| 17. 
 இரவுஎழுந்தது   | 
 
 | இதன்கண் மகத மன்னனாகிய 
 தருசகனோடு போர் செய்ய வந்த பகை மன்னராகிய விரிசிகன் முதலிய எண்மரின் வரலாறும், 
 அம் மன்னர் போருக்கு எழுதலும், தருசகன் செயலும், அயிராபதி உதயணனிடம் கூறலும், 
 உருமண்ணுவாவின் செயலும், தோழர் செயலும், மணப் பொருள்களின் வகையும், உண் 
 பொருள்களும், மருந்திற்குரிய பொருளும், மகளிர்க்குரிய பொருளும், பகை மன்னர் செயலும், 
 உதயணன் முதலியோர் செயலும், உதயணன் மறவர் இரவில் போர் புரிதலும் பிறவும் 
 கூறப்படும். | 
 
 |  |                 
 	செய்வது தெரியும் சித்தையோடு இருந்துழித்   | உரை
 | 
 
 |  | 
 
 |  |                 
 தகைமலர்ப் பைந்தார்த் தருசகன் 
 தன்னொடு்பகைகொண்டு ஒழுகும் பற்றாக் 
 கொடுந்தொழில்
 விடுகணை வில்தொழில் விரிசிகன் உள்ளிட்டு
 5          அலருந் 
 தோற்றத்து அரிமான் 
 அன்னவர்
 மத்தநல் யானை மதிய 
 வெண்குடை
 வித்தக நறுந்தார் விலங்குநடைப் 
 புரவி்
 அத்தின புரத்தின் அரசருள் 
 அரிமான்
 வேண்டியது முடிக்கும் வென்றித் தானை
 10          ஈண்டிய ஆற்றல் 
 எலிச்செவி அரசனும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                 
 	காண்டற்கு ஆகாக் கடன்மருள் 
 பெரும்படைத்தீண்டற்கு 
 ஆகாத் திருந்துமதில் 
 அணிந்த
 வாரண வாசி வளம்தந்து 
 ஓம்பும்
 ஏரணி நெடுங்குடை இறைமீக் கூரிய
 15          படைநவில் 
 தடக்கைப் பைந்தார்க் 
 கருங்கழல்
 அடவி அரசெனும் ஆண்தகை ஒருவனும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                  மலைத்தொகை 
 அன்ன மையணி 
 யானைஇலைத்தார் மார்பின் ஏரணி 
 தடக்கைப்
 பொருந்தா மன்னரைப் புறக்குடை கண்ட
 20          அருந்திறல் 
 சூழ்ச்சி அடல்வேல் 
 தானை
 அயிர்த்துணைப் 
 பல்படை அயோத்தி அரசனும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                  
	மாற்றோர்த் தொலைத்த கூற்றுஉறழ் கொடுந்தொழில்மிக்குயர் வென்றியொடு வேந்தரை அகப்படுத்து
 அக்களம் வேட்ட அடல்அருஞ் சீற்றத்துப்
 25          புனைமதில் ஓங்கிய 
	போதன புரத்துஇறை
 மிலைச்சன் என்னும் நலத்தகை ஒருவனும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                  சீற்றத் 
 துப்பின் செருவெனப் 
 புகலும்ஆற்றல் சான்ற அரசருள் 
 அரிமாத்
 துன்னரும் நீள்மதில் துவரா பதிக்குஇறை
 30          மன்னரை முருக்கிய 
 மதிய 
 வெண்குடைப்
 பொங்குமலர் நறுந்தார்ச் சங்கர அரசனும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                  
 மல்லன் என்னும் வெல்போர் 
 விடலையும்தானை மன்னரை மானம் வாட்டிய
 ஊன்இவர் நெடுவேல் உருவக் கழற்கால்
 35          பொங்குமயிர் 
 மான்தேர்த் திருநகர்க்கு 
 இறைவன்
 வெந்திறல் செய்கை வேசா 
 லியும்என
 அடல்தகை மன்னர் படைத்தொகை 
 கூட்டிச்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                  
 சங்க மாகி வெங்கணை 
 வீக்கமொடுபகைநமக் காகிப் பணித்துத் திறைகொளும்
 40          மகத மன்னனை 
 மதுகை 
 வாட்டிப்
 புரிபல இயைந்த ஒருபெருங் 
 கயிற்றினில்
 பெருவலி வேழம் பிணித்திசின் 
 ஆஅங்கு
 இசைந்த பொழுதே இடங்கெட 
 மேற்சென்று
 அருந்திறன் மன்னனை நெருங்கினம் ஆகித
 | உரை | 
 
