24. மேல்வீழ்
வலித்தது
|
இதண்கண் : உதயணனுக்குத் தருசகன்
விடை கொடுத்தலும், உதயணன் தருசகன்பால் கூறுதலும், உதயணன் செயலும், தம்பியருடைய வரவை
வயந்தகன் கூறலும், அது கேட்ட உதயணன் செயலும், படைகள் வருதலும், தம்பியர் உதயணனை
வணங்கிப் புலம்பிக் கூறுதலும், உதயணன் தம்பியரைத் தழுவிக் கூறுதலும், உதயணன்
அமைச்சர்களுடன் ஆராய்தலும், வருடகாரன் கூறுதலும், பட்டத் தேவியின் கலக்கமும்,
குற்றேவல் மகளிரின் துயரமும், நகரத்தார் மகிழ்ச்சியும் கூறப்படும். |
|
|
இருளிடை எழுந்த இகல்அடு
பெரும்படை
அருளுடை வேந்தன் வழிதொடர்ந்து
ஒழியான்
வான்தோய் பெரும்புகழ் வத்தவர்
இறைவன்குத்
தேன்தோய்த்து அன்ன திருமொழி அளைஇ
5 இடையறவு இல்லா இன்பமொடு
உயர்ந்த
நன்குடைக் கேள்விமுதல் நின்கண்
தோன்றிய
கலக்கமில் நிலைமையுங் கைம்மாறு
இல்லதோர்
கிளைப்பெருந் தொடர்ச்சியும் பயந்தஇன்று
எமக்கென
அற்புத்தளைக் கிளவி பற்பல பயிற்றிப் |
உரை |
|
|
10 பீடுகெழு தானைப்
பிரச்சோ தனற்குக்
கூடிய கிளைமைக் குணம்பல
கூறி
ஓடுகால் இளையரை ஓலையொடு
போக்கின்
நாடுவது அல்லது அவனும்
நம்மொடு
தீது வேண்டா நிலைமையன் ஆகும்
15 மலைத்தலைத் தொடுத்த மல்லல்
பேரியாற்றுத்
தலைபெயல் மாரியில் தவிர்தல்
இன்றி
நிலைக்களந் தோறுங் கொலைப்படை
விடுத்தபின்
யானும் வேண்டின் வருகுவன் ஏனைச் |
உரை |
|
|
யானும் வேண்டின் வருகுவன்
ஏனைச்
சேண்நில மன்னர் கேண்மை உடையோர்க்கு
20 அறியப் போக்கின் அவர்களும்
வருவர்
செறியச் செய்த குறியினிர்
ஆமின்
நிலம்படக் கிடந்தநின் நேமிஅம்
தடக்கை
வலம்படு வினைய ஆகெனப்
பல்லூழ்
பொய்யா வாய்ப்புள் மெய்பெறக் கிளந்து
25 திருவளர் அகலம் இருவருந்
தழீஇப்
பிரியல் உற்ற தரிசகன்கு உரைக்கும் |
உரை |
|
|
இருமணம் எய்திய இன்பம் எல்லாம்
உருமண் ணுவாவினை
உற்றதன்
பின்னை
ஐம்முந் நாளின் அவனைச் சிறைவிடுத்து
30 எம்முன் னாகத் தருதனின்
கடனென
அமைச்சன் பெருமையும் அரசனது
ஆர்வமும்
மனத்தின் உவந்து மகதவர்
கோமான்
அதுஒருப் பட்டாங்கு அகன்ற பின்னர் |
உரை |
|
|
உதயண
குமரன் உரிமை தழீஇ 35
அடல்பேர் யானையும் அலங்குமயிர்ப்
புரவியும்
படைக்கூழ்ப் பண்டியும் பள்ளி
வையமும்
நடைத்தேர் ஒழுக்கும் நற்கோட்டு
ஊர்தியும்
இடைப்படப் பிறவும் இயைந்தகம்
பெய்து
கொடிப்படை போக்கிப் படிப்படை
நிறீஇப் 40 புடைப்படை
புணர்த்துப் புள்ளில் போகி |
உரை |
|
|
மள்ளரொடு புணர்ந்த மாண்பிற்
றாகிக்
கள்ளரொடு புணர்ந்த கட்டரண்
குறுகிப்
போர்மேற் கொண்ட புகற்சியன்
புரவலன்
ஆர்மேற் போங்கொல் அஞ்சுதக
உடைத்தெனச் 45 சேனை
