| 22. பதுமாபதி 
 வதுவை   | 
 
 | இதன்கண்: உதயணனுடைய உடன்பாடு 
 பெற்று மீண்ட அமைச்சன் தருசகனுக்குக் கூறுதலும், அவன் மகிழ்தலும், உதயணன் எண்ணுதலும், 
 உதயணன் வயந்தகனைத் தருசகன்பால் உய்த்தலும், வயந்தகன் தருசகன்பால் சென்று கூறுதலும், 
 தருசகன் யாப்பியாயினியை இசைச்சனுக்கு மணம் செய்விப்பதாகச்  
 சொல்லிவிடுத்தலும், உதயணன் முதலியோர் உடன்படுதலும், தருசகன் தன்தாயின் 
 உடன்பாட்டைஅறிதலும், தருசகன் செயலும், உதயணன் செயலும் யாப்பியாயினி உதயணனே மணமகன் 
 என்றுணர்தலும், யாப்பியாயினி பதுமாபதியைக் காண்டலும், அவ்விருவர் தம் 
 சொல்லாட்டமும், யாப்பியாயினியின் செயலும், உதயணன் செயலும், யாப்பியாயினியின் 
 செயலும், பதுமாபதி செயலும், பதுமாபதியின் மகிழ்ச்சியும், மணவினைச் செயலும், 
 பதுமாபதியைக் கோலம் செய்தலும், உதயணன் மணமண்டபம் புகுதலும், பதுமாபதி வருதலும், 
 உதயணன் பதுமாபதியை மணம் புரிந்து கோடலும் கூறப்படும். | 
 
 |  | 
 
 |  | அகநனி புகன்றுஆண்டு அமைச்சன் 
 போகித் தகைமிகு தானைத் தருசகன் 
 குறுகி
 மாற்றோர்ச் சாய்த்தவன் மறுத்த 
 வண்ணமும்
 ஆற்றல் சான்றஅவன் அன்புகந் தாகத்
 5  தொல்லுரைக் கயிற்றில் தொடரப் 
 பிணிக்கொளீஇ
 வல்லிதின் அவனை வணக்கிய 
 வண்ணமும்
 பல்பொரு ளாளன் பணிந்தனன் உரைப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | உவந்த மனத்தின் இகழ்ந்ததை 
 மதியாக் கொடுக்குங் கேண்மை கோமகன் புரிய
 | உரை | 
 
 |  | 
 
 |  | 10  வடுத்தொழில் 
 அகன்ற வத்தவர் பெருமகன் மாய உருவொடு மாடத்து 
 ஒடுங்கிய
 ஆய கேண்மையன் அந்தணன் 
 என்பது
 சேயிழை மாதர் தேறலள் 
 ஆகி
 ஒன்றுபுரி உள்ளமொடு ஒன்றாள் ஆதலின்
 15  நன்றுபுரி நாட்டத்து நான்அவ 
 னாதல்
 அறியத் தேற்றுவோர் அயல்வேறு 
 இல்லென
 நெறியிற்கு ஒத்த நீர்மை நாடி
 | உரை | 
 
 |  | 
 
 |  | வயத்தகு நோன்தாள் வயந்தகன் 
 தழீஇ இசைச்சன் என்னும் என்னுயிர்த் தோழன்
 20  அருமறை நாவின் அந்தணன் 
 அவன்தனக்கு
 இருமுது குரவரும் இறந்தனர் 
 ஆதலின்
 வேதத்து இயற்கையின் ஏதந் 
 தீரக்
 கிரிசையின் வழாஅ வரிசை 
 வாய்மையோர்
 அந்தணன் கன்னியை மந்திர விதியின்
 25    அவன்பால் படுத்த பின்னர் 
 என்னையும்
 இதன்பால் படுக்க எண்ணுக 
 தானென
 என்கூற் றாக இயையக் 
 கூறி
 முன்கூற்று அமைத்து முடித்தல்நின் கடனென
 | உரை | 
 