 |  | 
 
 |  |      
 45          தன்னுடை 
 யானையும் புரவியும் 
 தன்துணைப்பொன்இயல் பாவையும் புனைமணித் 
 தேரும்
 அணிகதிர் முத்தமும் அருங்கலம் 
 ஆதியும்
 பணிமொழிச் 
 செவ்வாய்க் கணிகை 
 மகளிரொடு
 பிறவும் 
 இன்னவை முறைமையில் தரினும்
 50          இருங்கண் 
 மாதிரத்து ஒருங்குகண் 
 கூடிய
 கருமுகில் 
 கிழிக்கும் கடுவளி 
 போலப்
 பொருமுரண் மன்னர் புணர்ப்புஇடைப் 
 பிரிக்கும்
 அறைபோக்கு 
 அமைச்சின் முறைபோக்கு எண்ணினும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                 
 அங்கண் ஞாலத்து அழகுவீற்று இருந்த55         கொங்கலர் கோதை 
 எங்கையைப் 
 பொருளொடு
 தனக்கே தருகுவன் சினத்தின் 
 நீங்கி
 ஊனங் கொள்ளாது தான்அவள் 
 பெறுகெனத்
 தேறும் மாந்தரை வேறுஅவண் 
 விடுத்துத்
 தனித்தர 
 ஒருவரைத் தன்பால் தாழ்ப்பினும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |      60          
 என்ன ஆயினு அன்னது 
 விழையாதுஒடுங்கி இருந்தே உன்னியது 
 முடிக்கும்
 கொடுங்கால் கொக்கின் கோள்இன 
 மாகிச்
 சாய்ப்பிட மாகப் போர்ப்படை 
 பரப்பி
 வலிகெழு வேந்தனை வணக்குதும் என்னத்
 65         தெளிவுசெய்து எழுந்து 
 திருமலி 
 நன்னாட்டு
 எல்லை இகந்து வல்லை 
 எழுந்து
 கடுந்தொழில் மேவலொடு உடங்குவந்து இறுத்தலின
 | உரை | 
 
 |  | 
 
 |  |                
 அகநகர் வரைப்பின் அரசன் 
 அறியப்புறநகர் எல்லாம் பூசலில் துவன்றி
 70         அச்ச நிலைமை அரசற்கு 
 இசைத்தலின்
 மெச்சா 
 மன்னரை மெலிவது 
 நாடித்
 தருசகன் தமரொடு தெருமரல் 
 எய்தி
 மாணகன் கண்டுஇந் நிலைமை கூறென்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                
 ஆணம் நெஞ்சத்து அயிரா பதிவந்து75         அனங்கத் தானம் 
 புகுந்தவன் 
 கண்டு
 கூப்பிய கையினள் கோயிலுள் 
 பட்டதும்
 கோல்தொடி 
 மாதர் கொள்கையும் கூற
 | உரை | 
 