மன்னர் சிந்தையுள் தேம்ப
வலிப்பது தெரிய ஒலித்துடன்
குழீஇ
விட்டனன் இருந்த காலை ஒட்டிய |
உரை |
|
|
எழுச்சி வேண்டி யூகி விட்ட
அருமறை ஓலை ஆய்ந்தனன் அடக்கி
50 வரிமலர்ப் படலை வயந்தகன் உரைக்கும் |
உரை |
|
|
பின்னிணைக் குமரர் பிங்கல
கடகர்
இன்னாக் காலை எள்ளி
வந்த
பரும யானைப் பாஞ்சால
ராயன்
அருமுரண் அழிய நூறலின் அவனமர்க்
55 காற்றா ருடைந்து நோற்றோர்
ஒடுங்கும்
குளிர்நீர் யமுனைக் குண்டுகயம்
பாய
வளிஇயல் புரவி வழிச்செல
விட்டவர்
பொன்னியல் புரிசையோர் பெண்உறை
பூமி
அவண்எதிர்ப் பட்டாஅங்கு இவணகம் விரும்பாது
60 ஈரறு திங்கள் இருந்த பின்றை |
உரை |
|
|
ஆரரண் நகர மாண்டனன் ஒழுகும்
ஆருணி அரசன் வார்பிணி
முரசம்
நிலனுடன் அதிர நெருப்பில்
காய்ந்து
தலமுதற் கெடுநோய் தரித்தல் ஆற்றார்
65 போந்தனர் போலும் புரவல
மற்றுநம்
ஓங்கிய பெருங்குலம் உயர்தற்கு
உரித்தென்று
ஆங்கவன் உரைப்ப அமர்படக் கடந்த |
உரை |
|
|
தடக்கை கூட்டித் தாங்கா
உவகையொடு
படைப்பெரு வேந்தன் பல்ஊழ் புல்லி
70 இருவயின் உலகம் இயையப்
பெற்ற
பெருமகன் போல உவகையுள்
கெழுமிப்
பொருமுரண் அண்ணல் புகன்ற பொழுதில் |
உரை |
|
|
பாடுபெறு சிறப்பின் பைந்தார்
மன்னன்
சேடுபடு அத்தம் சேர்வது பொருளென
75 அறியக் கூறிய குறிவயின்
திரியார்
முன்னீ ராயினு மகந்துடன்
புகுவோர்
பன்னீ ராயிரம் படைத்தொழில்
இளையரொடு
அற்றக் காலைக்கு அமைக்கப்
பட்ட
கொற்றத் தானையும் குழூஉக்கொண்டு ஈண்டத் |
உரை |
|
|
80 தப்பினார் என்ற
தம்பியர் வந்துஅவன்
பொற்கழல் சேவடி பொருந்தப்
புல்லி
ஓர்த்தனந் தேறி உறுதிநோக்
காது சேர்த்தியில்
செய்கையொடு சிறைகொளப்
பட்டுப்
பெருங்குடி ஆக்கம் பீடற வெருளி
85 அருங்கடம் பூண்ட அவியாக்
காதலொடு
பயந்தினிது எடுத்த படைப்பருங்
கற்பினம்
கொற்ற இறைவிக்குக் குற்றேல்
பிழையாது
ஒருங்கியாம் உறைதல் ஒழிந்ததும் அன்றி |
உரை |
|
|
இருங்கடல் வரைப்பின் இனியோர் எடுத்த
90 இறைமீக் கூறிய விராமன்
தம்பி
மறுவொடு பெயரிய மதலைக்கு
இயைந்த
ஆனாப் பெரும்புகழ் யாமும்
எய்தத்
தேனார் தாமரைத் திருந்துமலர்ச்
சேவடி
வழிபாடு டாற்றலும் வன்கணின் நீத்தனெம் |
உரை |
|
|
95 கழிபெருஞ்
சிறப்பின் காவல் வேந்தே
இம்மை என்பது எமக்குநெறி
இன்மையின்
முன்னர்ப் பிறப்பின் மூத்தோர்ப்
பிழையாது
உடன்வழிப் படூஉம் உறுதவம்
இல்லாக்
கடுவினை யாளரேம் யாம்எனக் கலங்கிப்
100 பொள்ளெனச் சென்னி பூமி
தோய
உள்ளழல் வெம்பனி உகுத்தரு
கண்ணீர்த்
துன்பமொடு இறைஞ்சிய தம்பியர்த் தழீஇ |
உரை |
|
|
இருபான் மருங்கினும் திரிதரும்
கண்ணின்
