19. படை
தலைக்கொண்டது
|
இதன்கண் தருசகன் செயலும், ஓடிய
பகை மன்னர் மீண்டும் போர் செய்தற்குவரலும், அவர் மகதநாட்டுச் சோலை முதலியவற்றை
அழித்தலும், அஃதறிந்த தருசகன் படை திரட்டலும், உதயணன் செயலும், தான் போர்
செய்யச் செல்வதாகச் சொல்லி உதயணன் வயந்தகனைத் தருசகன்பால் விடுத்தலும்,
வயந்தகன் செயலும், தருசகன் செயலும் கேகயத்தரசன் எண்ணுதலும், தெரிவித்தலும், தருசகன்
எண்ணுதலும், கேகய மன்னனைத் தருசகன் போருக்கு விடுத்தலும், தருசகன் வயந்தகனுக்குக்
கூறலும், அவனை விடுதலும், யானை, குதிரை முதலியவற்றின் வருணனையும், படை எழுச்சியும்,
உதயணன் புறப்பாடும், பகைவர் செயலும் பிறவும் கூறப்படும். |
|
|
வத்தவற்
பெற்ற வலிப்பின
னாகி
மத்த யானை மகத
மன்னனும்
அருமுர ணடுதொழி லிளமைய
னிவனொடு தரும
சாத்திரந் தலைக்கொள் கென்று 5
பூசனை வழக்கொடு புரையவை
நடுவண்
வாசனைக் கேள்வி வழிமுறை தொடங்கலிற் |
உரை |
|
|
பரந்த
மன்னர் நிரந்துகண் கூடிக்
கற்ற நூலிற் செற்ற
வேந்தன்
வேறுபடக் காட்டிக் கூறுபட வறுப்பத்
10 தொலைதல் காரண மாகவது
துணிந்த நிலையி
னெஞ்சினர் நும்முள்
யாரெனத் தலைக்கூட்
டமைத்துத் தம்முள்
வினவத் தெய்வ
மிடைநிலை யாக
வதன்றிறம் ஐயந்
தீர வறிவம் யாமெனத்
15 தம்பாற் றெளிந்த தன்மைய ராகி |
உரை |
|
|
வெம்போர் நிகழ்ச்சி யென்கொன்மற்
றிதுவென வருபடை
யொற்றரை வழுக்கி
மற்றவன்
பொருபடை போதரப் புணர்த்த
தாகுமென் றதுவும்
பிறவு மாய்வுழிச் செவ்விதிற் |
உரை |
|
|
றதுவும்
பிறவு மாய்வுழிச் செவ்விதிற்
20 பேணி வாழும் பெற்றிய
ராகி
வாணிக வுருவொடு வந்திடைப்
புகுந்த
வீர ராகுவோர் வேறுதிரிந்
தொடுங்கி
ஆரிருண் மறைஇ யருஞ்சின
மழித்தோர்
போந்தில ராதலிற் பொருத்த முடைத்தென |
உரை |
|
|
25 வேந்தனில் வந்தோர் வினவுதல்
வேண்டா
அமர்மேற் கொண்டோர் யாரே
யாயினும்
தமராக் கருதித் தம்வயிற்
றெளிதல்
ஏல்வன் றென்ன மேலவை
கிளவா
இளிவஞ்சு முனிவரே யாயினு மற்றினித்
30
தெளிவஞ்சு தகைத்தெனத் தெளிவுமுந்
துறீஇ
வஞ்சினஞ் செய்து வெஞ்சினம்
பெருகக்
கெடுத்த லூற்றமொடு கடுத்தன
ராகிப்
பெயர்த்தும் பெரும்படை தொகுத்தனர் கொண்டு |
உரை |
|
|
நன்னாடு
நடுங்க நண்ணித் துன்னிய
35 ஈர நெஞ்சத் தார்வ
லாளர்
பாரந் தாங்கும் பழமை
போல
இலைக்கொடிச் செல்வமொடு தலைப்பரந்
தோங்கிய
கணைக்கா லிகணையுங் கமுகும்
வாழையும்
சினப்பெரு மாவும் பணைக்காற்
பலாவுங் 40
கொழுமுதற் றெங்கொடு முழுமுத
றொலைச்சிக்
கழனி விளைநெற் கனையெரி
கொளீஇப்
பழன நன்னாடு படியழித்
துராஅய்ச்
செயிர்ப்பிற் சிறந்தவர் பெயர்ச்சி