 |  | 
 
 |  |                உகவை 
 உள்ளமொடு பகைஇவண் 
 இயைதல்கருமம் 
 நமக்கென உருமண் ணுவாஉரைத்து
 80         இன்னது என்னான் 
 பொன்ஏர் 
 தோழிக்கு
 இருமதி நாளகத்து இலங்கிழை 
 மாதர்
 பருவரல் வெந்நோய் பசப்பொடு 
 நீக்குவென்
 என்றனன் னென்பதைச் சென்றனை 
 கூறிக்
 கவற்சி நீக்கெனப் பெயர்த்துஅவண் போக்கிக்
      85         
 கடுத்த மன்னரைக் கலங்கத் 
 தாக்கிஉடைத்த பின்றை அல்லது 
 நங்கையை
 அடுத்தல் செல்லான் அரசன் 
 ஆதலின்
 அற்றம் 
 நோக்கி அவர்படை 
 அணுகி
 ஒற்றி மேல்வீழ்ந்து உடைக்கும் உபாயமா
 90         வாணிக வுருவின மாகி 
 மற்றவர்
 ஆணத் தானை அகம்புக்கு 
 ஆராய்ந்து
 இரவிடை எறிந்து பொருபடை ஓட்டிக்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                 
 கேட்போர்க்கு எல்லாம் வாள்போர் 
 வலித்தொழில்வளமிகு தானை வத்தவர்க்கு இறையைக்
 95         கிளைமை கூறி உளமை 
 கொளீஇக்
 காவினுள் 
 நிகழ்ந்தது காவலற்கு 
 உரைப்பின்
 மன்றல் கருதி வந்த 
 மன்னற்கு
 ஒன்றுபு 
 கொடாமை உண்டு மாகும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                 
 ஒன்றினன் ஆயின் பொன்றுஞ் சின்முலைத்100        தெரியிழை மாதர் 
 உரிமையின் 
 நோன்தாள்
 அன்னது 
 ஆதல் ஒருதலை 
 அதனால்
 பின்னரும் 
 அதற்குப் பிறபிற 
 நாடுதும்
 இன்னே 
 எழுகென்று எழுந்தாங்கு 
 அணைஇச்
 சின்னச் 
 சோலை என்னும் மலைமிசைப்
 105        பன்னல் கேள்வி பண்வரப் 
 பாடிட
 | உரை | 
 
 |  | 
 
 |  |               எண்ணிய 
 கருமத்து இடையூறு 
 இன்மைதிண்ணிதின் 
 கேட்டுத் தெளிந்தனர் 
 ஆகி
 ஆனா 
 அன்பொடு மேனாள் 
 அன்றி
 வழிவழி 
 வந்த கழிபெருங் காதல்
 110       பகைஅடு படைநரைத் தொகையவள் 
 காண்புழி
 நூல்திறம் 
 முற்றி ஆற்றுளி 
 பிழையாது
 ஆற்றின் அறிய அத்துணை 
 உண்மையின்
 ஊறுஇன்று இனியென உவகையில் கழுமிக்
 | உரை | 
 
 |  | 
 
 |  |               கரப்பில் 
 வண்மைப் பிரச்சோ தனன்தன்115        சினப்படை அழித்த செம்மல் 
 ஆளர்க்குக்
 கனப்படை 
 காக்கைத் தொகைஎனக் 
 கருதும்
 அத்திறத்து ஒன்றி எத்திறத்து 
 ஆனும்
 குவளை உண்கண் இவளொடு 
 புணர்ந்த
 காலை 
 அல்லது கோலக் குருசில்
 120       புலம்பின் தீரான் ஆதலின் 
 பொருபடை
 கலங்கவாட் 
 டுதல்எனக் கருத்திடை வலித்து
 | உரை | 
 
 |  | 
 
 |  |                
 மலையின் இழிந்து விலைவரம்பு 
 அறியாஅருவிலை 
 நன்மணி போத்தந்து 
 அவ்வழிப்
 பெருவிலைப் 
 பண்டம் பெய்வது புரிந்து
 125        செழுமணிக் காரர் குழுவினுள் 
 காட்டி
 | உரை | 
 