 |  | 
 
 |  | வயந்தக குமரனும் நயந்தது நன்றென 30  இன்னொலிக் கழல்கால் மன்னனைக் 
 குறுகிப்
 பொருத்தம் படஅவன் உரைத்ததை உணர்த்தலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | விருப்பொடு கேட்டு விறல்கெழு 
 வேந்தன் நங்கை தோழி நலத்தொடு 
 புணர்ந்த
 அங்கலுழ் பணைத்தோள் ஆப்பியா 
 யினிஎனும்
 35    செழுக்கயல் 
 மழைக்கண் சேயிழை அரிவை
 ஒழுக்கினும் குலத்தினும் விழுப்பம் 
 மிக்கமை
 சென்றுரை செம்மற்கு என்றவன் 
 ஒருப்பட
 வயந்தக குமரன் வந்து கூறத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தோழர் எல்லாம் தோழிச்சி யாகத் 40  தாழ்வ ளாம்எனத் தாழாது 
 வலிப்ப
 நன்னெறி அறியுநர் நாள்தெரிந்து உரைப்பத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தன்னெறி 
 வழாஅத் தருசக குமரன் தன்பயந்து எடுத்த கற்பமை 
 காரிகைக்
 கோப்பெருந் தேவிக்கு யாப்புடைத் தாகத்
 45    தங்கை திறவயின் வலித்தது 
 மற்றவள்
 இன்பத் தோழியை இசைச்சன்கு 
 இசைத்ததும்
 தெருளக் கூறி அருள்வகை 
 அறிந்து
 வம்மின் என்று தம்மியல் 
 வழாஅப்
 பெருமூ தாளரை விடுத்தலிற் கேட்டே
 | உரை | 
 
 |  | 
 
 |  | 50  திருமா தேவியும் 
 தேன்புரை தீஞ்சொல் கணங்குழை மகளைக் காமன் 
 அனைய
 வணங்குசிலைத் தடக்கை வத்தவர் 
 பெருமகன்கு
 எண்ணினன் எனவே உள்மலி 
 உவகையள்
 அதிநா கரிகத்து அந்தணிக் கணியும்
 55    முற்றணி கலங்கள் கொற்றவி கொடுப்பப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பதுமா 
 நங்கையும் அதன்திறம் 
 அறிந்து மாணகன் பிரிந்தஎன் மம்மர் 
 வெந்நோய்க்கு
 ஆணம் ஆகிய ஆயிழை 
 தனக்கு
 நீங்குதிறன் உண்டுஎனில் தாங்குதிறன் 
 அறியேன்
 60  விலக்குதல் 
 இயல்பும் அன்றால் 
 கலக்கும்
 வல்வினை தானே நல்வினை 
 எனக்கென
 ஒள்ளிழை மாதர் உள்வயின் நினைஇ
 | உரை | 
 
 |  | 
 
 |  | மடுத்தணி கலனும் மாலையும் 
 பிறவும் கொடுத்தனள் ஆகிக் கோமான் பணித்த
 65    வடுத்தீர் வதுவையின் மறந்தனை 
 ஒழியாது
 வல்லே வாஎன மெல்லியல் 
 புல்லிக்
 கவற்சி கரந்த புகற்சியள் 
 ஆகிச்
 சிறுமுதுக் குறைவி அறிவொடு 
 புணர்ந்த
 தாயர் இயற்கை சேயிழைக்கு ஆற்றித்
 70  தானுடை உழைக்கலம் எல்லாந் 
 தரீஇச்
 சேயொளிச் சிவிகையொடு சேயிழைக்கு ஈயத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தங்கை தலைமை தன்னையும் 
 உவந்து கொங்கலர் கோதையைக் கொடுக்குநாள் 
 ஆதலின்
 இலக்கணச் செந்தீத் தலைக்கையின் இரீஇ
 75    இழுக்கா இயல்பின் இசைச்ச 
 குமரன்
 விழுப்பெரு விதியின் வேட்டுஅவள் 
 புணர்கென
 முழுப்பெருங் கடிநகர் முழுதுடன் 
 உணரக்
 கோப்பெரு வேந்தன் யாப்புறுத்து அமைத்தபின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வதுவைச் செல்வத்து ஒளிநகைத் தோழனை 80  நீங்கல் செல்லான் பூங்கழல் 
 உதயணன்
 முதல்கோ சம்பியும் மொய்புனல் 
 யமுனையும்
 சிதர்ப்பூங் காவும் சேயிழை 
 மாதர்
 கண்டுஇனிது உறைவது காரண 
 மாக
 வண்டுஇமிர் காவின் மகதத்து அகவயின்
 85    வந்தனம் யாம்என்று அந்தணி 
 கேட்ப
 இன்இசைக் கிளவி இறைமகன் இசைத்தலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | சின்நகை 
 முறுவல் சேயிழை கேளா வாள்நகை மாதரொடு மனைவயின் 
 ஒடுங்கிய
 மாணகன் வாய்மொழி யிதுவான் மற்றெனத்
 90  தேனார் காந்தள் திருமுகை 
 அன்ன
 கூட்டுவிரல் அகற்றிக் கொழுங்கயல் 
 மழைக்கண்
 கோட்டுவனள் மேலைக் குமரனை 
 நோக்கி
 ஐயம் இன்றி அறிந்தன ளாகி
 | உரை | 
 