நோக்கிப்
|
உரை |
|
|
படையொற்
றாளர் கடுகுபு குறுகிக்
45 காவலற் கிசைத்துக் கண்டுகை
கூப்பி
வேக மன்னர் மீட்டும்வந்
திறுத்த
வெங்கட் செய்தொழி றன்கட்
கூறலும்
மறுநோய் மக்களி னாழ்ந்த
மனத்தன்
செறுவேல் வேந்தன் செய்வதை யறியான் |
உரை |
|
|
50
கூட்டம் பெருக்கி மீட்டுவந்
தனரெனின்
ஆற்ற லெல்லா மளந்தபி
னல்ல
தூக்க மிலரெனத் தூக்க
மின்றி
மனத்தி னெண்ணி மற்றது
கரந்து சினத்த
நோக்கமொடு சீறுபு வெகுண்டு
55 செருவுடை மன்னரைச் சென்றுமே
னேருங்குதும்
பொருபடை தொகுத்துப் போதுகென் றேவலின் |
உரை |
|
|
விருத்தி காரரும் வேண்டியது
பெறூஉம்
உரத்தகை யாளரு மொருங்குவந்
தீண்டுக
செருச்செய வலித்தனன் செல்வன்
சென்றெனத்
60 தானை யணியத் தலைத்தா
ளணியுள்
யானை யேற்றி யணிமுர சறைதலும் |
உரை |
|
|
வணங்கார் வணக்கிய வத்தவர்
பெருமகன் நுணங்குபொரு
ளமைச்சரொ டுணர்ந்தன
னாகிக்
கண்ணிய பொருட்குத் திண்ணியது தெரிய
65 உறுப்போ ரன்ன வுள்பொரு
ளமைச்சரும்
மறப்போர் மன்னனு மாணவே
றிருந்து
செயற்படு கருமத் தியற்கை
யிற்றெனப்
பெயர்த்தும் வருபடை யழிப்பது
வலித்து
வயந்தக குமரற் கியைந்தது கூறும் |
உரை |
|
|
70
மயங்கிதழ்ப் படலை மகதவற்
கண்டு செருச்செய்
தானைப் பிரச்சோ
தனன்றன் பாவையை
யிழந்து பரிவு
முந்துறீஇச்
சாவது துணிந்தியான் சேயிடைப்
போந்தனென்
மன்னுயிர் ஞாலத் தின்னுயி
ரன்ன 75
அடுத்த நண்புரைத் தெடுத்தனை யாகத் |
உரை |
|
|
தன்மேல்
வந்த தாக்கரும்
பொருபடை என்மேற்
கொண்டனெ னாகி
முன்னே எறிந்தனெ
னகற்றி யின்பம்
பெருகச் சிறந்ததோர்
செய்கை செய்தே னின்னும்
80 மறிந்துவந் தனரே மாற்றோ
ரென்ப தறிந்தென
னதன்மாட் டவலம் வேண்டா |
உரை |
|
|
என்னி னாதற் கிசைகுவ
தாயிற் பின்ன
ரறிய பிறபொருள்
வலித்தல் யான்சென்
றிரியினஃ தறிகுந ரில்லைத்
85 தான்சென் றுறுவழித் தளர்ந்த
காலை மகத
மன்னனை மலைந்துவென்
றனமென மிகுதி
மன்னர் மேல்வந்து
நெருங்கின் என்னா
மன்ன தின்னாத்
தரூஉம் எடுத்துநிலை
யரிதென வேதுக் காட்டி 90
என்குறை யாக வொழிக வெழுச்சி |
உரை |
|
|
தன்படை
யெல்லாந் தருக
வென்னொடும் அடற்றொழில்
யானைப் படைத்தொழில்
பயின்றோர் எனைவ
ருளரவ ரனைவரும்
யானும் ஏறுதற்
கமைந்த விருங்கவுள் வேழமும்
95 வீறுபெறப் பண்ணி விரைந்தன
வருக தன்பாற்
படைக்குத் தலைவ
னாகியோர் வன்பார்
மன்னன் வரினு
நன்றெனக் கூறினன்
மற்றெங் கோமக
னென்றவற் றேறக்
காட்டி மாறுமொழி
கொண்டு 100
விரைந்தனை வருகெனக் கரைந்தவற் போக்க |
உரை |
|
|
வாயன் றாயினும் வந்துகண்
ணுற்றோர் மேவ
வுரைக்கும் மேதகு