 |  | 
 
 |  |                
 உறுவிலை கொண்டு பெறுவிலை 
 பிழையாவெண்பூந் 
 துகிலுஞ் செம்பூங் 
 கச்சும்
 சுரிகையும் வாளும் உருவொடு 
 புணர்ந்த
 அணியினர் ஆகிப் பணிசெயற்கு உரிய
 130        இளையரை ஒற்றித் தளைபிணி 
 உறீஇப்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                பல்உறைப் 
 பையின் உள்அறை 
 தோறும்நாகத்து 
 அல்லியும் நயந்ததக் 
 கோலமும்
 வாசப் 
 பளிதமுஞ் சோணப் 
 பூவும்
 குங்குமக் குற்றியுங் கொழுங்கால் கொட்டமும்
 135        ஒண்காழ்த் துருக்கமும் 
 ஒளிநா 
 குணமும்
 காழகில் நூறுங் கட்சா 
 லேகமும்
 கோழிரு வேரியும் பேர்இல 
 வங்கமும்
 அந்தண் 
 தகரமும் அரக்கும் 
 அகிலும்
 சந்தனக் 
 குறையொடு சாந்திற்கு உரியவை
 140        பிறவும் ஒருவா நிறைய 
 அடக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  |                
 முதிர்பழம் மிளகும் எதிர்வது 
 திகழ்ந்தமஞ்சளும் 
 இஞ்சியுஞ் செஞ்சிறு 
 கடுகும்
 தலைப்பெருங் 
 காயமும் நலத்தகு 
 சிறப்பின்
 சீரகத்து அரிசியும் ஏலமும் ஏனைக்
 145        காயமும் எல்லாம் ஆய்வனர் 
 அடக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  |                அஞ்சன 
 மனோசிலை அணிஅரி 
 தாரம்துத்த மாஞ்சி யத்தவத் 
 திரதம்
 திப்பிலி 
 இந்துப்பு ஒப்புமுறை 
 அமைத்துத்
 தாழி மேதை தவாத துவர்ச்சிகை
 150        வண்ணிகை வங்கப் பாவையோடு 
 இன்ன
 மருத்துறுப்பு எல்லாம் ஒருப்படுத்து அடக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
    இலைச்சினை ஒற்றிய தலைச்சுமைச் 
 சரக்கினர்நானம் மண்ணிய நீல்நிறக் 
 குஞ்சியர்
 மணிநிறக் குவளை அணிமலர் செரீஇ
 155        யாப்புற அடக்கிய வாக்கமை 
 சிகையினர்
 மல்லிகை இரீஇ வல்லோர் 
 புணர்ந்த
 செம்பொன் மாத்திரை செரீஇய 
 காதினர்
 அங்கதிர்ச் 
 சுடர்மணி அணிபெற 
 விரீஇ
 மாசின்று இலங்கு மோதிர விரலினர்
 160        வாச நறும்பொடி திமிர்ந்த 
 மார்பினர்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                
 மகரிகை நிறைய வெகிர்முக 
 மாக்கிப்பாடி மகளிர் விழையுஞ் 
 சேடொளிப்
 பத்திக் கடிப்பும் பவழத் 
 திரியும்
 முத்து 
 வடமும் முழுமணிக் காசும்
 165        பன்மணித் தாலியும் 
 மென்முலைக் 
 கச்சும்
 உத்திப் பூணும் உளப்படப் 
 பிறவும்
 சித்திரக் கிழியின் வித்தக 
 மாகத்
 தோன்றத் தூக்கி ஆங்கவை 
 அமைத்து
 நாற்றிய கையர் ஏற்றிய கோலமொடு
 | உரை | 
 
 |  | 
 
 |  |      
 170        நுரைவிரித்து அன்ன நுண்ணூல் 
 கலிங்கம்அரைவிரித்து அசைத்த அம்பூங் 
 கச்சொடு
 போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத்து 
 அசைஇப்
 பொன்தொடி நிறைக்கோல் பற்றிய 
 கையினர்
 கழலும் கச்சும் கலிங்கமும் 
 மற்றவர்
 175        விழைவன 
 அறிந்து வேறுவேறு அடக்கிக
 | உரை | 
 
