| 20. சங்க மன்னர் 
 உடைந்தது   | 
 
 | இதன்கண் மகத மன்னன் 
 படைகளிடத்தும் சங்க மன்னர் படைஇடத்தும் அமைந்த காலாட்படை குதிரை மறவர் யானை 
 இவர்களின் இயல்பும், போர் நிகழ்ச்சியும், உதயணன் முதலியோர் செயலும், போரின்கண் 
 அச்சுவப் பெருமகன் இறந்து படுதலும், அச்செய்தியை உதயணன் தருசகனுக்குக் கூறுதலும், தருசகன் 
 வருந்துதலும், தருசகனும் உதயணனும் நகர் புகுதலும், நகர மாந்தர் செயலும், உதயணனைப் 
 புகழ்தலும், சிலர் வாசவதத்தையை இகழ்தலும்; சிலர் அவளைப் புகழ்தலும் பிறவும் 
 கூறப்படும். | 
 
 |  | 
 
 |  | பரந்த பெரும்படை எதிர்ந்த 
 காலை அருங்கணை நிறைந்த ஆவ 
 நாழிகை
 பெரும்புறத்து இட்ட கருங்கச் 
 சீர்ப்பினர்
 பிறர்ப்பிறக்கு இடீஇச் சிறப்பிகந்து 
 எள்ளி
 5    நகுவன 
 போலத் தொகைகொண்டு 
 ஆர்ப்புறும்
 பைங்கழல் அணிந்து பரிபுஅசை 
 வில்லா
 இசைகொள் 
 நோன்தாள் அசைவில் ஆண்மையர்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வணங்குசிலைச் சாபம் வார்கணை 
 கொளீஇ நிணம்பட நெஞ்சமும் நெற்றியும் 
 அழுத்திக்
 10    கைபுடை 
 பரந்து கலங்கத் தாக்குநர்
 புடைநிரைத் தாரைக் கடிநீர்க் 
 கைவாள்
 படையு 
 நெருக்கிப்........................
 பாலிகை விளிக்கும் பண்அமை 
 பற்றினர்
 மாலையும் வயிரமும் ஊழூழ் பொங்கக்
 15    கால்வல் இளையர் கலங்கத் தாக்கவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | படைமிசை நிரைத்த வடிவமை 
 வார்நூல் சித்திரக் குரத்தின வித்தகக் 
 கைவினைப்
 புடைப்பொன் புளகமொடு பொங்குமயிர் 
 அணிந்த
 அரத்தப் போர்வைய யாப்பமை கச்சின
 20    முற்றுமறை பருமமொடு பொற்பூஞ் 
 சிக்கத்
 தாண வட்டத்து யாப்புப் 
 பிணிஉறீஇக்
 கோண வட்டக் கோல 
 முகத்த
 வெண்கடல் திரையென மிசைமிசை 
 நிவந்தரும்
 பொங்குமயிர் இட்ட பொலிவின வாகி
 | உரை | 
 