வாக்கியம் வல்ல
னாகிய வயந்தக
குமரன் செல்வன்
றலைத்தாட் சென்றுகண் ணெய்தி
105 இறைவன் மாற்றமுங் குறையுங் கூற |
உரை |
|
|
மகதவ
ரிறைவனுந் தமர்களைத்
தரீஇநமக் குறுதி
வேண்டு முதயண
னுரையிது மறுமொழி
யாதென மந்திர
மாக்கள் யாதவன்
வலித்த தப்பொரு ளறிதல்
110 தீதன் றாதலிற் றெளிந்து
செய்கென மறுத்தல்
செல்லான் வாழி
யவர்நிலை அழிக்கும்
வாயி லறியுந்
தானென ஒன்றின
னுரைத்ததை யொன்றுவன னாகி |
உரை |
|
|
அருஞ்சின யானையும் புரவியு மமைந்த
115 இருஞ்சின விளையரும் வருகென
வேவி |
உரை |
|
|
வலிகெழு நோன்றாள் வத்தவன்
வலித்ததும் கலிகெழு
மைத்துனன் கருத்து
நோக்கி முற்கிளை
வேண்டுநர் மற்றவர்க்
கியைந்த அற்றந்
தீர்க்கினது பிற்பயம் பெருகும்
120 அற்று மன்றிப் பற்றா
மன்னர் மேல்வந்
திறுப்ப வேல்பல
படையொடு மாயா
திருப்பிற் கிளையோ
மற்றிவன் வேற்றா
னெனவு மாற்றா
னெனவும்
போற்றா மன்னர் புறஞ்சொற் படுமெனக் |
உரை |
|
|
125 கேகயத்
தரசனுங் கிளந்துபல
வெண்ணிக் காவல்
வேந்தனைக் கண்டுகை
கூப்பி வானோர்
பெரும்படை வந்த
தாயினும் யானே
யமையு மடிக
ளென்னை விடுத்தற்
பாற்றென வெடுத்தவ னிசைப்பத் |
உரை |
|
|
130 தந்தை
பெருங்கிளை காரண
மாக முந்து
மப்படை முருங்கத்
தாக்கி வந்த
வேந்தன் வலித்ததுந்
தங்கைக்குச் சென்ற
குமரன் முந்தைக்
கூறிய மாற்றமு
மனத்தே யாற்றுளி புடைபெயர்ந்
135 தொலிக்குங் கழற்கா லுதயண
குமரன் வலிக்கும்
பொருண்மேல் வலித்தன னாகித் |
உரை |
|
|
தன்படைத் தலைவ னாக
வெம்மொடே வன்படை
யாளன் வருக
வென்றனன் மாண்ட
வத்தவ ராண்டகை யாதலின்
140 நம்மேல் வந்த வெம்முரண்
வீரர் தம்மேற்
சென்று தருக்கற
நூறுதல் வத்தவ
ரிறைவனும் வலித்தன
னவனோ டொத்தனை
யாகி யுடன்றமர்
செய்ய வல்லை
யாயிற் செல்வது தீதன்
145 றென்றவன் விடுப்ப நன்றென
விரும்பி ஒட்டிய
குமர னுள்ள நோக்கி |
உரை |
|
|
மட்டலர் பைந்தார் மகதவன்
வயந்தகற் குற்ற
நண்பி னுயிர்போ
லுதயணற் கிற்றிது
கூறுமதி யிளையோள் பொருட்டா
150 வந்திவ ணிருந்த வெந்திறல்
வீரன் தன்னொடு
வந்து மன்னரை
யோட்டிப் போதரத்
துணிந்தன னேத
மின்றி ஆகும்
வாயி லெண்ணி
யப்படை போக
நூக்கல் பொருளெனக்
கூறி 155
மீட்டவற் போக்க வேட்பனன் விரும்பியவன் |
உரை |
|
|
கூறிய
மாற்றங் கோமான்
றன்னொடு வீறியல
மைச்சர் வேறாக்
கேட்டுக் குறையின்
வேண்டுங் கரும
முறையிற் றானே
முடிந்ததென் றானா வுவகையன்
160 யானையும் புரவியு மமையப்
பண்ணி மாண்வினைப்
பொலிந்தோர் வருக
மற்றோர் சேனை
நாப்பட் சேருக
வின்றெனப் பெயர்த்து
மற்றவற் குரைத்தலிற்
பெருமகன் களிற்றுப்
