24. மேல்வீழ் வலித்தது

 

இதண்கண் : உதயணனுக்குத் தருசகன் விடை கொடுத்தலும், உதயணன் தருசகன்பால் கூறுதலும், உதயணன் செயலும், தம்பியருடைய வரவை வயந்தகன் கூறலும், அது கேட்ட உதயணன் செயலும், படைகள் வருதலும், தம்பியர் உதயணனை வணங்கிப் புலம்பிக் கூறுதலும், உதயணன் தம்பியரைத் தழுவிக் கூறுதலும், உதயணன் அமைச்சர்களுடன் ஆராய்தலும், வருடகாரன் கூறுதலும், பட்டத் தேவியின் கலக்கமும், குற்றேவல் மகளிரின் துயரமும், நகரத்தார் மகிழ்ச்சியும் கூறப்படும்.
 
              இருளிடை எழுந்த இகல்அடு பெரும்படை
            அருளுடை வேந்தன் வழிதொடர்ந்து ஒழியான்
            வான்தோய் பெரும்புகழ் வத்தவர் இறைவன்குத்
            தேன்தோய்த்து அன்ன திருமொழி அளைஇ
      5     இடையறவு இல்லா இன்பமொடு உயர்ந்த
            நன்குடைக் கேள்விமுதல் நின்கண் தோன்றிய
            கலக்கமில் நிலைமையுங் கைம்மாறு இல்லதோர்
            கிளைப்பெருந் தொடர்ச்சியும் பயந்தஇன்று எமக்கென
            அற்புத்தளைக் கிளவி பற்பல பயிற்றிப்
 
        10     பீடுகெழு தானைப் பிரச்சோ தனற்குக்
            கூடிய கிளைமைக் குணம்பல கூறி
            ஓடுகால் இளையரை ஓலையொடு போக்கின்
            நாடுவது அல்லது அவனும் நம்மொடு
            தீது வேண்டா நிலைமையன் ஆகும்
      15    மலைத்தலைத் தொடுத்த மல்லல் பேரியாற்றுத்
            தலைபெயல் மாரியில் தவிர்தல் இன்றி
            நிலைக்களந் தோறுங் கொலைப்படை விடுத்தபின்
            யானும் வேண்டின் வருகுவன் ஏனைச்
 
              யானும் வேண்டின் வருகுவன் ஏனைச்
            சேண்நில மன்னர் கேண்மை உடையோர்க்கு
      20    அறியப் போக்கின் அவர்களும் வருவர்
            செறியச் செய்த குறியினிர் ஆமின்
            நிலம்படக் கிடந்தநின் நேமிஅம் தடக்கை
            வலம்படு வினைய ஆகெனப் பல்லூழ்
            பொய்யா வாய்ப்புள் மெய்பெறக் கிளந்து
      25    திருவளர் அகலம் இருவருந் தழீஇப்
            பிரியல் உற்ற தரிசகன்கு உரைக்கும்
 
              இருமணம் எய்திய இன்பம் எல்லாம்
            உருமண் ணுவாவினை உற்றதன் பின்னை
            ஐம்முந் நாளின் அவனைச் சிறைவிடுத்து
      30    எம்முன் னாகத் தருதனின் கடனென
            அமைச்சன் பெருமையும் அரசனது ஆர்வமும்
            மனத்தின் உவந்து மகதவர் கோமான்
            அதுஒருப் பட்டாங்கு அகன்ற பின்னர்
 
              உதயண குமரன் உரிமை தழீஇ
      35    அடல்பேர் யானையும் அலங்குமயிர்ப் புரவியும்
            படைக்கூழ்ப் பண்டியும் பள்ளி வையமும்
            நடைத்தேர் ஒழுக்கும் நற்கோட்டு ஊர்தியும்
            இடைப்படப் பிறவும் இயைந்தகம் பெய்து
            கொடிப்படை போக்கிப் படிப்படை நிறீஇப்
      40    புடைப்படை புணர்த்துப் புள்ளில் போகி
 
              மள்ளரொடு புணர்ந்த மாண்பிற் றாகிக்
            கள்ளரொடு புணர்ந்த கட்டரண் குறுகிப்
            போர்மேற் கொண்ட புகற்சியன் புரவலன்
            ஆர்மேற் போங்கொல் அஞ்சுதக உடைத்தெனச்
      45    சேனை மன்னர் சிந்தையுள் தேம்ப
            வலிப்பது தெரிய ஒலித்துடன் குழீஇ
            விட்டனன் இருந்த காலை ஒட்டிய
 
