25.
அரசமைச்சு
|
இதன்கண் : ஆருணிமன்னன்
அரண்மனைக்குப் பிறர் தம்மை அறியாதபடி சென்று ஆங்கு அறியவேண்டியவற்றை ஒற்றி அறிந்து
வந்த ஒற்றர் உதயணனுக்குக் கூறுதலும், உதயணன் வருடகாரனுக்குக் கூறுதலும், வருடகாரன்
செயலும், ஆருணியின் சேனாதிபதிமகன் வருடகாரனுக்குக் கூறுதலும், வருடகாரன்
சேனாதிபதிக்குக் கூறலும், சேனாதிபதிமகன் ஆருணிக்கு அறிவித்தலும், ஆருணியின் செயலும்,
பிறவும் கூறப்படும். |
|
|
வளைத்தனர் கொள்வது வலித்தனர்
இருந்துழி
ஒளித்துஅகத்து ஒடுங்கிய ஒற்றர்
ஓடிச்
சிலைப்பொறித் தடக்கையின் சேதியர்
பெருமகற்கு
இசைத்தனர் புக்குநின்று ஏத்தினர் கூறுவர் |
உரை
|
|
|
5 தாழ்ச்சி இன்றித்
தருசகன் தமரோடு
ஏழ்ச்சியும் எறிபடை அளவும்எம்
பெருமான்
சூழ்ச்சியுஞ் சூழ்பொருள் துணிவும்
எல்லாம்
படிவ ஒற்றில் பட்டாங்கு
உணர்ந்து
கொடிஅணி வீதிக் கோநகர் வரைப்பில்
10 படியணி வாயிலும் பரப்பும்
நாயிலும்
அற்றம் பட்டுழித் தெற்றெனத் திருத்திக் |
உரை
|
|
|
குறும்புழை எல்லாங் கூடெழுக்
கொளீஇச் செறிந்த
பல்படை அறிந்தவண்
அடக்கி
வாயின் மாடமொடு நாயில் உள்வழி
15 இரவும் பகலும் இகழாக்
காப்பொடு
முரவுந் தூம்பும் முழங்குபு துவைப்ப |
உரை
|
|
|
ஆண்தகை
அமைத்துப் பாம்புரி திருத்தி அருஞ்சுழி நீத்தத்து ஆறுபுக அமைத்த
சுருங்கை வாயில் பெருங்கதவு ஒடுக்கிக் 20 கொடுந்தாழ்
நூக்கி நெடும்புணை களைந்து
நீள்நீர்க் கிடங்கிலுள் தோணி போக்கிக்
கல்லிடு கூடை பல்இடத்து இயற்றி
வில்லுடைப் பெரும்பொறி பல்வழிப் பரப்பிப் |
உரை
|
|
|
பற்றுஅறத் துறந்த படிவத்
தோரையும் 25
அற்றம் இன்றி ஆராய்ந்து
அல்லது
அகம்புக விடாஅது இகந்துசேண்
அகற்றி
நாட்டுத் தலைவரை நகரத்து
நிறீஇ
நகர மாந்தரை நாட்டிடை
நிறீஇ
ஊரூர் தோறும் உளப்பட்டு ஓவா
30 ஆர்வ மாக்களை அருஞ்சிறைக் கொளீஇ |
உரை |
|
|
ஆணை
கேட்ட அகலிடத்து எல்லாம்
ஓலை போக்கி ஒல்லைவந்து
இயைகெனப்
பேணார்க் கடந்த பிரச்சோ
தனன்கு
மாணாச் செய்தொழில் மனமுணக் காட்டி
35 அலமதித்து ஒழுகி ஆணை
எள்ளி
மிகைசெய் திருந்ததன் மேலும்
மீட்டுஇனி
மகத மன்னனும் மதுகை
ஆகப்
பகைசெய வலித்தனன் என்பது
பயிற்றி
மந்திர ஓலை போக்கிய வண்ணமும் |
உரை
|
|
|
40 வெந்திறல்
கலந்த விறல்வே சாலியொடு
சங்க மன்னர்க்குத் தம்படை
கூட்டி
விரைந்தனர் வருகென நினைந்துவிட்
டதுவும்
மன்அடு நெடுவேல் மகத
மன்னற்கு
இன்னது தருவேன் என்னொடும்
புணர்கெனத் 45 தன்னொடு
பழகிய தமர்களை விட்டதும்
இன்னவை பிறவும் பன்னின
பயிற்றிய
அறிந்தஒற் றாளர் செறிந்தனர் உரைப்ப |
உரை |
|
|
ஒற்று
மாக்களை ஒற்றரின் ஆயா
முன்தனக்கு உரைத்த மூவர் வாயவும்
50 ஒத்தது நோக்கி மெய்த்தகத்
தேறி
இரவேறு ஒளித்துச் செருமேந்
தோன்ற
வளைத்திருந்து அழிக்குவம் எனினே
மற்றவன்
வலித்தது நாடி நலத்தகு
நண்பின்
மிலைச்ச மன்னரும் கூடித் தலைத்தலை
55 வந்தவன் நிதிப்பயம் கருதி