 |  | 
 
 |  |                
 காட்சிமுந் துறுத்த மாட்சியர் 
 ஆகிப்படைத்திற 
 மன்னர் பாடி 
 சார்ந்து
 விடைப்பேர் அமைச்சன் மேனாள் 
 போக்கிய
 அறிவொடு புணர்ந்த இசைச்சனும் 
 அவ்வழிக்
 180        குறிவயின் 
 பிழையாது குதிரையொடு தோன்றலும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                அதிராத் 
 தோழனை அவணே 
 ஒழித்துக்குதிரை யாவன கொண்டுவிலை 
 பகரிய
 வழுவில் 
 சூழ்ச்சி வயந்தக 
 குமரனைக்
 குழுவினோர் 
 கட்குத் தலைஎனக் கூறி
 185        வெம்முரண் 
 வென்றியொடுமேல்வந்து 
 இறுத்த
 ஒன்னார் ஆடற்கு ஒருப்பாடு எய்தி
 | உரை | 
 
 |  | 
 
 |  |                
 வழக்கொடு புணர்ந்த வாசி 
 வாணிகம்உழப்பே மற்றிவன் ஒன்பதிற்று 
 ஆட்டையன்
 மண்டமர்த் தானை மகத மன்னனும்
 190       பண்டையன் போலான் ஆதலின் 
 படையொடு
 தொன்னகர் வரைப்பகம் எந்நக 
 ராக்க
 இருந்தனம் வலித்தனம் யாமெனப் பலவும்
 பொக்கம் உடையவை பொருந்தக் 
 கூறிப்
 பகைகொள் 
 மன்னன் அகநகர் வரைப்பின்
 195       யாவர் ஆயினும் அறிந்துவந்து 
 அடைவது
 காணுங் காலைக் கருமம் 
 நமக்கெனக்
 கணங்கொள் மன்னரும் இணங்குவனர் ஆகிப்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                
 பெரும்பரி சாரம் ஒருங்குடன் 
 அருளிஅற்றம் அவர்மாட்டு ஒற்றினர் ஆகி
 200       அருத்தம் அருங்கலம் நிரைத்தனர் 
 தந்திட்டு
 இன்றைக் 
 கொண்டும் இவண்இ 
 ராமின்என்று
 ஒன்றிய காதலோடு உள்நெகிழ்ந்து உரைப
 | உரை | 
 
 |  | 
 
 |  |                
 வத்தவர் இறைவனொடு மொய்த்திறை 
 கொண்டுபாடியுள் தமக்கிடம் பாற்படுத்து அமைத்து
 205       வீட்டின் தளவும் விறற்படை 
 வீரமும்
 கூட்ட மன்னர் குறித்தவும் 
 பிறவும்
 இருளும் பகலும் மருவினர் 
 ஆராய்ந்து
 அருந்திற லாளர் ஒருங்குஉயிர் 
 உண்ணும்
 கூற்றத்து அன்ன ஆற்றலர் ஆகி
 | உரை | 
 
 |  | 
 
 |  |      
 210       மண்டிலம் மறைந்த மயங்குஇருள் 
 யாமத்துஎண்திசை மருங்கினும் இன்னுழி 
 எறிதுமென்று
 அறியச் சூழ்ந்த குறியினர் ஆகி
 | உரை | 
 
 |  | 
 
 |  |                நூலில் 
 பரந்த கோல 
 வீதியுள்படைநகர் வரைப்பகம் பறைக்கண் நெருக்கிப்
 215       பாடி காவல ரோடியாண்டு 
 எறிந்து
 புறக்காப்பு அமைத்துத் தலைக்காப் 
 பிருக்கும்
 வல்வில் இளையர்க்கு எல்லை 
 தோறும்
 காப்புநன்கு இகழன்மின் கண்படை 
 உறந்தென்று
 யாப்புறக் கூறி அடங்கிய பொழுதில்
 | உரை | 
 