 |  | 
 
 |  | 25    அரிபெய் புட்டில் 
 ஆர்ப்பக் கருவியொடு மேலோர் உள்ளம் போல 
 நூலோர்
 புகழப் பட்ட போர்வல் 
 புரவி
 இகழ்தல் இன்றி ஏறிய 
 வீரர்
 வெம்முரண் வீரமொடு தம்முள் தாக்கவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 30    போர்ப்பறை 
 முழக்கினும் ஆர்ப்பினும் அழன்று கார்ப்பெயல் அருவியில் கடாஞ்சொரி 
 கவுள
 கொலைநவில் பல்படை கொண்ட 
 மாட்சிய
 மலைநிமிர்ந்து அன்ன மழகளிற்று 
 எருத்தில்
 சிலையுங் கணையுஞ் சீர்ப்பமை வட்டும்
 35    மழுவுங் குந்தமும் முழுமயிற் 
 பீலியும்
 சங்கமுங் கணையமுஞ் சத்தியும் 
 வாளும்
 பிண்டி பாலமும் பிறவும் 
 எல்லாம்
 தண்டாக் கருவி தாந்துறை 
 போகிய
 வண்டார் தெரியல் மறவர் மயங்கி
 40    அருநிலம் அதிரத் திரிதரல் 
 ஓவா
 வீதி வட்டமொடு ஆதிய 
 கதிவயின்
 பாழி பயிற்றி நூழில் ஆட்டவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | போர்க்கள வட்டங் கார்க்கடல் 
 ஒலியெனக் கடற்படைக் கம்பலை கலந்த காலை
 45    மடற் பனை இடைத்துணி கடுப்பப் 
 பல்லூழ்
 அடக்கரும் வேழத் தடக்கை 
 வீழவும்
 வார்ப்பண் புதைஇய போர்ப்பமை 
 வனப்பின்
 துடித்தலை போல வடித்தலை 
 அறவும்
 சுற்றார் கருவில் துணியெனத் தோன்றி
 50    அற்றம் இல்வால் அற்றன கிடப்பவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | சித்திரத் தாமரைப் பத்திரப் 
 பரூஉத்தொடி நுதிமுக வெண்கோடு முதலற 
 எறிதலின்
 செக்கர்க் குளிக்கும் வெண்பிறை 
 போல
 உட்குவரு குருதியுள் ளுடன்பல வீழவும்
 55    கார்முகக் கடுமுகில் ஊர்தி 
 யாக
 விசும்பிடைத் திரிதரும் விஞ்சை 
 மாந்தரைக்
 கடுந்தொழில் விச்சை கற்ற 
 மாற்றவர்
 மறத்தால் நெருங்கி மற்றவர் 
 உடனே
 நிறத்துஏ றுண்டு நிலத்துவீழ் வதுபோல்
 60    மார்பின் வெம்படை ஆர 
 மாந்தி
 வீர நோக்கினர் வேழமொடு வீழவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பூணேற்று 
 அகன்ற புடைகிளர் 
 அகலத்துத் தாமேற்று அழுத்திய சத்தி 
 வாங்கிப்
 புரைசை உய்த்த பொருகழல் காலினர்
 65    வரைமிசை மறிநரின் மறப்படை 
 திருத்தி
 வெம்முரண் வேழம் வீழ்த்து 
 மாற்றார்
 தம்முயிர் நீங்கத் தாழ்ந்தனர் வீழவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | அடுத்தெழு பெருந்திரை அகன்கடல் 
 நடுவண் உடைத்த நாவாய்க் கடைத்தொடை தழீஇ
 70    இடைத்திரைக்கு அணவரூஉம் எழுச்சி 
 ஏய்ப்ப
 வாக்கமை பிடிவார் வலித்த 
 கையினர்
 ஊற்றமில் புரவித் தாள்கழி 
 வாகிய
 குருதிப் புனலிடைக் கருதியது 
 முடியார்
 மாவொடு மறிந்து மயங்கி வீழவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 75    அலைகடல் வெள்ள மலைய 
 ஊழி உலக மாந்தரின் களைகண் 
 காணார்
 ஒண்செங் குருதியில் செங்கணிப் 
 போரால்
 நீலக் 
 கொண்மூ நீர்த்திரைப் 
 பெய்வதோர்
 கோலம் ஏய்ப்பக் கருந்தலை வீழவும்
 | உரை | 
 
 |  | 
 
 |  |       80    கால்வல் 
 புரவியுங் கடுங்கண் 
 யானையும்வேல்வல் இளையரும் விழுந்துகுழம் 
 பாகிய
 அள்ளல் செஞ்சேறு உள்ளோர் 
 உழக்கலின்
 துப்புநிலத்து எழுந்த துகளென 
 மிக்கெழுந்து
 தந்தர விசும்பி னந்தியிற் பரப்பவும்
 85    தெரிவருங் குணத்துத் திசைதொறும் 
 பொருந்தப்
 போர்வலம் வாய்த்த பொங்குஅமர் அழுவத்து
 | உரை | 
 