பாகனை விளித்தன
னிறீஇ 165
அண்ணல் யானை பண்ணி வருகெனக் |
உரை |
|
|
கண்ணார் தகைய கவுளிழி
கடாத்தன மண்ணார்
நுதலின மாசின்
மருப்பின ஆற்ற
லமைந்தன நீற்பாற்
புறத்தன அமர்பண்
டறிந்தன வச்ச
மில்லன 170
புகரில் வனப்பின போரிற்
கொத்தன கோலங்
கொளீஇச் சீலந்
தேற்றின இருபாற்
பக்கமு மெய்து
மெறிந்தும் பொருவோர்ச்
செகுக்கப் புன்படைக்
கருவி அடக்குபு
பண்ணித் துடக்குபு
காட்டும் 175
தோட்டி கொளீஇக் கூட்டுபு
நிரைத்த வேல்வ
லிளையர் கால்புடை
காப்பக் கோயின்
முற்றத் துய்த்தலின் வாய்மொழி |
உரை |
|
|
கோயின் முற்றத் துய்த்தலின்
வாய்மொழி உதயணன்
றன்மாட் டுய்க்க
விவற்றொடு பொருபடைக்
குதவும் புரவியும் புரவியொடு
180 செருவமர் மாந்தருஞ் செல்க
விரைந்தென ஒன்னா
ரோட்டிய வுதயணன்
கோயிற் பொன்னார்
முற்றம் புகுந்துடன் றுவன்ற |
உரை |
|
|
அருந்திறல் யானை யமைந்தது
நாடி இரும்பிடர்த்
தலையிற் பெருந்தகை மேல்கொள
185 உயர்ந்த வூக்கத் துருமண்
ணுவாவும் வயந்தக
குமரனும் வாய்மொழிந்
தாய்ந்த உயர்ச்சி
யுள்ளத் திசைச்சனு
மேனைத் தடவரை
மார்பி னிடவக
னுளப்பட எந்நூற்
கண்ணு மிடம்பா
டுடைய 190
முந்நூற் றறுவர் மொய்த்தொருங்
கீண்டி வலம்படு
நமக்கென வலங்கொண் டேற |
உரை |
|
|
ஒழிந்த மாந்தர் பொலிந்துபுறங்
காப்ப இறையுடைச்
செல்வ மியையத்
தழீஇக் குறைபட
லில்லாக் கொற்றமொடு போந்து
195 முரசுஞ் சங்கு முருடு
மொலிப்ப அரசப்
பெருங்கொடி யொருவலத்
துயரி எழுந்த
பொழுதிற் றழங்குரன்
முரசிற் றருசக
குமரன் றான்பின்
வந்து கேகயத்
தரசனைக் காவல் போற்றென
200 ஓம்படை கூறி யாங்கவ ணொழியப் |
உரை |
|
|
பவ்வத் தன்ன படையமை
நடுவண் வவ்வற்
கெண்ணிய வத்தவ
ரிறைவன் கெடலருஞ்
சிறப்பிற் கேகயத்
தரசனும் உடலுநர்க்
கடந்த வுருமண் ணுவாவும்
205 முன்ன ராக முன்னுக
வென்னொடு பின்ன
ராவோ ரின்னரென்
றுரைத்துக் கூறுபடப்
போக்கி வேறுபடப்
பரப்பி எல்லை
யிகந்த விருங்கடல்
போலப் புல்லார்
பாடியிற் குறுகலி னொல்லென |
உரை |
|
|
புல்லார் பாடியிற் குறுகலி
னொல்லென 210
ஒற்றர் மாற்றம் பெற்றுமுன்
னிருந்தோர் வேழமும்
புரவியு மூழூழ்
விரைஇக் காழ்மண்
டெஃகமொடு காற்படை
பரப்பிப் புண்ணிய
முடையம் பொருமிவ
ணின்னரை நன்னர்ப்
பெற்றே நாமெனக் கூறி |
உரை |
|
|
215 அங்கண்
மாதிரத் ததிர்ச்சி
யெய்த வெங்கண்
முரசொடு பல்லியங்
கறங்க அறியச்
செய்த குறியுடைக்
கொடியர் கூற்றுல
கின்று கொள்ளா
தாமென ஆற்றல்
கலந்த வார்ப்பின ராகி
220 மலைத்துமேல் வந்த மகதவன்
படையொடு தலைப்பெய்
தன்றாற் பகைப்படை பரந்தென்.
|
உரை |
|
|
|