              எழுச்சி வேண்டி யூகி விட்ட
            அருமறை ஓலை ஆய்ந்தனன் அடக்கி
      50    வரிமலர்ப் படலை வயந்தகன் உரைக்கும்
 
              பின்னிணைக் குமரர் பிங்கல கடகர்
            இன்னாக் காலை எள்ளி வந்த
            பரும யானைப் பாஞ்சால ராயன்
            அருமுரண் அழிய நூறலின் அவனமர்க்
      55    காற்றா ருடைந்து நோற்றோர் ஒடுங்கும்
            குளிர்நீர் யமுனைக் குண்டுகயம் பாய
            வளிஇயல் புரவி வழிச்செல விட்டவர்
            பொன்னியல் புரிசையோர் பெண்உறை பூமி
            அவண்எதிர்ப் பட்டாஅங்கு இவணகம் விரும்பாது
      60    ஈரறு திங்கள் இருந்த பின்றை
 
              ஆரரண் நகர மாண்டனன் ஒழுகும்
            ஆருணி அரசன் வார்பிணி முரசம்
            நிலனுடன் அதிர நெருப்பில் காய்ந்து
            தலமுதற் கெடுநோய் தரித்தல் ஆற்றார்
      65    போந்தனர் போலும் புரவல மற்றுநம்
            ஓங்கிய பெருங்குலம் உயர்தற்கு உரித்தென்று
            ஆங்கவன் உரைப்ப அமர்படக் கடந்த
 
              தடக்கை கூட்டித் தாங்கா உவகையொடு
            படைப்பெரு வேந்தன் பல்ஊழ் புல்லி
      70    இருவயின் உலகம் இயையப் பெற்ற
            பெருமகன் போல உவகையுள் கெழுமிப்
            பொருமுரண் அண்ணல் புகன்ற பொழுதில்
 
              பாடுபெறு சிறப்பின் பைந்தார் மன்னன்
            சேடுபடு அத்தம் சேர்வது பொருளென
      75    அறியக் கூறிய குறிவயின் திரியார்
            முன்னீ ராயினு மகந்துடன் புகுவோர்
            பன்னீ ராயிரம் படைத்தொழில் இளையரொடு
            அற்றக் காலைக்கு அமைக்கப் பட்ட
            கொற்றத் தானையும் குழூஉக்கொண்டு ஈண்டத்
 
        80    தப்பினார் என்ற தம்பியர் வந்துஅவன்
            பொற்கழல் சேவடி பொருந்தப் புல்லி
            ஓர்த்தனந் தேறி உறுதிநோக் காது
            சேர்த்தியில் செய்கையொடு சிறைகொளப் பட்டுப்
            பெருங்குடி ஆக்கம் பீடற வெருளி
      85    அருங்கடம் பூண்ட அவியாக் காதலொடு
            பயந்தினிது எடுத்த படைப்பருங் கற்பினம்
            கொற்ற இறைவிக்குக் குற்றேல் பிழையாது
            ஒருங்கியாம் உறைதல் ஒழிந்ததும் அன்றி
 
              இருங்கடல் வரைப்பின் இனியோர் எடுத்த
      90    இறைமீக் கூறிய விராமன் தம்பி
            மறுவொடு பெயரிய மதலைக்கு இயைந்த
            ஆனாப் பெரும்புகழ் யாமும் எய்தத்
            தேனார் தாமரைத் திருந்துமலர்ச் சேவடி
            வழிபாடு டாற்றலும் வன்கணின் நீத்தனெம்
 
        95    கழிபெருஞ் சிறப்பின் காவல் வேந்தே
            இம்மை என்பது எமக்குநெறி இன்மையின்
            முன்னர்ப் பிறப்பின் மூத்தோர்ப் பிழையாது
            உடன்வழிப் படூஉம் உறுதவம் இல்லாக்
            கடுவினை யாளரேம் யாம்எனக் கலங்கிப்
      100    பொள்ளெனச் சென்னி பூமி தோய
            உள்ளழல் வெம்பனி உகுத்தரு கண்ணீர்த்
            துன்பமொடு இறைஞ்சிய தம்பியர்த் தழீஇ
 
