22. பதுமாபதி
வதுவை
|
இதன்கண்: உதயணனுடைய உடன்பாடு
பெற்று மீண்ட அமைச்சன் தருசகனுக்குக் கூறுதலும், அவன் மகிழ்தலும், உதயணன் எண்ணுதலும்,
உதயணன் வயந்தகனைத் தருசகன்பால் உய்த்தலும், வயந்தகன் தருசகன்பால் சென்று கூறுதலும்,
தருசகன் யாப்பியாயினியை இசைச்சனுக்கு மணம் செய்விப்பதாகச்
சொல்லிவிடுத்தலும், உதயணன் முதலியோர் உடன்படுதலும், தருசகன் தன்தாயின்
உடன்பாட்டைஅறிதலும், தருசகன் செயலும், உதயணன் செயலும் யாப்பியாயினி உதயணனே மணமகன்
என்றுணர்தலும், யாப்பியாயினி பதுமாபதியைக் காண்டலும், அவ்விருவர் தம்
சொல்லாட்டமும், யாப்பியாயினியின் செயலும், உதயணன் செயலும், யாப்பியாயினியின்
செயலும், பதுமாபதி செயலும், பதுமாபதியின் மகிழ்ச்சியும், மணவினைச் செயலும்,
பதுமாபதியைக் கோலம் செய்தலும், உதயணன் மணமண்டபம் புகுதலும், பதுமாபதி வருதலும்,
உதயணன் பதுமாபதியை மணம் புரிந்து கோடலும் கூறப்படும். |
|
|
அகநனி புகன்றுஆண்டு அமைச்சன்
போகித்
தகைமிகு தானைத் தருசகன்
குறுகி
மாற்றோர்ச் சாய்த்தவன் மறுத்த
வண்ணமும்
ஆற்றல் சான்றஅவன் அன்புகந் தாகத்
5 தொல்லுரைக் கயிற்றில் தொடரப்
பிணிக்கொளீஇ
வல்லிதின் அவனை வணக்கிய
வண்ணமும்
பல்பொரு ளாளன் பணிந்தனன் உரைப்ப |
உரை
|
|
|
உவந்த மனத்தின் இகழ்ந்ததை
மதியாக்
கொடுக்குங் கேண்மை கோமகன் புரிய |
உரை
|
|
|
10 வடுத்தொழில்
அகன்ற வத்தவர் பெருமகன்
மாய உருவொடு மாடத்து
ஒடுங்கிய
ஆய கேண்மையன் அந்தணன்
என்பது
சேயிழை மாதர் தேறலள்
ஆகி
ஒன்றுபுரி உள்ளமொடு ஒன்றாள் ஆதலின் 15 நன்றுபுரி நாட்டத்து நான்அவ
னாதல்
அறியத் தேற்றுவோர் அயல்வேறு
இல்லென
நெறியிற்கு ஒத்த நீர்மை நாடி |
உரை
|
|
|
வயத்தகு நோன்தாள் வயந்தகன்
தழீஇ
இசைச்சன் என்னும் என்னுயிர்த் தோழன் 20 அருமறை நாவின் அந்தணன்
அவன்தனக்கு
இருமுது குரவரும் இறந்தனர்
ஆதலின்
வேதத்து இயற்கையின் ஏதந்
தீரக்
கிரிசையின் வழாஅ வரிசை
வாய்மையோர்
அந்தணன் கன்னியை மந்திர விதியின்
25 அவன்பால் படுத்த பின்னர்
என்னையும்
இதன்பால் படுக்க எண்ணுக
தானென
என்கூற் றாக இயையக்
கூறி
முன்கூற்று அமைத்து முடித்தல்நின் கடனென |
உரை
|
|
|
வயந்தக குமரனும் நயந்தது நன்றென 30 இன்னொலிக் கழல்கால் மன்னனைக்
குறுகிப்