 |  | 
 
 |  | வார்தளிர்ப் படலை வத்தவர் 
 பெருமகன் எலிச்செவி அரசன் தம்பி 
 ஏறிய
 கொலைப்பெருங் களிற்றின் எருத்தத்துப் 
 பாய்ந்தவன்
 90    தம்முன் 
 காணத் தலைதுமித் 
 திடாது
 நின்னின் முடியும்எம் கருமம் 
 ஈண்டுஎனக்
 கடுத்த கட்டுரை எடுத்தனன் 
 கச்சின்
 திண்டோள் கட்டிய வென்றி நோக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஒண்தார் மார்பன் கொண்டமை கண்டே 95    ஒருக்கி நிரல்பொரூஉம் உருமண் 
 ணுவாநம்
 கருத்துவினை முடிக்குங் காலம் 
 இதுவென
 வேக வெள்வேல் கேகயத்து 
 அரசனை
 அடைதர்க வல்விரைந்து அமரார் 
 பெரும்படை
 உடைவிடம் போல உண்டென உரையா
 | உரை | 
 
 |  | 
 
 |  | 100    இருவருங் கூடி 
 எலிச்செவி அரசன் பொருமுரன் படையொடு மயங்கிய 
 பொழுதவன்
 அரணக் கருவி அழிய 
 வாங்கிக்
 கரண வகையால் கண்இமைப் 
 பளவில்
 மாசில் விழுச்சீர்க் கேகயத் தரசன்
 105    ஆசில் பைந்தலை அரிந்துநிலஞ் 
 சேர
 வீசிய வாளினன் விறலோர்ச் சவட்டி
 | உரை | 
 
 |  | 
 
 |  | வென்றோன் ஏறிய வேழஞ் 
 சார்ந்தவன் ஆற்றல் தன்மையன் ஆதலின் 
 தம்பி
 சிறைகொளப் பட்ட செல்லல் நோக்கி
 110    உறைகழி வாளின் உருமண் 
 ணுவாவின்
 மத்த 
 யானை மருங்கில் குப்புற்று
 ஒள்வாள் ஓக்கி எள்ளுநர் 
 ஒட்டிய
 எம்பி உற்ற இன்னாச் 
 சிறைவிடின்
 உய்ந்தனை யாகுதி அஞ்சல் நீயென
 115    ஆர்ப்பக் கண்டே அடுதிறல் உதயணன்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தாக்கருந் தானைத் தருசகன் 
 தன்னொடு வேற்றுமை இலன்இவன் போற்றினை 
 ஆயில்
 பெறற்கரு 
 நும்பியைப் பெறுதி 
 நீயெனத்
 திறப்படக் கூறி மறப்படை நூறக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 120    கடும்புனல் நெருங்க 
 உடைந்துநிலை ஆற்றா உப்புச் சிறைபோல் உள்நெகிழ்ந்து 
 உருகி
 வெப்ப மன்னர் வீக்கஞ் 
 சாய
 உடைந்துகை அகலஅவ ருரிமை 
 தழீஇக்
 கடந்தலை கழித்துக் கடுவாய் 
 எஃகமொடு
 125    இகலாள் 
 படுகளத்து அகலமர் ஆயத்து
 உதயண குமரன் உற்றோர் 
 சூழ
 விசய முரசொடு வியன்நகர் 
 அறிய
 மகத மன்னற்கு உகவை போக்கலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கேட்டுப்பொருள் நல்கி வேட்டுவிரைந்து எழுந்து 130    வெற்றத் தானை முற்றத்துத் 
 தோன்றிப்
 பகைக்கடன் 
 தீர்த்த தகைப்பொலி 
 மார்பனைப்
 பல்லூழ் புல்லி வெல்போர் 
 வேந்த
 படைத்தொழில் மாற்றம் பட்டாங்கு உரைக்கென
 | உரை | 
 
 |  | 
 
 |  | எடுத்த பெரும்படை எழுச்சியு இறுதியும் 135    பரப்புஞ் சுருக்கும் பாழியும் 
 அறியான்
 விலக்கவும் நில்லான் தலைக்கொண்டு 
 ஓடித்
 தமரையுந் தீர்ந்து நமரையும் 
 நண்ணான்
 கேள்அல் மன்னன் வாள்வாய்த் 
 துஞ்சி
 மாக விசும்பின் இன்துயில் 
 ஏற்றனன்
 140    
 கேகயத்து அரசன் எனவது கேட்டே
 | உரை | 
 