              இருபான் மருங்கினும் திரிதரும் கண்ணின்
            அழல்திரண் டன்ன வாலி சோர்ந்துஅவர்
      105    குழல்திரண்டு அணவருங் கோல எருத்தின்
            பல்ஊழ் தெறித்துஎழப் புல்லி மற்றுநும்
            அல்லல் காண்பதற்கு அமைச்சுவழி ஓடாப்
            புல்லறி வாளனேன் செய்தது நினைஇக்
            கவற்சி வேண்டா காளைகள் இனியென
 
        110    அகத்துநின்று எழுதரும் அன்பில் பின்னிக்
            குளிர்நீர் நெடுங்கடல் கொண்ட அமிழ்தென
            அளிநீர்க் கட்டுரை அயல்நின் றோர்க்கும்
            உள்ளம் பிணிப்ப ஒன்ற வுரைத்தினி
            எள்ளும் மாந்தர் எரிவாய்ப் பட்ட
      115    பன்னற் பஞ்சி அன்னர் ஆகென
            வெகுளித் தீயில் கிளைஅறச் சுடுதல்
            முடிந்தது இந்நிலை முடிந்தனர் அவரெனச்
 
             முடிந்தது இந்நிலை முடிந்தனர் அவரெனச்
            செப்பிய மாற்றம் பொய்ப்பது அன்றால்
            பொரக்குறை இலம்என இரப்ப இன்புற்று
      120    இளையோர் தம்மோடு ஈன்றவள்கு இரங்கிக்
            களைகண் ஆகிய காதல்அம் தோழனை
            வளைஎரிப் பட்ட தெளிபேர் அன்பின்
            தளைஅவிழ் கோதையொடு தருதலும் பொருளோ
            நும்மைத் தந்துஎன் புன்மை நீக்கிய
      125    உம்மைச் செய்த செம்மைத் தவத்தன்எனத்
            தம்பியர் தாமரைத் தடங்கண் சொரியும்
            வெம்பனி துடைத்துப் பண்புளி பேணிக்
            கண்ணுற வெய்திய கருமம் போல
            மண்ணுறு செல்வம் நண்ணும் நமக்கென
 
        130    அன்னவை கிளந்த பின்னர்த் தன்னோடு
            ஒன்னாற் கொள்ளும் உபாயம் நாடி
            வருட காரனொடு இடவகன் தழீஇ
            அளப்பருங் கடுந்திறல் ஆருணி ஆருயிர்
            கொளப்படும் முறைமை கூறுமின் எமக்கென
 
        135    வருட காரன் வணங்கினன் கூறும்
            இருளிடை மருங்கின் விரைவனர் ஓடி
            அற்றம் இதுவென ஒற்றர் காட்டிய
            நீள்நிலை நெடுமதில் ஏணி சாத்தி
            உள்ளகம் புக்கு நள்ளிருள் நடுநாள்
      140    முதுநீர்ப் பௌவம் கதுமெனக் கலங்கக்
            கால்வீழ் வதுபோல் மேல்வீழ் மாத்திரம்
            விள்ளாப் படையொடு வேறுநீ இருப்பக்
            கொள்ளா வேந்தனைக் கோயிலொடு முற்றிச்
 
              சேவக நிலைஇக் காவல் தோறும்
      145    ஆறுஈ ராயிரம் அறியப் பட்ட
            வீரரை விடுத்துப் போர்செயப் போக்கித்
            துயிலும் பொழுதில் துளங்கக் குப்புற்று
            அயிலுறு வெம்படை அழல வீசிக்
            கதுவாய் எஃகமொடு கடைமுதல் தோறும்
      150    பதுவாய்க் காப்புறு படைத்தொழில் இளையரைப்
            பாயல் அகத்தே சாய நூறி
 
              மாவும் வேழமும் மாமணித் தேரும்
            தானைக் கொட்டிலொடு ஆணக் காப்பமைத்து
            ஒன்னார்க் கடந்த உதயணன் வாழ்கென
      155    இன்னாச் செய்தெம் எழில்நகர் வௌவிய
            குடிப்பகை யாளர் அடைத்தகத் திராது
            பெண்பாற் பேரணி நீக்கித் திண்பாற்
            போரொடும் ஒன்றிற் போதுமின் விரைந்தெனக்
            காரொலி முழக்கின் கடுத்தனம் ஆர்ப்பக்
 
