19. படை தலைக்கொண்டது

 

இதன்கண் தருசகன் செயலும், ஓடிய பகை மன்னர் மீண்டும் போர் செய்தற்குவரலும், அவர் மகதநாட்டுச் சோலை முதலியவற்றை அழித்தலும், அஃதறிந்த தருசகன் படை திரட்டலும், உதயணன் செயலும், தான் போர் செய்யச் செல்வதாகச் சொல்லி உதயணன் வயந்தகனைத் தருசகன்பால் விடுத்தலும், வயந்தகன் செயலும், தருசகன் செயலும் கேகயத்தரசன் எண்ணுதலும், தெரிவித்தலும், தருசகன் எண்ணுதலும், கேகய மன்னனைத் தருசகன் போருக்கு விடுத்தலும், தருசகன் வயந்தகனுக்குக் கூறலும், அவனை விடுதலும், யானை, குதிரை முதலியவற்றின் வருணனையும், படை எழுச்சியும், உதயணன் புறப்பாடும், பகைவர் செயலும் பிறவும் கூறப்படும்.
 
 

              வத்தவற் பெற்ற வலிப்பின னாகி
              மத்த யானை மகத மன்னனும்
              அருமுர ணடுதொழி லிளமைய னிவனொடு
              தரும சாத்திரந் தலைக்கொள் கென்று
       5      பூசனை வழக்கொடு புரையவை நடுவண்
              வாசனைக் கேள்வி வழிமுறை தொடங்கலிற்

 
 

              பரந்த மன்னர் நிரந்துகண் கூடிக்
             கற்ற நூலிற் செற்ற வேந்தன்
              வேறுபடக் காட்டிக் கூறுபட வறுப்பத்
       10      தொலைதல் காரண மாகவது துணிந்த
              நிலையி னெஞ்சினர் நும்முள் யாரெனத்
              தலைக்கூட் டமைத்துத் தம்முள் வினவத்
              தெய்வ மிடைநிலை யாக வதன்றிறம்
              ஐயந் தீர வறிவம் யாமெனத்
       15      தம்பாற் றெளிந்த தன்மைய ராகி

 
 

              வெம்போர் நிகழ்ச்சி யென்கொன்மற் றிதுவென
              வருபடை யொற்றரை வழுக்கி மற்றவன்
              பொருபடை போதரப் புணர்த்த தாகுமென்
              றதுவும் பிறவு மாய்வுழிச் செவ்விதிற்

 
 

              றதுவும் பிறவு மாய்வுழிச் செவ்விதிற்
       20     பேணி வாழும் பெற்றிய ராகி
              வாணிக வுருவொடு வந்திடைப் புகுந்த
              வீர ராகுவோர் வேறுதிரிந் தொடுங்கி
              ஆரிருண் மறைஇ யருஞ்சின மழித்தோர்
              போந்தில ராதலிற் பொருத்த முடைத்தென

 
        25      வேந்தனில் வந்தோர் வினவுதல் வேண்டா
              அமர்மேற் கொண்டோர் யாரே யாயினும்
              தமராக் கருதித் தம்வயிற் றெளிதல்
              ஏல்வன் றென்ன மேலவை கிளவா
              இளிவஞ்சு முனிவரே யாயினு மற்றினித்

      30      தெளிவஞ்சு தகைத்தெனத் தெளிவுமுந் துறீஇ
              வஞ்சினஞ் செய்து வெஞ்சினம் பெருகக்
              கெடுத்த லூற்றமொடு கடுத்தன ராகிப்
              பெயர்த்தும் பெரும்படை தொகுத்தனர் கொண்டு

 
                நன்னாடு நடுங்க நண்ணித் துன்னிய
      35      ஈர நெஞ்சத் தார்வ லாளர்
              பாரந் தாங்கும் பழமை போல 
              இலைக்கொடிச் செல்வமொடு தலைப்பரந் தோங்கிய
              கணைக்கா லிகணையுங் கமுகும் வாழையும்
              சினப்பெரு மாவும் பணைக்காற் பலாவுங்
      40      கொழுமுதற் றெங்கொடு முழுமுத றொலைச்சிக்
              கழனி விளைநெற் கனையெரி கொளீஇப்
              பழன நன்னாடு படியழித் துராஅய்ச்
              செயிர்ப்பிற் சிறந்தவர் பெயர்ச்சி நோக்கிப்              
 