பொருத்தம் படஅவன் உரைத்ததை உணர்த்தலின் |
உரை
|
|
|
விருப்பொடு கேட்டு விறல்கெழு
வேந்தன்
நங்கை தோழி நலத்தொடு
புணர்ந்த
அங்கலுழ் பணைத்தோள் ஆப்பியா
யினிஎனும் 35 செழுக்கயல்
மழைக்கண் சேயிழை அரிவை
ஒழுக்கினும் குலத்தினும் விழுப்பம்
மிக்கமை
சென்றுரை செம்மற்கு என்றவன்
ஒருப்பட
வயந்தக குமரன் வந்து கூறத் |
உரை
|
|
|
தோழர் எல்லாம் தோழிச்சி யாகத் 40 தாழ்வ ளாம்எனத் தாழாது
வலிப்ப
நன்னெறி அறியுநர் நாள்தெரிந்து உரைப்பத் |
உரை |
|
|
தன்னெறி
வழாஅத் தருசக குமரன்
தன்பயந்து எடுத்த கற்பமை
காரிகைக்
கோப்பெருந் தேவிக்கு யாப்புடைத் தாகத்
45 தங்கை திறவயின் வலித்தது
மற்றவள்
இன்பத் தோழியை இசைச்சன்கு
இசைத்ததும்
தெருளக் கூறி அருள்வகை
அறிந்து
வம்மின் என்று தம்மியல்
வழாஅப்
பெருமூ தாளரை விடுத்தலிற் கேட்டே |
உரை |
|
|
50 திருமா தேவியும்
தேன்புரை தீஞ்சொல்
கணங்குழை மகளைக் காமன்
அனைய
வணங்குசிலைத் தடக்கை வத்தவர்
பெருமகன்கு
எண்ணினன் எனவே உள்மலி
உவகையள்
அதிநா கரிகத்து அந்தணிக் கணியும்
55 முற்றணி கலங்கள் கொற்றவி கொடுப்பப் |
உரை |
|
|
பதுமா
நங்கையும் அதன்திறம்
அறிந்து
மாணகன் பிரிந்தஎன் மம்மர்
வெந்நோய்க்கு
ஆணம் ஆகிய ஆயிழை
தனக்கு
நீங்குதிறன் உண்டுஎனில் தாங்குதிறன்
அறியேன் 60 விலக்குதல்
இயல்பும் அன்றால்
கலக்கும்
வல்வினை தானே நல்வினை
எனக்கென
ஒள்ளிழை மாதர் உள்வயின் நினைஇ |
உரை |
|
|
மடுத்தணி கலனும் மாலையும்
பிறவும்
கொடுத்தனள் ஆகிக் கோமான் பணித்த
65 வடுத்தீர் வதுவையின் மறந்தனை
ஒழியாது
வல்லே வாஎன மெல்லியல்
புல்லிக்
கவற்சி கரந்த புகற்சியள்
ஆகிச்
சிறுமுதுக் குறைவி அறிவொடு
புணர்ந்த
தாயர் இயற்கை சேயிழைக்கு ஆற்றித் 70 தானுடை உழைக்கலம் எல்லாந்
தரீஇச்
சேயொளிச் சிவிகையொடு சேயிழைக்கு ஈயத் |
உரை |
|
|
தங்கை தலைமை தன்னையும்
உவந்து
கொங்கலர் கோதையைக் கொடுக்குநாள்
ஆதலின்
இலக்கணச் செந்தீத் தலைக்கையின் இரீஇ
75 இழுக்கா இயல்பின் இசைச்ச
குமரன்
விழுப்பெரு விதியின் வேட்டுஅவள்
புணர்கென
முழுப்பெருங் கடிநகர் முழுதுடன்
உணரக்
கோப்பெரு வேந்தன் யாப்புறுத்து அமைத்தபின் |
உரை |
|
|
வதுவைச் செல்வத்து ஒளிநகைத் தோழனை 80 நீங்கல் செல்லான் பூங்கழல்
உதயணன்
முதல்கோ சம்பியும் மொய்புனல்