        160    கதுமென நிகழ்ந்த கலக்கமொடு கல்என
            மதிதவழ் புரிசை வளநகர் கலங்கப்
            பெருமழை நடுவண் இருளிடை எழுந்ததோர்
            கடுவன் போலக் காவலனன் உரறி
            மகிழ்ச்சி எய்தி மாற்றோர் இல்லெனும்
      165    இகழ்ச்சி ஏதந் தலைத்ததுஎனக்கு இன்றெனக்
            கவலை கூராக் கலங்கினன் எழவும்
 
              எழுந்த மன்னன் செழும்பூண் அகலத்து
            ஈர்நறுஞ் சாந்தத் தாரொடு குழையப்
            பரத்தையர்த் தோய்ந்தநின் பருவரை அகலம்
      170    திருத்தகைத்து அன்றால் தீண்டுதல் எமக்கெனப்
            புலவியின் நடுங்கிப் பூப்புரை நெடுங்கண்
            தலைஅளிச் செவ்வியின் அமர்ப்பன இமைப்ப
            ஆற்றா அனந்தரொடு அசைந்த இன்துயில்
            கூற்றார்ப் பிசைப்புஇதுஎன் என்றனள் வெரீஇ
 
        175    விசைப்புள் வெங்குரல் இசைப்பக் கேட்ட
            நாகப் பெதும்பையின் நடுங்கி ஆகத்
            துத்தியுந் தொடரும் முத்தொடு புரள
            ஒளிக்காசு ஒருபால் தோன்றத் துயிற்பதத்து
            அசைந்த அந்துகில் கையகத்து அசைய
      180    நெகிழ்ந்த நீரில் கண்கை யாக
            முகிழ்ந்த முலைமுதல் முற்றத்து இயைந்த
            தருப்பை பொன்கொடி யாக இரக்கமொடு
            ஓருயிர்க் கணவற்கு நீர்உகுப் பனள்போல்
            முகங்கொள் காரிகை மயங்கல் கூராச்
 
        185    சீரலங் காரச் சித்திர முடிமிசைத்
            தாரணி கோதை தாழ்ந்துபுறத்து அசைய
            உற்றதை அறியா தெற்றென இரங்கி
            ஆவி வெய்துயிர்ப்பு அளைஇஅகம் உளைவனள்
            தேவி திருமகன் தானை பற்றி
      190    ஆகுலப் பூசலின் அஞ்சுவனள் எழவும்
உரை
 
              அருமணி திகழும் ஆய்பொன் மாடத்துத்
            திருமணிக் கட்டில் பாகத்து அசைந்த
            உழைக்கல மகளிர் உள்ளழல் ஊர்தரக்
            குழைக்கணி கொண்ட கோல வாண்முகத்து
      195    அரிபரந்து அலமரும் அச்சுறு கண்ணினர்
            வெருவுறு பிணையின் விம்மாந்து எழாஅப்
            பட்டதை அறியார் பகைப்புல வேந்தன்
            கெட்டுஅகன் றனனால் மற்றிது என்னெனக்
            கோயில் மகளிர் ஆகுலப் பூசலொடு
      200    வாயிலுந் தகைப்பும் அறியார் மயங்கவும்
 
              நகரம் எல்லாம் முழுவதும் அறிந்து
            திருவார் மார்பின்எம் பெருமான் உதயணன்
            கூற்றிடம் புக்கு மீட்டும் வந்தனன்
            நம்பொருட் டாக நகரம் உற்றனன்
      205    அமைச்சருந் தானும் அமைத்த கருமம்
            முடித்தனன் ஆகலின் முற்றவம் உடையம்
            அன்றிஈன் வாரான் ஆதலின் எங்கோன்
            வென்றி எய்துதல் வேண்டுதும் நாமென
            வெருப்பறை கொட்டி உருத்துவந்து ஈண்டி
      210    நமக்குப்படை யாகி மிகப்புகுந்துஎற்றவும்
 
 

            இன்னோர் அனையன இன்னா வெய்துற
            ஒன்னா மன்னனை உயிருடன் பருகுதும்
            இந்நிலை அருளென எண்ணினன் உரைப்ப
            அந்நிலை நோக்கி மன்னனும் உவந்து
      215    பொருத்தம் உடைத்தென ஒருப்பாடு எய்திப்
            புள்ளும் இல்லா வொள்ளொளி இருக்கையுள்
            மறைபுறப் படாஅச் செறிவினர் ஆகி
            உளைப்பொலி மான்தேர் உதயண னோடு
            வலித்தனர் மாதோ வளைத்தனர் கொளஎன். 

(24. மேல்வீழ் வலித்தது முற்றிற்று)