 |  | 
 
 |  | வையங் காவலன் வத்தவர் பெருமகன் 95    பார்ப்பன உருவொடு பதுமா 
 நங்கையை
 யாப்புடை நெஞ்சம் அழித்தனன் 
 அறிந்தேன்
 ஒப்புழி அல்லது ஓடாது 
 என்பது
 மிக்கதென் மனன்என மெல்லியல் 
 நினைஇ
 நகைத்துணைத் தோழிக்கு நன்னலத் 
 தோன்றல்
 100  தகைப்பெரு 
 வேந்தன் ஆகலின் 
 மிகச்சிறந்து
 ஆனா நன்மொழி தான்அவள் 
 கொண்டு
 கோட்டிச் செவ்வியுள் வேட்டனள் 
 விரும்பா
 உரைத்தல் ஊற்றமொடு திருத்தக இருப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | இயைந்த வதுவை எழுநாள் நீங்கலும் 105    பசும்பொன் கிண்கிணிப் பதுமா 
 நங்கையும்
 நயந்த தோழி நன்நலம் 
 காணும்
 விருப்பினள் ஆகி விரைந்துஇவண் 
 வருகெனத்
 திருக்கிளர் சிவிகையொடு சிலதரை விடுத்தலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஆரா 
 அன்பினொடு அகன்ற எழுநாள் 110  ஏழாண்டு அமைந்தன தன்மையள் 
 ஆயினும்
 நலங்கவர்ந்து அகன்ற நண்பனைக் 
 கண்டனென்
 புலம்புஇனி ஒழிக புனைவளைத் 
 தோளி
 வளங்கெழு தானை வத்தவ 
 னாம்என
 விளங்கக் கூறும் விருப்பும் நாணும்
 115    தேறிய தோழி ஏறினள் 
 சென்றுதன்
 துணைநலத் தோழிமுன் மணநலக் கோலமொடு
 | உரை | 
 
 |  | 
 
 |  | நாணிநின் றோளைநின் பூண்இள 
 வனமுலை புல்லினது உண்மையில் புல்லேன் 
 யானென
 மெல்லியன் மாதர் நகுமொழி பயிற்ற
 | உரை | 
 
 |  | 
 
 |  | 120  நினக்கும் 
 ஒக்கும்அஃது எனக்கே 
 அன்றென மனத்தின் அன்னோள் மறுமொழி 
 கொடுப்பச்
 சின்நகை முகத்தள் நன்னுதல் 
 வாவென
 நுகர்ச்சியின் உகந்த வனமுலை 
 நோவப்
 புகற்சியொடு புல்லிப் புனைஇழை கேண்மதி
 | உரை | 
 