யமுனையும்
சிதர்ப்பூங் காவும் சேயிழை
மாதர்
கண்டுஇனிது உறைவது காரண
மாக
வண்டுஇமிர் காவின் மகதத்து அகவயின்
85 வந்தனம் யாம்என்று அந்தணி
கேட்ப
இன்இசைக் கிளவி இறைமகன் இசைத்தலின் |
உரை |
|
|
சின்நகை
முறுவல் சேயிழை கேளா
வாள்நகை மாதரொடு மனைவயின்
ஒடுங்கிய
மாணகன் வாய்மொழி யிதுவான் மற்றெனத்
90 தேனார் காந்தள் திருமுகை
அன்ன
கூட்டுவிரல் அகற்றிக் கொழுங்கயல்
மழைக்கண்
கோட்டுவனள் மேலைக் குமரனை
நோக்கி
ஐயம் இன்றி அறிந்தன ளாகி |
உரை |
|
|
வையங் காவலன் வத்தவர் பெருமகன்
95 பார்ப்பன உருவொடு பதுமா
நங்கையை
யாப்புடை நெஞ்சம் அழித்தனன்
அறிந்தேன்
ஒப்புழி அல்லது ஓடாது
என்பது
மிக்கதென் மனன்என மெல்லியல்
நினைஇ
நகைத்துணைத் தோழிக்கு நன்னலத்
தோன்றல் 100 தகைப்பெரு
வேந்தன் ஆகலின்
மிகச்சிறந்து
ஆனா நன்மொழி தான்அவள்
கொண்டு
கோட்டிச் செவ்வியுள் வேட்டனள்
விரும்பா
உரைத்தல் ஊற்றமொடு திருத்தக இருப்ப |
உரை |
|
|
இயைந்த வதுவை எழுநாள் நீங்கலும்
105 பசும்பொன் கிண்கிணிப் பதுமா
நங்கையும்
நயந்த தோழி நன்நலம்
காணும்
விருப்பினள் ஆகி விரைந்துஇவண்
வருகெனத்
திருக்கிளர் சிவிகையொடு சிலதரை விடுத்தலின் |
உரை |
|
|
ஆரா
அன்பினொடு அகன்ற எழுநாள் 110 ஏழாண்டு அமைந்தன தன்மையள்
ஆயினும்
நலங்கவர்ந்து அகன்ற நண்பனைக்
கண்டனென்
புலம்புஇனி ஒழிக புனைவளைத்
தோளி
வளங்கெழு தானை வத்தவ
னாம்என
விளங்கக் கூறும் விருப்பும் நாணும்
115 தேறிய தோழி ஏறினள்
சென்றுதன்
துணைநலத் தோழிமுன் மணநலக் கோலமொடு |
உரை |
|
|
நாணிநின் றோளைநின் பூண்இள
வனமுலை
புல்லினது உண்மையில் புல்லேன்
யானென
மெல்லியன் மாதர் நகுமொழி பயிற்ற |
உரை |
|
|
120 நினக்கும்
ஒக்கும்அஃது எனக்கே
அன்றென
மனத்தின் அன்னோள் மறுமொழி
கொடுப்பச்
சின்நகை முகத்தள் நன்னுதல்
வாவென
நுகர்ச்சியின் உகந்த வனமுலை
நோவப்
புகற்சியொடு புல்லிப் புனைஇழை கேண்மதி |
உரை |
|
|
125 வண்டார்
மார்பின் வடிநூல் வயவனைக்
கண்டேன் அன்ன தன்மையன்
ஆகிக் கள்ள
உருவொடு கரந்தகத்து
ஒடுங்கிநின்
உள்ளங் கொண்ட உறுவரை
மார்பன்
வசையின் நோன்றாள் வத்தவர் பெருமகன் 130 உதையண குமரன் போலும்
உணர்கெனச்
சிதைபொருள் இல்லாச் சின்நெறிக்
கேண்மை
மணங்கமழ் மாதர் துணிந்தனள் உரைப்ப |
உரை |
|