 |  | 
 
 |  |      
 220       கலங்கத் தாக்கலின் மெலிந்தது 
 ஆகிஉடையினும் 
 உடையா தாயினும் 
 யாவரும்
 அடையும் தானம் அறியக் 
 கூறி
 நாற்பால் வகுத்து மேற்பால் 
 அமைத்துக்
 காவலன் 
 தன்னையுங் காவலுள் நிறீஇப்
 | உரை | 
 
 |  | 
 
 |  |      
 225       பொற்புடைப் புரவி பொலிய 
 ஏறிநற்படை 
 நலியா நன்மையொடு 
 பொலிந்த
 சாலிகைக்கு 
 அவயங் கோல 
 மாகப்
 புக்க 
 மெய்யினர் பூந்தார் 
 மார்பிற்
 தாளாண் 
 கடுந்திறல் விரிசிகன் வாழ்கென
 230       மேலாள் மல்லன் பாடி 
 காத்த
 நீலக் 
 கச்சை நிரைகழல் 
 மறவரை
 வேலில் 
 சாய்த்துங் கோல மான்தேர்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                அடவி 
 வாழ்கென ஆர்த்தனர் 
 உராஅய்த்தடவரை 
 மார்பின் தளராச் செங்கோல்
 235       மிலைச்சன் வாழ்கெனத் 
 தலைக்காப்பு 
 இருந்த
 தண்ட 
 மள்ளரைத் தபுத்துஉயிர் உண்டும
 | உரை | 
 
 |  | 
 
 |  |                கொண்ட வார்ப்பொடு கூட எலிச்செவிபண்டரும் பல்லியம் பாற்படத் துவைத்தும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                விறல்வே 
 சாலி பாடி 
 குறுகி240       
 அடலருஞ் சீற்றத்து அரசுபல 
 கடந்த
 விடலரும் 
 பைந்தார் வேந்தருள் 
 வேந்தன்
 சங்கரன் 
 வாழ்கெனத் தங்கலர் எறிந்தும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |                வத்தவன் 
 கொண்ட மாமுரசு 
 இயக்கிஅயிலில் 
 புனைந்த வெயில்புரை 
 ஒள்வாள்
 245       
 உரீஇய கையர் ஆகி 
 ஒரீஇக்
 காவல் 
 மறவரைக் கண்படை 
 அகத்தே
 வீழ 
 நூறி வேழந் 
 தொலைச்சி
 மலைஎனக் கவிழ மாமறித்து 
 இடாஅக்
 கொலைவினைப் படைமாக் கொடிஅணி நெடுந்தேர்
 250       வத்தவன் மறவர் மொய்த்தனர் எறியக
 | உரை | 
 
 |  | 
 
 |  |                
 கடுவளி உற்ற கடலின் 
 உராஅய்அடலரும் 
 பெரும்படை ஆர்ப்பொடு 
 தொடங்கித்
 தம்முள் 
 தாக்கிக் கைம்மயக்கு 
 எய்தி
 மதக்களி யானை வத்தவன் வாழ்கஎன்று
 255       உரைப்ப மற்றவர் அறிந்தனர் ஆகி
 | உரை | 
 
 |  | 
 
 |  |                எம்வயின் 
 எம்வயின் எண்ணினர் 
 கோளெனத்தம்வயின் 
 தம்முளுந் தெளியார் 
 ஆகிப்
 அருங்கலம் 
 பட்டுழிக் 
 கிடப்ப
 நீடிருள் 
 அகத்து நீங்குதல் 
 பொருளெனச்
 260       செவிசெவி 
 அறியாச் செயலினர் 
 ஆகித்
 தவிர்வில் 
 வேகமொடு தலைவந்து 
 இறுத்த
 கடுந்தொழில் 
 மன்னர் உடைந்தனர் 
 ஓடி
 அடைந்தனர் 
 மாதோ அரணமை மலையென்.
                                             
	17. இரவு எழுந்தது முற்றிற்று
 | உரை | 
 
 |  |  |  |