முந்துற
முற்றுபு விடுப்பின் அற்றம் ஈனும் |
உரை |
|
|
வேண்டா
அஃதுஇவண் மீண்டுஇது கேட்கென
வாங்குசிலைத் தடக்கை வருட காரன்கு
ஓங்குபுகழ் வென்றி உதயணன் இசைக்கும் 60
நின்னொடு என்னிடை நீப்புஇவண் உண்டெனத்
துன்னிய நமர்கட்குத் தோன்றக் கூறி
அவன்குப்பாங்கு ஆகிய ஆர்வலர் உளரெனின்
மிகச்செறி வுடையையாய் விடுமதி விடூஉம்
மாற்றந் தன்னையும் ஓர்த்தனை கொண்மோ |
உரை |
|
|
65 ஆசில் செங்கோல்
அவந்தியன் மடமகள்
வாசவ தத்தையை வலிதில்
கொண்ட
மேநாள் காலை யானே
அவனைப்
பற்றுபு நம்பதி தருகுவேன்
என்றசொல்
முற்றுலகு எல்லாம் மொய்த்துஒருங்கு
தருதலின் 70 வத்தவ
மன்னனும் மெய்த்தகக்
கேட்டுக்
கனல்இரும்பு உண்ட நீரின்
விடாது
மனவயின் அடக்கி மறைந்தனன்
ஒழுகித்
தன்குறை முடிதுணைத் தான்அருள்
தோற்றி
நன்கினிது உரைக்குமவன் உரைக்கும் ஆயினும் |
உரை |
|
|
75 வெஞ்சொல்
மாற்றம் வேந்தரை உரைத்தோர்
அஞ்சுக என்னுந் தொன்மொழி
உண்மையின் நெஞ்சுநீ
நெகிழ்ந்தவன் தெளியலை
செல்லென
மணித்தகைப் பைம்பூண் மகதவர்
கோமான்
பணித்தது மறாமையில் படையென வந்தனென்
80 மற்றது மன்னவன் உற்றிவண்
செய்ததோர்
முன்னுப காரம் உடைமையின் ஆகும் |
உரை |
|
|
அன்னவன்
மதித்துத் தன்மிகத்
தருக்கும்
பெருமீக் கூற்றமும் பேணான்
பிறரொடு
செருமீக் கூற்றமுஞ் செய்கையும் வேண்டாம்
85 ஒருதலை யாக ஆற்றலன்
மற்றுஇவண்
பழிதலை நம்மேல் வருதலும்
இன்றி
நாமும் எண்ணி விட்டனம்
ஆகத்
தானே சென்று தன்வலி
அறியான்
அழியினும் நமக்குக் கழிவதொன்று இல்லை |
உரை |
|
|
90 ஆனிலைப் படாஅது
ஈன்நிலைக்
கண்ணே பற்றா
மன்னர் படையொடு புணரின்
அற்றப் படீஇயர் அதனினும்
உவத்துமென்று
இன்னவை எல்லாந் திண்ணிதின்
உரைத்தனன்
தன்னொடு தொடர்ந்த மன்னரைத்
தொகுத்துத் 95 தான்இவண்
வாரான் ஆயினும் யான்இவண்
செய்வதை எல்லாம் மெய்யெனக்
கருதுமென்று
ஐயம் இன்றி அவனுழை விட்டபின் |
உரை |
|
|
மெய்எனத் தெளிந்து மீட்டுஅவன்
விட்ட
கரும மாக்களை ஒருவயின் ஓம்பிச்
100 செறியச் செய்துஎமக்கு அறிய
விடுக்கபின்
பற்றிக் கொண்டு பற்றா
மன்னன்
ஒற்றர் இவரென உரைத்துஅறி
உறீஇக்
குற்றங் காட்டிக் கொலைக்கடம் பூட்டுதும் |
உரை |
|
|
தெற்றென நின்வயின் தெளிந்தனர் ஆகி
105 உறுபெரும் பகைமை உற்றோர்
உணர்ந்து
செறிவுகொள் வதற்குச் சென்றனர்
இசைப்ப
இதுகா ரணத்தின் இகத்தல்
பொருந்தும்
அதுகா ரணத்தின் யாமும்
தெளிவேம்
பாரப் பண்டியும் பாடிக் கொட்டிலும்
110 ஆர்எரி கொளீஇ அஞ்சினேம்
ஆகி
மலைஅரண் அல்லது நிலைஅரண்
இல்எனத்
தவதி சயந்தம் புகுதும் புக்கபின் |
உரை |
|
|
மிகுதி
அச்சம் மீட்டவன்கு
உணர்த்தி
வருக வேந்தன் பெருவிறல் பீடுஅறக்
115 கலக்கப் பொழுதே கடிது
நாமென
விலக்க நில்லா வேட்கையன்
ஆகித்
தான்புறப் படுதலின் தன்னே
போலும்
மாண்புறு வேந்தரை மதில்அகத்து
ஒழித்துப்
புறமதில் கண்ணும் பொருபடை நிறீஇ