|
நின்னை வேட்ட வந்தணன்
அவற்குத்
துன்னிய தோழனது முன்னே கேட்டனன்
135 பெருமகன் உள்ளத்து உரிமை
பூண்டஎன்
அதிரா நன்நிறை கதுவாய்ப்
படீஇத்
தணத்தல் தகுமோ நினைக்கெனக்
கலங்கித்
திருவிழை தெரியாள் திட்பங் கூறப் |
உரை |
|
|
பின்னருங் காண்பாம் அன்னன் ஆகுதல்
140 பொன்னே போற்றெனத் தன்மனைப்
பெயர்ந்து
நன்னுதல் நிலைமை இன்னதென்று உரைக்கவம் |
உரை |
|
|
மாற்றங் கேட்டுஅவள் தேற்றல்
வேண்டி
வத்தவர் பெருமகன் வண்ணங்
கூட்டிச்
சித்திரக் கிழிமிசை வித்தக மாக
145 உண்கண் கிழமையுள் பண்பின்
தீராது
மறைப்பியல் வழாஅக் குறிப்புமுதல்
தொடங்கி
ஆங்குஅப் பொழுதே பூங்குழை
உணர
வாக்கமை பாவை வகைபெற
எழுதி
வாள்நுதல் மாதரொடு மனைவயின் இருப்புழி
150 உருவக் கோயிலுள் இரவுக்
குறிவயின்
வெருவக் குழறிய விழிகண்
கூகைக்
கடுங்குரல் அறியாள் கதுமென
நடுங்கினள்
ஒடுங்கீர் ஓதி என்பதை உணர்த்தென |
உரை |
|
|
மன்னவன் உரைத்த மாற்றமும் மன்னவன்
155 தன்ஒப் பாகிய தகைநலப்
பாவையும்
கொண்டனள் போகிக் கோமகள்
குறுகி
வண்டுஅலர் படலை வத்தவன்
வடிவில்
பாவை காட்டிப் பைங்கொடி
இதுநம்
ஆய்பூங் காவின் அந்தண உருவொடு 160 கரந்துநலம் கவர்ந்த காவலன் வடிவுஎனத் |
உரை |
|
|
திருந்துஇழை மாதர் திண்ணிதின்
நோக்கி
இன்உயிர்க் கிழவன் எழுதிய
பாவை
என்னும் வேற்றுமை இல்லை
ஆயினும்
ஓராங்கு இதனை ஆராய்ந்து அல்லது
165 தீண்டலும் தேறலும் திருத்தகைத்து
அன்றெனப்
பூண்தயங்கு இளமுலைப் புனைவளைத்
தோளி
உள்ளே நினைஇக் கொள்ளாள் ஆக |
உரை |
|
|
நள்ளென் யாமத்து நன்நுதல்
வெரீஇய
புள்ளின் நற்குறி உரைத்தலும் பொருக்கெனப்
170 பெருவிறல் கொழுநன் இன்னுயிர்
மீட்டுப்
பெற்ற ஒழுக்கிற் பெரியோள்
போலச்
செங்கடை மழைக்கண் சேயிழைத்
தோழியை
அங்கை எறிந்து தங்கா
விருப்பமொடு
காமக் காதலன் கைவினைப் பொலிந்த
175 ஓவியப் பாவையை ஆகத்து ஒடுக்கி |
உரை |
|
|
நீண்ட திண்தோள் ஈண்டுவனள்
நணக்கு
நெஞ்சங் கொண்ட நெடுமொழி
யாள
வஞ்ச உருவொடு வலைப்படுத்து
அனையெனப்
புலவி நோக்கமொடு நலமொழி நயந்து
180 கோமான் குறித்ததுந் தோழி
கூற்றும்
தானொருப் பட்ட தன்மையள்
ஆகிச்
செல்லா நின்ற சின்நாள் எல்லை |
உரை |
|
|
நன்னாள் தலைப்பெயல் நன்றென
எண்ணிக் கோட்டமில்
உணர்வின் கொற்றவன் குன்றாச்