 |  | 
 
 |  | 125    வண்டார் 
 மார்பின் வடிநூல் வயவனைக் கண்டேன் அன்ன தன்மையன் 
 ஆகிக்
 கள்ள 
 உருவொடு கரந்தகத்து 
 ஒடுங்கிநின்
 உள்ளங் கொண்ட உறுவரை 
 மார்பன்
 வசையின் நோன்றாள் வத்தவர் பெருமகன்
 130  உதையண குமரன் போலும் 
 உணர்கெனச்
 சிதைபொருள் இல்லாச் சின்நெறிக் 
 கேண்மை
 மணங்கமழ் மாதர் துணிந்தனள் உரைப்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | நின்னை வேட்ட வந்தணன் 
 அவற்குத் துன்னிய தோழனது முன்னே கேட்டனன்
 135    பெருமகன் உள்ளத்து உரிமை 
 பூண்டஎன்
 அதிரா நன்நிறை கதுவாய்ப் 
 படீஇத்
 தணத்தல் தகுமோ நினைக்கெனக் 
 கலங்கித்
 திருவிழை தெரியாள் திட்பங் கூறப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பின்னருங் காண்பாம் அன்னன் ஆகுதல் 140  பொன்னே போற்றெனத் தன்மனைப் 
 பெயர்ந்து
 நன்னுதல் நிலைமை இன்னதென்று உரைக்கவம்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மாற்றங் கேட்டுஅவள் தேற்றல் 
 வேண்டி வத்தவர் பெருமகன் வண்ணங் 
 கூட்டிச்
 சித்திரக் கிழிமிசை வித்தக மாக
 145    உண்கண் கிழமையுள் பண்பின் 
 தீராது
 மறைப்பியல் வழாஅக் குறிப்புமுதல் 
 தொடங்கி
 ஆங்குஅப் பொழுதே பூங்குழை 
 உணர
 வாக்கமை பாவை வகைபெற 
 எழுதி
 வாள்நுதல் மாதரொடு மனைவயின் இருப்புழி
 150  உருவக் கோயிலுள் இரவுக் 
 குறிவயின்
 வெருவக் குழறிய விழிகண் 
 கூகைக்
 கடுங்குரல் அறியாள் கதுமென 
 நடுங்கினள்
 ஒடுங்கீர் ஓதி என்பதை உணர்த்தென
 | உரை | 
 
 |  | 
 
 |  | மன்னவன் உரைத்த மாற்றமும் மன்னவன் 155    தன்ஒப் பாகிய தகைநலப் 
 பாவையும்
 கொண்டனள் போகிக் கோமகள் 
 குறுகி
 வண்டுஅலர் படலை வத்தவன் 
 வடிவில்
 பாவை காட்டிப் பைங்கொடி 
 இதுநம்
 ஆய்பூங் காவின் அந்தண உருவொடு
 160  கரந்துநலம் கவர்ந்த காவலன் வடிவுஎனத்
 | உரை | 
 
 |  | 
 
 |  | திருந்துஇழை மாதர் திண்ணிதின் 
 நோக்கி இன்உயிர்க் கிழவன் எழுதிய 
 பாவை
 என்னும் வேற்றுமை இல்லை 
 ஆயினும்
 ஓராங்கு இதனை ஆராய்ந்து அல்லது
 165    தீண்டலும் தேறலும் திருத்தகைத்து 
 அன்றெனப்
 பூண்தயங்கு இளமுலைப் புனைவளைத் 
 தோளி
 உள்ளே நினைஇக் கொள்ளாள் ஆக
 | உரை | 
 
 |  | 
 
 |  | நள்ளென் யாமத்து நன்நுதல் 
 வெரீஇய புள்ளின் நற்குறி உரைத்தலும் பொருக்கெனப்
 170  பெருவிறல் கொழுநன் இன்னுயிர் 
 மீட்டுப்
 பெற்ற ஒழுக்கிற் பெரியோள் 
 போலச்
 செங்கடை மழைக்கண் சேயிழைத் 
 தோழியை
 அங்கை எறிந்து தங்கா 
 விருப்பமொடு
 காமக் காதலன் கைவினைப் பொலிந்த
 175    ஓவியப் பாவையை ஆகத்து ஒடுக்கி
 | உரை | 
 
 |  | 
 
 |  | நீண்ட திண்தோள் ஈண்டுவனள் 
 நணக்கு நெஞ்சங் கொண்ட நெடுமொழி 
 யாள
 வஞ்ச உருவொடு வலைப்படுத்து 
 அனையெனப்
 புலவி நோக்கமொடு நலமொழி நயந்து
 180  கோமான் குறித்ததுந் தோழி 
 கூற்றும்
 தானொருப் பட்ட தன்மையள் 
 ஆகிச்
 செல்லா நின்ற சின்நாள் எல்லை
 | உரை | 
 