120 எறிபடை சிறிதினொடுஅணுகிய பின்றைச் |
உரை |
|
|
சவரர் புளிஞர் கவர்உறு
கடுந்தொழில்
எழுச்சி கூறி இகல்அடு
பெரும்படை
மாட்டல் வேண்டுமென்று ஓட்டிஎத்
திசையும்
கூட்டத்து உள்ளே கூறுபடப் போக்கிச்
125 சிறுபடை ஆகிய பொழுதில்
கதுமென
உறுபடை அழித்தும்என்று உடன்றுமேல்
வந்தென
முன்னும் பின்னும் பக்கமும்
நெருக்கிஅவன்
கொள்முரண் இரிப்பின் கோள்எளி
தாம்என
உன்முரண் உதயணன் உரைத்தனன் வணங்கி |
உரை |
|
|
130 நன்றெனப் போகித்
தன்தமர்த்
தழீஇ
முன்னான் உரைத்த இன்னா
வெவ்வுரைக்கு
ஒன்னார் ஓட்டிய உதயணன்
உள்ளத்து
உவர்த்தல் அன்றியுஞ் சிவக்கும்
என்னைப்
பழியாக் கொண்டனன் அழியின் அடையெனைப்
135 பகலும் மிரவும் அகலிர்
ஆகிக்
காப்புநன்கு இகழன்மின் கருமம்
முடிதுணை
ஒப்புற ஒருவனை உறப்பெறின்
அவனொடு
தீக்குழி வலித்துயாம் தீரினும்
தீர்தும்
யாதுசெய் வாங்கொல்என்று அஞ்சினம்
பெரிதெனக் 140 காவ
லாளர்க்குக் கவன்றனன் உரைப்பப் |
உரை |
|
|
பலர்புகழ்
விழுச்சீர்ப் பாஞ்சால
ராயனொடு
செலவயர்வு உடைய சேனா
பதிமகன்
என்னுழை விடுத்தனன் இருநூ
றியானையும்
பொன்னணி புனைதார்ப் புரவி பூண்ட
145 ஐம்பது தேரும் ஆயிரங்
குதிரையும்
தன்பெயர் கொளீஇத் தான்இனிது
ஆள்கென
மன்பெருஞ் சிறப்பின் கொன்னூர்
அறுபதும்
பாஅடி மடப்பிடி பதினைந்து
இரட்டியும்
மாவடி மடக்கண் மாதர்
மென்முலை 150 நாடக
மகளிர் நால்இரு
பதின்மரும்
அடுத்து விழுநிதி பலவும்
பிறவும்
ஆணம் உடைத்தாக் கொடுப்பன் மற்றுஅவ் |
உரை |
|
|
வாள்மிகு தானை வத்தவன்
கைவிட்டு
என்னொடு கூடி ஒருவ னாகப்
155 பின்னைச் செய்வ பிறவும்
பலஎன
அன்னவும் பிறவும் அறிந்தவும்
அல்லவும்
ஆருணி உரைத்தவும் உரையா
தனவும்
ஆராய் வாளன் னகமுணக்
கிளந்துஅவன்
காரியக் கிளவியில் காரணங் காட்டலின் |
உரை |
|
|
160 ஆய்பெருங் குருசில்
அதுநனி விரும்பி
நீயே சென்றுஅவன் வாயது
கேட்டு
வலிப்பதை எல்லாம் ஒளித்தனை
உணர்ந்து
வல்லே வருதி யாயின்
எமக்கோர்
செல்சார் வாகிச் சிறந்தோய் நீஎன |
உரை |
|
|
165 எல்இருள் விடுப்ப
வெழுந்தனன்
போகி வஞ்சச்
சூழ்ச்சி வருட
காரன் தன்சொல்
எல்லாம் சென்றவன் உரைப்பக் |
உரை |
|
|
கெடல் ஊழ் ஆதலின் கேட்ட
பொழுதே
அடலருஞ் சீற்றத்து ஆருணி தெளிந்து
170 முகனறிந்து உரைத்து முன்னியது
முடிக்கும்
சகுனி கௌசிகன் வருகெனத்
தரீஇ
ஒட்டா மன்னன் உதயண
குமரனை
நட்டான் ஆகி நாட்ட
வந்த
தண்டத் தலைவன் தளர்வில் ஊக்கத்து
175 வண்தளிர்ப் படலை வருட
காரன்
நம்பால் பட்டனன் அவன்வலித்
ததைஎலாம்
திண்பாற் றாகத் தெளிந்தனன் இவனெனச் |
உரை |
|
|
சென்றவன்
காட்டி............ ஒன்றிய
கருமத்து உள்பொருள் எல்லாம் 180 சென்றறிந்து இன்னும்
வம்மின் நீரென நன்றறி
வாளர் நால்வரைப் பணிப்ப
அருளியது எல்லாம் ஆகென அடிபணிந்து
இருளிடைப் போந்தவன் குறுகினர் மறைந்துஎன்.
(25. அரசமைச்சு
முற்றிற்று)
|
உரை |
|
|
|