185 சேனைப் பெருங்கணி செப்பிய
நன்னாள்
தானைத் தலைத்தாள் தானறி
உறுத்தலின்
வையக விழவில் தானுஞ்
செய்கையின்
அழுங்கல் நன்னகர் ஆவணந்
தோறும்
செழும்பல் யாணர்ச் சிறப்பின் வழாஅது 190 வண்ணப் பல்கொடி வயின்வயின்
எடுத்தலின்
விண்வேய்ந்து அன்ன வியப்பிற்று ஆகிப் |
உரை |
|
|
பெருமதில் அணிந்த திருநகர்
வரைப்பின்
ஆய்ந்த கேள்வி மாந்தரும்
மகளிரும்
ஆரா உவகையர் ஆகிய காலைச்
195 சேரார்க் கடந்த சேதியர்
மகனையும்
மதுநாறு ஐம்பால் பதுமா
பதியையும்
மரபிற்கு ஒத்த மண்ணுவினை
கழிப்பிய
திருவிற் கொத்துத் தீதுபிற
தீண்டா
நெய்தலைப் பெய்து மையணி உயர்நுதல்
200 இருங்களிற்று யாயானை எருத்தில்
தந்த
பெருந்தண் நறுநீர் விரும்புவனர்
ஆட்டிப்
பவழக் கொட்டைப் பொற்செருப்பு
ஏற்றித்
திகழ்செய் கோலத்து இருமணை இரீஇச் |
உரை |
|
|
செங்கயல் கண்ணியை நங்கை தவ்வையர்
205 கோலம் மீத்தக வாலணி
கொளீஇத்
திருந்தடி வணங்கி வருந்தல்
ஓம்பிப்
பீடத்து இரீஇய பாடறிந்து
ஏற்றி
நறுநீர்த் துவர்க்கை வயின்வயின்
உரீஇக்
கறைமான் காழ்அகில் கொழும்புகை கொளீஇ
210 நெறித்து நெறிப்பட வாருநர்
முடித்து
மங்கல நறுஞ்சூட்டு மரபின் அணிந்து |
உரை |
|
|
வல்லோன் வகுத்த நல்வினைக்
கூட்டத்து
யவனப் பேழையுள் அடைந்தோர்
ஏந்திய
தமனியப் பல்கலம் தளிரியல் மாதர்
215 ஆற்றுந் தகையன ஆற்றுளி
வாங்கி
வெண்சாந்து வரித்த அம்சில்
ஆகத்து
இணைமுலை இடைப்பட்டு இலங்குபு
பிறழும்
துணைமலர்ப் பொற்கொடி துளங்கு
நுசுப்பினை
நிலைபெற விசிப்பது போல வேர்ப்ப
220 மேற்பால் பிறையென விளங்க
அமைந்தது
ஒருகாழ் ஆரம் ஒளிபெற அணிந்து |
உரை |
|
|
திருக்கேழ்க் களிகை செவ்வனம்
சேர்த்திப்
பைம்பொன் திலகமொடு பட்டம்
அணிந்த
ஒண்கதிர் மதிமுகம் ஒளியொடு சுடரச்
225 செம்பொன் ஓலை சேடுபடச்
சுருக்கி
ஐவகை வண்ணத்து அம்நுண்
மேகலை
பையரவு அல்குல் பரப்பிடை
இமைப்பக்
கொய்துகொண்டு உடீஇய கோடி
நுண்துகில்
மைவளர் கண்ணி மருங்குல் வருத்தக் 230 கடுங்கதிர் முத்துங் கைபுனை
மலரும்
தடந்தோள்கு ஒப்ப உடங்கணிந்து ஒழுகிய |
உரை |
|
|
சின்மயிர் முன்கைப் பொன்வளை
முதலாக்
கண்ணார் கடகமொடு கைபுனைந்து
இயற்றிய
சூடகத் தேற்ற சுடரொளிப் பவளமொடு
235 பாடக நூபுரம் பரட்டுமிசை
அரற்ற
ஆடமைத் தோளியை அணிந்துமுறை