 |  | 
 
 |  | நன்னாள் தலைப்பெயல் நன்றென 
 எண்ணிக் கோட்டமில் 
 உணர்வின் கொற்றவன் குன்றாச்
 185    சேனைப் பெருங்கணி செப்பிய 
 நன்னாள்
 தானைத் தலைத்தாள் தானறி 
 உறுத்தலின்
 வையக விழவில் தானுஞ் 
 செய்கையின்
 அழுங்கல் நன்னகர் ஆவணந் 
 தோறும்
 செழும்பல் யாணர்ச் சிறப்பின் வழாஅது
 190  வண்ணப் பல்கொடி வயின்வயின் 
 எடுத்தலின்
 விண்வேய்ந்து அன்ன வியப்பிற்று ஆகிப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பெருமதில் அணிந்த திருநகர் 
 வரைப்பின் ஆய்ந்த கேள்வி மாந்தரும் 
 மகளிரும்
 ஆரா உவகையர் ஆகிய காலைச்
 195    சேரார்க் கடந்த சேதியர் 
 மகனையும்
 மதுநாறு ஐம்பால் பதுமா 
 பதியையும்
 மரபிற்கு ஒத்த மண்ணுவினை 
 கழிப்பிய
 திருவிற் கொத்துத் தீதுபிற 
 தீண்டா
 நெய்தலைப் பெய்து மையணி உயர்நுதல்
 200    இருங்களிற்று யாயானை எருத்தில் 
 தந்த
 பெருந்தண் நறுநீர் விரும்புவனர் 
 ஆட்டிப்
 பவழக் கொட்டைப் பொற்செருப்பு 
 ஏற்றித்
 திகழ்செய் கோலத்து இருமணை இரீஇச்
 | உரை | 
 
 |  | 
 
 |  | செங்கயல் கண்ணியை நங்கை தவ்வையர் 205    கோலம் மீத்தக வாலணி 
 கொளீஇத்
 திருந்தடி வணங்கி வருந்தல் 
 ஓம்பிப்
 பீடத்து இரீஇய பாடறிந்து 
 ஏற்றி
 நறுநீர்த் துவர்க்கை வயின்வயின் 
 உரீஇக்
 கறைமான் காழ்அகில் கொழும்புகை கொளீஇ
 210  நெறித்து நெறிப்பட வாருநர் 
 முடித்து
 மங்கல நறுஞ்சூட்டு மரபின் அணிந்து
 | உரை | 
 
 |  | 
 
 |  | வல்லோன் வகுத்த நல்வினைக் 
 கூட்டத்து யவனப் பேழையுள் அடைந்தோர் 
 ஏந்திய
 தமனியப் பல்கலம் தளிரியல் மாதர்
 215    ஆற்றுந் தகையன ஆற்றுளி 
 வாங்கி
 வெண்சாந்து வரித்த அம்சில் 
 ஆகத்து
 இணைமுலை இடைப்பட்டு இலங்குபு 
 பிறழும்
 துணைமலர்ப் பொற்கொடி துளங்கு 
 நுசுப்பினை
 நிலைபெற விசிப்பது போல வேர்ப்ப
 220  மேற்பால் பிறையென விளங்க 
 அமைந்தது
 ஒருகாழ் ஆரம் ஒளிபெற அணிந்து
 | உரை | 
 
 |  | 
 
 |  | திருக்கேழ்க் களிகை செவ்வனம் 
 சேர்த்திப் பைம்பொன் திலகமொடு பட்டம் 
 அணிந்த
 ஒண்கதிர் மதிமுகம் ஒளியொடு சுடரச்
 225    செம்பொன் ஓலை சேடுபடச் 
 சுருக்கி
 ஐவகை வண்ணத்து அம்நுண் 
 மேகலை
 பையரவு அல்குல் பரப்பிடை 
 இமைப்பக்
 கொய்துகொண்டு உடீஇய கோடி 
 நுண்துகில்
 மைவளர் கண்ணி மருங்குல் வருத்தக்
 230  கடுங்கதிர் முத்துங் கைபுனை 
 மலரும்
 தடந்தோள்கு ஒப்ப உடங்கணிந்து ஒழுகிய
 | உரை | 
 