 |  | 
 
 |  | என்கடன் தீரேன் ஆயின் 
 ஏனவன் தன்கடன் தீர்த்துத் தக்கது 
 ஆற்றினன்
 என்பது கூறி அன்புநெகிழ்ந்து 
 உருகிப்
 பேரா இடும்பையுள் ஆராய்ந்து அவனைக்
 145    ரெரிப் படுத்துக் குறைவினை நீக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  | மகதவர் இறைவனும் வத்தவ 
 மன்னனும் அகன்நகர் 
 புகுந்த காலை முகன்நக
 மணிச்சுதைக் குன்றமும் மண்டபத்து 
 உச்சியும்
 அணித்தகு மாடமும் அரும்பெறல் புரிசையும்
 150    நிலைக்கால் ஏணியுந் தலைச்சிறந்து 
 ஏறி
 இரும்பேர் உலகம் ஒருங்கியைந் 
 ததுபோல்
 தெருவும் மன்றமும் திருமணல் 
 முற்றமும்
 மலரணி முகத்து வந்துஇறை கொண்டு
 | உரை | 
 
 |  | 
 
 |  | கீழும் மேலுங் கேட்புழி எல்லாம் 155    வாழ்க மற்றிவ் வத்தவர் 
 பெருமகன்
 என்நாடு இதுவன்று என்னான் 
 சென்றுழி
 அந்நாட்டு இடுக்கணும் அச்சமும் 
 அகற்றும்
 தத்துவ நெஞ்சத்து உத்தமன் 
 என்மரும்
 வனப்பிற்கு ஏற்ற வலியும் விச்சையும்
 160    சினப்போர் இவன்கே சேர்ந்தஎன் 
 போரும்
 வஞ்சச் சூழ்ச்சியின் வணக்கின் 
 அல்லதை
 அஞ்சாது இவனை அமர்வென்று 
 அழிக்கும்
 வெஞ்சின வேந்தர்இங்கு இல்என் போரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஆசில் செங்கோல் அவந்தியன் மடமகள் 165    வாசவ தத்தைஇவன் வலியொடு 
 புணர்ந்த
 செருவடு தோள்மிசைச் சேர்ந்தனள் 
 வைகும்
 திருவிலள் ஆதலின் தீப்பட் 
 டாள்எனப்
 படுசொல் மாற்றம் தெளிந்த 
 பரிவினர்
 தொடிகெழு தோளி திருஇழிப் போரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 170    அலைகடல் ஞாலத்து 
 ஆக்கையொடு ஆருயிர் நிலைநின்று அமையாது நிரைவளைத் 
 தோளி
 துஞ்சியும் துஞ்சாள் தோள்நலம் 
 நுகர்ந்த
 வெஞ்சின வேந்தன்அவள் விளிவு 
 முந்துறீஇப்
 புன்கண் கூரப் புலம்புகொண்டு 
 ஆற்றான்
 175    
 தன்நகர் துறந்து தலைமை 
 நீக்கிப்
 பின்இவண் இரங்கப் பெற்றனள் 
 ஆதலின்
 அவளே 
 புண்ணியம் உடையள்என் போரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வலிகெழு நோன்தாள் வத்தவ 
 மன்னன்குத் தருசகன் தங்கை தகைஏர் சாயல்
 180    பத்திப் பைம்பூண் பதுமா 
 நங்கை
 தக்கனள் கொடுப்பின் மிக்கதுஎன் போரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வேண்டி வந்த வேந்தனும் 
 வீய்ந்தனன் ஈண்டுஇனி இவன்கே இயைந்த 
 பால்வகை
 ஆதலும் 
 உண்டுஅஃது அறிவோர் யாரென
 185    வாயின் மிகுத்து வலித்துரைப் போரும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பொன்அணி மார்பன் முன்னர் ஆற்றிய நன்னர்க்கு உதவும் பின்உப காரம்
 அலைதிரைப் பௌவம் ஆடை ஆகிய
 நிலம்முழுது கொடுப்பினும் நேரோ என்மரும்
 190    
	நகர மாக்கள் இவைபல பகர
 மாசில் செங்கோல் மகத மன்னனொடு
 கோயில்புக் கனனால் கோமகன் பொலிந்தென்.
 
 (20.சங்கமன்னர் உடைந்தது முற்றிற்று)   | உரை | 
 
 |  |  |  |