பிறழாது
வதுவைக்கு ஏற்ற மங்கலப்
பேரணி
அதிநா கரிகியை அணிந்தனர் அமைய |
உரை |
|
|
ஓங்கிய பெரும்புகழ் உதயண குமரனைத் 240 தாங்கருந் தோழர் தாம்புனைந்து
அணியக்
கடிநாள் கோலத்துக் காமன்
இவனென
நெடுநகர் மாந்தர் நெஞ்சந்
தெளியக்
காட்சிக்கு அமைந்த மாட்சி எய்த |
உரை |
|
|
வெற்ற
வேந்தன் கொற்றப் பெருங்கணி
245 கூறிய முழுத்தம் குன்றுதல்
இன்றி
ஆர்வச் செய்தொழில் அகன்பெருங்
கோயிலுள்
ஆயிரம் பொன்தூண் அணிமணிப்
போதிகைக்
காய்கதிர் முத்தம் கவினிய
அணிமின்
அத்தூண் நடுவண் ஒத்த உருவின 250 சந்தனப் பெருந்தூண் ஒன்பது
நாட்டிய
மைந்தர் அழகிற்கு ஏற்ற ... ... ...
...
... ... ... ... ... ... ... ...
...
அழல்மணி நெடுமுடி அரசருள்
அரசன்
நிலமமர் செங்கோல் நித்திலம்
ஏர்தரத்
தலைமலை படலைத் தருசகன் புகுந்து
255 தீவேள் சாலை திறத்துளி
மூட்டிப்
புகுதுக வத்தவன் என்றலின்
பூந்தார்
அரசிளங் குமரரொடு அண்ணல் புகுதரக் |
உரை |
|
|
கதிர்மதி
முகத்தியைக் காவல் கண்ணி
ஆயிரத்து எண்மர் பாங்கியர் அன்னோர்
260 பாசிழைத் தோழியர் பாடகஞ்
சுடரத்
தண்பெரும் பந்தருள் கண்பிணி
கொள்ள
உயர்வினும் ஒழுக்கினும் ஒத்தவழி
வந்த மங்கல
மன்னற்கு மந்திர விழுநெறி
ஆசான் முன்னின்று அமையக் கூட்டித்
265 தீமாண் புற்ற திருத்தகு பொழுதில் |
உரை |
|
|
புதுமலர்க் கோதைப் பூந்தொடிப்
பணைத்தோள்
பதுமா நங்கையைப் பண்புணப்
பேணி
மணநல மகளிர் மரபிற்கு
ஒத்தவை
துணைநல மகளிரொடு துன்னிய காதல் 270 மூதறி மகளிர் முடித்த பின்றை |
உரை |
|
|
ஏதம்இல்
காட்சி ஏயர் பெருமகன்
நன்நுதல் மாதரை நாட்கடிச்
செந்தீ
முன்முதல் இரீஇ முறைமையில்
திரியா
விழுத்தகு வேள்வி ஒழுக்கியல் ஓம்பிச்
275 செம்பொன் பட்டம் பைந்தொடிப்
பாவை மதிமுகம்
சுடர மன்னவன் சூட்டித்
திருமணிப் பந்தருள் திருக்கடங் கழிப்பி |
உரை |
|
|
ஒருமைக்கு ஒத்த ஒன்றுபுரி
ஒழுக்கின்
வல்லோர் வகுத்த வண்ணக் கைவினைப் 280 பல்பூம் பட்டில் பரூஉத்திரள்
திருமணிக்
காலொடு பொலிந்த கோலக்
கட்டில்
கடிநாள் செல்வத்துக் காவிதி
மாக்கள்
படியில் திரியாது படுத்தனர்
வணங்கப்
பட்டச் சின்நுதல் பதுமா பதியொடு
285 கட்டில்ஏ றினனால் கருதியது முடித்தென்.
(22.பதுமாபதி வதுவை
முற்றிற்று)
|
உரை |
|
|
|