                படையொற் றாளர் கடுகுபு குறுகிக்
      45      காவலற் கிசைத்துக் கண்டுகை கூப்பி
              வேக மன்னர் மீட்டும்வந் திறுத்த
              வெங்கட் செய்தொழி றன்கட் கூறலும்
              மறுநோய் மக்களி னாழ்ந்த மனத்தன்
              செறுவேல் வேந்தன் செய்வதை யறியான்
 
        50      கூட்டம் பெருக்கி மீட்டுவந் தனரெனின்
              ஆற்ற லெல்லா மளந்தபி னல்ல
              தூக்க மிலரெனத் தூக்க மின்றி
              மனத்தி னெண்ணி மற்றது கரந்து
              சினத்த நோக்கமொடு சீறுபு வெகுண்டு
      55      செருவுடை மன்னரைச் சென்றுமே னேருங்குதும்
              பொருபடை தொகுத்துப் போதுகென் றேவலின்
 
                விருத்தி காரரும் வேண்டியது பெறூஉம்
              உரத்தகை யாளரு மொருங்குவந் தீண்டுக
              செருச்செய வலித்தனன் செல்வன் சென்றெனத்
      60      தானை யணியத் தலைத்தா ளணியுள்
              யானை யேற்றி யணிமுர சறைதலும்
 
                வணங்கார் வணக்கிய வத்தவர் பெருமகன்
              நுணங்குபொரு ளமைச்சரொ டுணர்ந்தன னாகிக்
              கண்ணிய பொருட்குத் திண்ணியது தெரிய
      65      உறுப்போ ரன்ன வுள்பொரு ளமைச்சரும்
              மறப்போர் மன்னனு மாணவே றிருந்து
              செயற்படு கருமத் தியற்கை யிற்றெனப்
              பெயர்த்தும் வருபடை யழிப்பது வலித்து
              வயந்தக குமரற் கியைந்தது கூறும்
 
 

      70      மயங்கிதழ்ப் படலை மகதவற் கண்டு
              செருச்செய் தானைப் பிரச்சோ தனன்றன்
              பாவையை யிழந்து பரிவு முந்துறீஇச்
              சாவது துணிந்தியான் சேயிடைப் போந்தனென்
              மன்னுயிர் ஞாலத் தின்னுயி ரன்ன
      75      அடுத்த நண்புரைத் தெடுத்தனை யாகத்

 
                தன்மேல் வந்த தாக்கரும் பொருபடை
              என்மேற் கொண்டனெ னாகி முன்னே
              எறிந்தனெ னகற்றி யின்பம் பெருகச்
              சிறந்ததோர் செய்கை செய்தே னின்னும்
      80      மறிந்துவந் தனரே மாற்றோ ரென்ப
              தறிந்தென னதன்மாட் டவலம் வேண்டா
 
                 என்னி னாதற் கிசைகுவ தாயிற்
              பின்ன ரறிய பிறபொருள் வலித்தல்
              யான்சென் றிரியினஃ தறிகுந ரில்லைத்
      85      தான்சென் றுறுவழித் தளர்ந்த காலை
              மகத மன்னனை மலைந்துவென் றனமென
              மிகுதி மன்னர் மேல்வந்து நெருங்கின்
              என்னா மன்ன தின்னாத் தரூஉம்
              எடுத்துநிலை யரிதென வேதுக் காட்டி
      90      என்குறை யாக வொழிக வெழுச்சி
 
                தன்படை யெல்லாந் தருக வென்னொடும்
              அடற்றொழில் யானைப் படைத்தொழில் பயின்றோர்
              எனைவ ருளரவ ரனைவரும் யானும்
              ஏறுதற் கமைந்த விருங்கவுள் வேழமும்
      95       வீறுபெறப் பண்ணி விரைந்தன வருக
              தன்பாற் படைக்குத் தலைவ னாகியோர்
              வன்பார் மன்னன் வரினு நன்றெனக்
              கூறினன் மற்றெங் கோமக னென்றவற்
              றேறக் காட்டி மாறுமொழி கொண்டு
      100      விரைந்தனை வருகெனக் கரைந்தவற் போக்க
 