அழல்திரண் டன்ன வாலி சோர்ந்துஅவர்
105 குழல்திரண்டு அணவருங் கோல
எருத்தின்
பல்ஊழ் தெறித்துஎழப் புல்லி
மற்றுநும்
அல்லல் காண்பதற்கு அமைச்சுவழி
ஓடாப்
புல்லறி வாளனேன் செய்தது
நினைஇக்
கவற்சி வேண்டா காளைகள் இனியென |
உரை |
|
|
110 அகத்துநின்று எழுதரும்
அன்பில் பின்னிக்
குளிர்நீர் நெடுங்கடல் கொண்ட
அமிழ்தென
அளிநீர்க் கட்டுரை அயல்நின்
றோர்க்கும்
உள்ளம் பிணிப்ப ஒன்ற
வுரைத்தினி
எள்ளும் மாந்தர் எரிவாய்ப் பட்ட
115 பன்னற் பஞ்சி அன்னர்
ஆகென
வெகுளித் தீயில் கிளைஅறச்
சுடுதல்
முடிந்தது இந்நிலை முடிந்தனர் அவரெனச் |
உரை |
|
|
முடிந்தது இந்நிலை முடிந்தனர்
அவரெனச்
செப்பிய மாற்றம் பொய்ப்பது
அன்றால்
பொரக்குறை இலம்என இரப்ப இன்புற்று
120 இளையோர் தம்மோடு ஈன்றவள்கு
இரங்கிக்
களைகண் ஆகிய காதல்அம்
தோழனை
வளைஎரிப் பட்ட தெளிபேர்
அன்பின்
தளைஅவிழ் கோதையொடு தருதலும்
பொருளோ
நும்மைத் தந்துஎன் புன்மை நீக்கிய
125 உம்மைச் செய்த செம்மைத்
தவத்தன்எனத்
தம்பியர் தாமரைத் தடங்கண்
சொரியும்
வெம்பனி துடைத்துப் பண்புளி
பேணிக்
கண்ணுற வெய்திய கருமம்
போல மண்ணுறு
செல்வம் நண்ணும் நமக்கென |
உரை |
|
|
130 அன்னவை கிளந்த
பின்னர்த் தன்னோடு
ஒன்னாற் கொள்ளும் உபாயம்
நாடி
வருட காரனொடு இடவகன்
தழீஇ
அளப்பருங் கடுந்திறல் ஆருணி
ஆருயிர்
கொளப்படும் முறைமை கூறுமின் எமக்கென |
உரை |
|
|
135 வருட காரன்
வணங்கினன் கூறும்
இருளிடை மருங்கின் விரைவனர்
ஓடி
அற்றம் இதுவென ஒற்றர்
காட்டிய
நீள்நிலை நெடுமதில் ஏணி
சாத்தி உள்ளகம்
புக்கு நள்ளிருள் நடுநாள்
140 முதுநீர்ப் பௌவம் கதுமெனக்
கலங்கக்
கால்வீழ் வதுபோல் மேல்வீழ்
மாத்திரம்
விள்ளாப் படையொடு வேறுநீ
இருப்பக்
கொள்ளா வேந்தனைக் கோயிலொடு முற்றிச் |
உரை |
|
|
சேவக
நிலைஇக் காவல் தோறும்
145 ஆறுஈ ராயிரம் அறியப்
பட்ட
வீரரை விடுத்துப் போர்செயப்
போக்கித்
துயிலும் பொழுதில் துளங்கக்
குப்புற்று அயிலுறு
வெம்படை அழல
வீசிக் கதுவாய்
எஃகமொடு கடைமுதல் தோறும்
150 பதுவாய்க் காப்புறு படைத்தொழில்
இளையரைப்
பாயல் அகத்தே சாய நூறி |
உரை |
|
|
மாவும் வேழமும் மாமணித்
தேரும்
தானைக் கொட்டிலொடு ஆணக்
காப்பமைத்து
ஒன்னார்க் கடந்த உதயணன் வாழ்கென
155 இன்னாச் செய்தெம் எழில்நகர்
வௌவிய
குடிப்பகை யாளர் அடைத்தகத்
திராது
பெண்பாற் பேரணி நீக்கித்
திண்பாற் போரொடும்
ஒன்றிற் போதுமின்
விரைந்தெனக்
காரொலி முழக்கின் கடுத்தனம் ஆர்ப்பக் |
உரை |
|
|
160 கதுமென நிகழ்ந்த
கலக்கமொடு கல்என
மதிதவழ் புரிசை வளநகர்
கலங்கப்
பெருமழை நடுவண் இருளிடை
எழுந்ததோர்