 |  | 
 
 |  | சின்மயிர் முன்கைப் பொன்வளை 
 முதலாக் கண்ணார் கடகமொடு கைபுனைந்து 
 இயற்றிய
 சூடகத் தேற்ற சுடரொளிப் பவளமொடு
 235    பாடக நூபுரம் பரட்டுமிசை 
 அரற்ற
 ஆடமைத் தோளியை அணிந்துமுறை 
 பிறழாது
 வதுவைக்கு ஏற்ற மங்கலப் 
 பேரணி
 அதிநா கரிகியை அணிந்தனர் அமைய
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஓங்கிய பெரும்புகழ் உதயண குமரனைத் 240  தாங்கருந் தோழர் தாம்புனைந்து 
 அணியக்
 கடிநாள் கோலத்துக் காமன் 
 இவனென
 நெடுநகர் மாந்தர் நெஞ்சந் 
 தெளியக்
 காட்சிக்கு அமைந்த மாட்சி எய்த
 | உரை | 
 
 |  | 
 
 |  | வெற்ற 
 வேந்தன் கொற்றப் பெருங்கணி 245   கூறிய முழுத்தம் குன்றுதல் 
 இன்றி
 ஆர்வச் செய்தொழில் அகன்பெருங் 
 கோயிலுள்
 ஆயிரம் பொன்தூண் அணிமணிப் 
 போதிகைக்
 காய்கதிர் முத்தம் கவினிய 
 அணிமின்
 அத்தூண் நடுவண் ஒத்த உருவின
 250  சந்தனப் பெருந்தூண் ஒன்பது 
 நாட்டிய
 மைந்தர் அழகிற்கு ஏற்ற ... ... ... 
 ...
 ... ... ... ... ... ... ... ... 
 ...
 அழல்மணி நெடுமுடி அரசருள் 
 அரசன்
 நிலமமர் செங்கோல் நித்திலம் 
 ஏர்தரத்
 தலைமலை படலைத் தருசகன் புகுந்து
 255    தீவேள் சாலை திறத்துளி 
 மூட்டிப்
 புகுதுக வத்தவன் என்றலின் 
 பூந்தார்
 அரசிளங் குமரரொடு அண்ணல் புகுதரக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கதிர்மதி 
 முகத்தியைக் காவல் கண்ணி ஆயிரத்து எண்மர் பாங்கியர் அன்னோர்
 260  பாசிழைத் தோழியர் பாடகஞ் 
 சுடரத்
 தண்பெரும் பந்தருள் கண்பிணி 
 கொள்ள
 உயர்வினும் ஒழுக்கினும் ஒத்தவழி 
 வந்த
 மங்கல 
 மன்னற்கு மந்திர விழுநெறி
 ஆசான் முன்னின்று அமையக் கூட்டித்
 265    தீமாண் புற்ற திருத்தகு பொழுதில்
 | உரை | 
 
 |  | 
 
 |  | புதுமலர்க் கோதைப் பூந்தொடிப் 
 பணைத்தோள் பதுமா நங்கையைப் பண்புணப் 
 பேணி
 மணநல மகளிர் மரபிற்கு 
 ஒத்தவை
 துணைநல மகளிரொடு துன்னிய காதல்
 270  மூதறி மகளிர் முடித்த பின்றை
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஏதம்இல் 
 காட்சி ஏயர் பெருமகன் நன்நுதல் மாதரை நாட்கடிச் 
 செந்தீ
 முன்முதல் இரீஇ முறைமையில் 
 திரியா
 விழுத்தகு வேள்வி ஒழுக்கியல் ஓம்பிச்
 275    செம்பொன் பட்டம் பைந்தொடிப் 
 பாவை
 மதிமுகம் 
 சுடர மன்னவன் சூட்டித்
 திருமணிப் பந்தருள் திருக்கடங் கழிப்பி
 | உரை | 
 
 |  | 
 
 |  |             
 ஒருமைக்கு ஒத்த ஒன்றுபுரி 
 ஒழுக்கின்வல்லோர் வகுத்த வண்ணக் கைவினைப்
 280  பல்பூம் பட்டில் பரூஉத்திரள் 
 திருமணிக்
 காலொடு பொலிந்த கோலக் 
 கட்டில்
 கடிநாள் செல்வத்துக் காவிதி 
 மாக்கள்
 படியில் திரியாது படுத்தனர் 
 வணங்கப்
 பட்டச் சின்நுதல் பதுமா பதியொடு
 285    கட்டில்ஏ றினனால் கருதியது முடித்தென்.
 (22.பதுமாபதி வதுவை 
 முற்றிற்று) | உரை | 
 
 |  |  |  |