                வாயன் றாயினும் வந்துகண் ணுற்றோர்
              மேவ வுரைக்கும் மேதகு வாக்கியம்
              வல்ல னாகிய வயந்தக குமரன்
              செல்வன் றலைத்தாட் சென்றுகண் ணெய்தி
      105      இறைவன் மாற்றமுங் குறையுங் கூற
 
                மகதவ ரிறைவனுந் தமர்களைத் தரீஇநமக்
              குறுதி வேண்டு முதயண னுரையிது
              மறுமொழி யாதென மந்திர மாக்கள்
              யாதவன் வலித்த தப்பொரு ளறிதல்
      110       தீதன் றாதலிற் றெளிந்து செய்கென
              மறுத்தல் செல்லான் வாழி யவர்நிலை
              அழிக்கும் வாயி லறியுந் தானென
              ஒன்றின னுரைத்ததை யொன்றுவன னாகி
 
                அருஞ்சின யானையும் புரவியு மமைந்த
      115      இருஞ்சின விளையரும் வருகென வேவி
 
                வலிகெழு நோன்றாள் வத்தவன் வலித்ததும்
              கலிகெழு மைத்துனன் கருத்து நோக்கி
              முற்கிளை வேண்டுநர் மற்றவர்க் கியைந்த
              அற்றந் தீர்க்கினது பிற்பயம் பெருகும்
      120      அற்று மன்றிப் பற்றா மன்னர்
              மேல்வந் திறுப்ப வேல்பல படையொடு
              மாயா திருப்பிற் கிளையோ மற்றிவன்
              வேற்றா னெனவு மாற்றா னெனவும்
              போற்றா மன்னர் புறஞ்சொற் படுமெனக்
 
        125     கேகயத் தரசனுங் கிளந்துபல வெண்ணிக்
              காவல் வேந்தனைக் கண்டுகை கூப்பி
              வானோர் பெரும்படை வந்த தாயினும்
              யானே யமையு மடிக ளென்னை
              விடுத்தற் பாற்றென வெடுத்தவ னிசைப்பத்
 
        130     தந்தை பெருங்கிளை காரண மாக
              முந்து மப்படை முருங்கத் தாக்கி
              வந்த வேந்தன் வலித்ததுந் தங்கைக்குச்
              சென்ற குமரன் முந்தைக் கூறிய
              மாற்றமு மனத்தே யாற்றுளி புடைபெயர்ந்
      135      தொலிக்குங் கழற்கா லுதயண குமரன்
              வலிக்கும் பொருண்மேல் வலித்தன னாகித்
 
                தன்படைத் தலைவ னாக வெம்மொடே
              வன்படை யாளன் வருக வென்றனன்
              மாண்ட வத்தவ ராண்டகை யாதலின்
      140      நம்மேல் வந்த வெம்முரண் வீரர்
              தம்மேற் சென்று தருக்கற நூறுதல்
              வத்தவ ரிறைவனும் வலித்தன னவனோ
              டொத்தனை யாகி யுடன்றமர் செய்ய
              வல்லை யாயிற் செல்வது தீதன்
      145      றென்றவன் விடுப்ப நன்றென விரும்பி
              ஒட்டிய குமர னுள்ள நோக்கி
 
                 மட்டலர் பைந்தார் மகதவன் வயந்தகற்
              குற்ற நண்பி னுயிர்போ லுதயணற்
              கிற்றிது கூறுமதி யிளையோள் பொருட்டா
      150      வந்திவ ணிருந்த வெந்திறல் வீரன்
              தன்னொடு வந்து மன்னரை யோட்டிப்
              போதரத் துணிந்தன னேத மின்றி
              ஆகும் வாயி லெண்ணி யப்படை
              போக நூக்கல் பொருளெனக் கூறி
      155      மீட்டவற் போக்க வேட்பனன் விரும்பியவன்
 
                கூறிய மாற்றங் கோமான் றன்னொடு
              வீறியல மைச்சர் வேறாக் கேட்டுக்
             குறையின் வேண்டுங் கரும முறையிற்
              றானே முடிந்ததென் றானா வுவகையன்
      160     யானையும் புரவியு மமையப் பண்ணி
              மாண்வினைப் பொலிந்தோர் வருக மற்றோர்
              சேனை நாப்பட் சேருக வின்றெனப்
              பெயர்த்து மற்றவற் குரைத்தலிற் பெருமகன்
              களிற்றுப் பாகனை விளித்தன னிறீஇ
      165      அண்ணல் யானை பண்ணி வருகெனக்
 