கடுவன் போலக் காவலனன்
உரறி
மகிழ்ச்சி எய்தி மாற்றோர் இல்லெனும்
165 இகழ்ச்சி ஏதந் தலைத்ததுஎனக்கு
இன்றெனக் கவலை
கூராக் கலங்கினன் எழவும் |
உரை |
|
|
எழுந்த மன்னன் செழும்பூண்
அகலத்து
ஈர்நறுஞ் சாந்தத் தாரொடு
குழையப்
பரத்தையர்த் தோய்ந்தநின் பருவரை
அகலம் 170 திருத்தகைத்து
அன்றால் தீண்டுதல்
எமக்கெனப்
புலவியின் நடுங்கிப் பூப்புரை
நெடுங்கண்
தலைஅளிச் செவ்வியின் அமர்ப்பன
இமைப்ப
ஆற்றா அனந்தரொடு அசைந்த
இன்துயில்
கூற்றார்ப் பிசைப்புஇதுஎன் என்றனள் வெரீஇ |
உரை |
|
|
175 விசைப்புள் வெங்குரல்
இசைப்பக் கேட்ட
நாகப் பெதும்பையின் நடுங்கி
ஆகத்
துத்தியுந் தொடரும் முத்தொடு
புரள
ஒளிக்காசு ஒருபால் தோன்றத்
துயிற்பதத்து
அசைந்த அந்துகில் கையகத்து அசைய
180 நெகிழ்ந்த நீரில் கண்கை
யாக
முகிழ்ந்த முலைமுதல் முற்றத்து
இயைந்த
தருப்பை பொன்கொடி யாக
இரக்கமொடு
ஓருயிர்க் கணவற்கு நீர்உகுப்
பனள்போல்
முகங்கொள் காரிகை மயங்கல் கூராச் |
உரை |
|
|
185 சீரலங் காரச்
சித்திர முடிமிசைத்
தாரணி கோதை தாழ்ந்துபுறத்து
அசைய
உற்றதை அறியா தெற்றென
இரங்கி
ஆவி வெய்துயிர்ப்பு அளைஇஅகம்
உளைவனள்
தேவி திருமகன் தானை பற்றி
190 ஆகுலப் பூசலின் அஞ்சுவனள் எழவும் |
உரை |
|
|
அருமணி
திகழும் ஆய்பொன் மாடத்துத்
திருமணிக் கட்டில் பாகத்து அசைந்த
உழைக்கல மகளிர் உள்ளழல் ஊர்தரக்
குழைக்கணி கொண்ட கோல வாண்முகத்து 195
அரிபரந்து அலமரும் அச்சுறு கண்ணினர் வெருவுறு பிணையின்
விம்மாந்து எழாஅப் பட்டதை
அறியார் பகைப்புல வேந்தன்
கெட்டுஅகன் றனனால் மற்றிது என்னெனக் கோயில் மகளிர் ஆகுலப்
பூசலொடு 200 வாயிலுந் தகைப்பும்
அறியார் மயங்கவும் |
உரை |
|
|
நகரம் எல்லாம் முழுவதும்
அறிந்து
திருவார் மார்பின்எம் பெருமான்
உதயணன்
கூற்றிடம் புக்கு மீட்டும்
வந்தனன்
நம்பொருட் டாக நகரம் உற்றனன்
205 அமைச்சருந் தானும் அமைத்த
கருமம்
முடித்தனன் ஆகலின் முற்றவம்
உடையம்
அன்றிஈன் வாரான் ஆதலின்
எங்கோன்
வென்றி எய்துதல் வேண்டுதும்
நாமென
வெருப்பறை கொட்டி உருத்துவந்து ஈண்டி
210 நமக்குப்படை யாகி மிகப்புகுந்துஎற்றவும் |
உரை |
|
|
இன்னோர் அனையன இன்னா
வெய்துற
ஒன்னா மன்னனை உயிருடன்
பருகுதும்
இந்நிலை அருளென எண்ணினன்
உரைப்ப
அந்நிலை நோக்கி மன்னனும் உவந்து
215 பொருத்தம் உடைத்தென ஒருப்பாடு
எய்திப்
புள்ளும் இல்லா வொள்ளொளி
இருக்கையுள்
மறைபுறப் படாஅச் செறிவினர்
ஆகி
உளைப்பொலி மான்தேர் உதயண
னோடு வலித்தனர்
மாதோ வளைத்தனர் கொளஎன்.
(24. மேல்வீழ் வலித்தது
முற்றிற்று)
|
உரை |
|
|
|