமெனப் பலவும்
               பொக்கம் உடையவை பொருந்தக் கூறிப்
               பகைகொள் மன்னன் அகநகர் வரைப்பின்
     195       யாவர் ஆயினும் அறிந்துவந்து அடைவது
               காணுங் காலைக் கருமம் நமக்கெனக்
               கணங்கொள் மன்னரும் இணங்குவனர் ஆகிப்

 
 

               பெரும்பரி சாரம் ஒருங்குடன் அருளி
               அற்றம் அவர்மாட்டு ஒற்றினர் ஆகி
     200       அருத்தம் அருங்கலம் நிரைத்தனர் தந்திட்டு
               இன்றைக் கொண்டும் இவண்இ ராமின்என்று
               ஒன்றிய காதலோடு உள்நெகிழ்ந்து உரைப

 
 

               வத்தவர் இறைவனொடு மொய்த்திறை கொண்டு
               பாடியுள் தமக்கிடம் பாற்படுத்து அமைத்து
     205       வீட்டின் தளவும் விறற்படை வீரமும்
               கூட்ட மன்னர் குறித்தவும் பிறவும்
               இருளும் பகலும் மருவினர் ஆராய்ந்து
               அருந்திற லாளர் ஒருங்குஉயிர் உண்ணும்
               கூற்றத்து அன்ன ஆற்றலர் ஆகி

 
 

     210       மண்டிலம் மறைந்த மயங்குஇருள் யாமத்து
               எண்திசை மருங்கினும் இன்னுழி எறிதுமென்று
               அறியச் சூழ்ந்த குறியினர் ஆகி

 
 

               நூலில் பரந்த கோல வீதியுள்
               படைநகர் வரைப்பகம் பறைக்கண் நெருக்கிப்
     215       பாடி காவல ரோடியாண்டு எறிந்து
               புறக்காப்பு அமைத்துத் தலைக்காப் பிருக்கும்
               வல்வில் இளையர்க்கு எல்லை தோறும்
               காப்புநன்கு இகழன்மின் கண்படை உறந்தென்று
               யாப்புறக் கூறி அடங்கிய பொழுதில்

 
 

     220       கலங்கத் தாக்கலின் மெலிந்தது ஆகி
               உடையினும் உடையா தாயினும் யாவரும்
               அடையும் தானம் அறியக் கூறி
               நாற்பால் வகுத்து மேற்பால் அமைத்துக்
               காவலன் தன்னையுங் காவலுள் நிறீஇப்

 
 

     225       பொற்புடைப் புரவி பொலிய ஏறி
               நற்படை நலியா நன்மையொடு பொலிந்த
               சாலிகைக்கு அவயங் கோல மாகப்
               புக்க மெய்யினர் பூந்தார் மார்பிற்
               தாளாண் கடுந்திறல் விரிசிகன் வாழ்கென
     230       மேலாள் மல்லன் பாடி காத்த
               நீலக் கச்சை நிரைகழல் மறவரை
               வேலில் சாய்த்துங் கோல மான்தேர்

 
 

               அடவி வாழ்கென ஆர்த்தனர் உராஅய்த்
               தடவரை மார்பின் தளராச் செங்கோல்
     235       மிலைச்சன் வாழ்கெனத் தலைக்காப்பு இருந்த
               தண்ட மள்ளரைத் தபுத்துஉயிர் உண்டும

 
 

               கொண்ட வார்ப்பொடு கூட எலிச்செவி
               பண்டரும் பல்லியம் பாற்படத் துவைத்தும்

 
 

               விறல்வே சாலி பாடி குறுகி
     240       அடலருஞ் சீற்றத்து அரசுபல கடந்த
               விடலரும் பைந்தார் வேந்தருள் வேந்தன்
               சங்கரன் வாழ்கெனத் தங்கலர் எறிந்தும்

 
 

               வத்தவன் கொண்ட மாமுரசு இயக்கி
               அயிலில் புனைந்த வெயில்புரை ஒள்வாள்
     245       உரீஇய கையர் ஆகி ஒரீஇக்
               காவல் மறவரைக் கண்படை அகத்தே
               வீழ நூறி வேழந் தொலைச்சி
               மலைஎனக் கவிழ மாமறித்து இடாஅக்
               கொலைவினைப் படைமாக் கொடிஅணி நெடுந்தேர்
     250       வத்தவன் மறவர் மொய்த்தனர் எறியக

 
 

               கடுவளி உற்ற கடலின் உராஅய்
               அடலரும் பெரும்படை ஆர்ப்பொடு தொடங்கித்
               தம்முள் தாக்கிக் கைம்மயக்கு எய்தி
               மதக்களி யானை வத்தவன் வாழ்கஎன்று
     255       உரைப்ப மற்றவர் அறிந்தனர் ஆகி

 
 

               எம்வயின் எம்வயின் எண்ணினர் கோளெனத்
               தம்வயின் தம்முளுந் தெளியார் ஆகிப்
               அருங்கலம் பட்டுழிக் கிடப்ப
               நீடிருள் அகத்து நீங்குதல் பொருளெனச்
     260       செவிசெவி அறியாச் செயலினர் ஆகித்
               தவிர்வில் வேகமொடு தலைவந்து இறுத்த
               கடுந்தொழில் மன்னர் உடைந்தனர் ஓடி
               அடைந்தனர் மாதோ அரணமை மலையென். 

                                            17. இரவு எழுந்தது முற்றிற்று