                கண்ணார் தகைய கவுளிழி கடாத்தன
              மண்ணார் நுதலின மாசின் மருப்பின
              ஆற்ற லமைந்தன நீற்பாற் புறத்தன
              அமர்பண் டறிந்தன வச்ச மில்லன
      170      புகரில் வனப்பின போரிற் கொத்தன
              கோலங் கொளீஇச் சீலந் தேற்றின
              இருபாற் பக்கமு மெய்து மெறிந்தும்
              பொருவோர்ச் செகுக்கப் புன்படைக் கருவி
              அடக்குபு பண்ணித் துடக்குபு காட்டும்
      175      தோட்டி கொளீஇக் கூட்டுபு நிரைத்த
              வேல்வ லிளையர் கால்புடை காப்பக்
              கோயின் முற்றத் துய்த்தலின் வாய்மொழி
 
                கோயின் முற்றத் துய்த்தலின் வாய்மொழி
              உதயணன் றன்மாட் டுய்க்க விவற்றொடு
              பொருபடைக் குதவும் புரவியும் புரவியொடு
      180      செருவமர் மாந்தருஞ் செல்க விரைந்தென
              ஒன்னா ரோட்டிய வுதயணன் கோயிற்
              பொன்னார் முற்றம் புகுந்துடன் றுவன்ற
 
               அருந்திறல் யானை யமைந்தது நாடி
              இரும்பிடர்த் தலையிற் பெருந்தகை மேல்கொள
      185      உயர்ந்த வூக்கத் துருமண் ணுவாவும்
              வயந்தக குமரனும் வாய்மொழிந் தாய்ந்த
              உயர்ச்சி யுள்ளத் திசைச்சனு மேனைத்
              தடவரை மார்பி னிடவக னுளப்பட
              எந்நூற் கண்ணு மிடம்பா டுடைய
      190      முந்நூற் றறுவர் மொய்த்தொருங் கீண்டி
              வலம்படு நமக்கென வலங்கொண் டேற
 
                ஒழிந்த மாந்தர் பொலிந்துபுறங் காப்ப
              இறையுடைச் செல்வ மியையத் தழீஇக்
              குறைபட லில்லாக் கொற்றமொடு போந்து
      195      முரசுஞ் சங்கு முருடு மொலிப்ப
              அரசப் பெருங்கொடி யொருவலத் துயரி
              எழுந்த பொழுதிற் றழங்குரன் முரசிற்
              றருசக குமரன் றான்பின் வந்து
              கேகயத் தரசனைக் காவல் போற்றென
      200      ஓம்படை கூறி யாங்கவ ணொழியப்
 
                பவ்வத் தன்ன படையமை நடுவண்
              வவ்வற் கெண்ணிய வத்தவ ரிறைவன்
              கெடலருஞ் சிறப்பிற் கேகயத் தரசனும்
              உடலுநர்க் கடந்த வுருமண் ணுவாவும்
      205     முன்ன ராக முன்னுக வென்னொடு
              பின்ன ராவோ ரின்னரென் றுரைத்துக்
              கூறுபடப் போக்கி வேறுபடப் பரப்பி
              எல்லை யிகந்த விருங்கடல் போலப்
              புல்லார் பாடியிற் குறுகலி னொல்லென
 
                புல்லார் பாடியிற் குறுகலி னொல்லென
      210     ஒற்றர் மாற்றம் பெற்றுமுன் னிருந்தோர்
              வேழமும் புரவியு மூழூழ் விரைஇக்
              காழ்மண் டெஃகமொடு காற்படை பரப்பிப்
              புண்ணிய முடையம் பொருமிவ ணின்னரை
              நன்னர்ப் பெற்றே நாமெனக் கூறி
 
        215      அங்கண் மாதிரத் ததிர்ச்சி யெய்த
              வெங்கண் முரசொடு பல்லியங் கறங்க
              அறியச் செய்த குறியுடைக் கொடியர்
              கூற்றுல கின்று கொள்ளா தாமென
              ஆற்றல் கலந்த வார்ப்பின ராகி
      220      மலைத்துமேல் வந்த மகதவன் படையொடு
              தலைப்பெய் தன்றாற் பகைப்படை பரந்தென்.