10. பிரச்சோதனன் தூதுவிட்டது

 

இதன்கண்: வாயிலோன் பிரச்சோதனன் தூதர் வந்தமையை உதயணனுக்குத் தெரிவித்தலும்; பதுமை என்னும் தூதியின் இயல்பும், வாசவதத்தைக்குப் பிரச்சோதனன் அளித்த பொருள்களும், பதுமை பிரச்சோதனன் ஓலையை உதயணனிடம் அளித்தலும், அவன் அதனை வாங்குதலும், அவ்வோலையில் எழுதிய செய்தியும், உதயணன் பதுமையை வினவுதலும், பதுமை விடையளித்தலும், உதயணன் கூற்றும், அவன் பண்ணிகாரங்களைக் காணுதலும், வந்தோரை உபசரித்தலும், யூகிக்குக் கூறுதலும் கூறப்படும்.
 
 

         ஒருங்குநன்கு இயைந்தவர் உறைவுழி ஒருநாள்
         திருந்துநிலைப் புதவில் பெருங்கதவு அணிந்த
         வாயில் காவலன் வந்துஅடி வணங்கி
         ஆய்கழல் காலோய் அருளிக் கேண்மதி
    5    உயர்மதில் அணிந்த உஞ்சையம் பெருநகர்ப்
         பெயர்வில் வென்றிப் பிரச்சோ தனன்எனும்
         கொற்ற வேந்தன் தூதுவர் வந்துநம்
         முற்றம் புகுந்து முன்கடை யாரென

 
           அந்தளிர்க் கோதையைப் பெற்றது மற்றவள்
   10     தந்தை தந்த மாற்றமும் தலைத்தாள்
         இன்பம் பெருக எதிர்வனன் விரும்பி   
         வல்லே வருக என்றலின் மல்கி
 
           வல்லே வருக என்றலின் மல்கிய
         மண்ணியல் மன்னர்க்குக் கண்என வகுத்த
         நீதி நன்நூல் ஓதிய நாவினள்
   15     கற்றுநன்கு அடங்கிச் செற்றமும் ஆர்வமும்
         முற்ற நீங்கித் தத்துவ வகையினும்
         கண்ணினும் உள்ளே..............
         குறிப்பின் எச்சம் நெறிப்பட நாடித்
         தேன்தோய்த் தன்ன கிளவியில் தெளிபடத்
   20    தான்தெரிந்து உணருந் தன்மை அறிவினள்
 
           உறுப்புப்பல அறுப்பினும் உயிர்முதல் திருக்கினும்
         நிறுத்துப்பல ஊசி நெருங்க ஊன்றினும்
         கறுத்துப்பல கடிய காட்டினும் காட்டாது
         சிறப்புப்பல செயினும் திரிந்துபிறிது உரையாள்
   25    பிறைப்பூண் அகலத்துப் பெருமகன் அவன்மாட்டுக்
         குறித்தது கூறுதல் செல்லாக் கொள்கையன்
 
           இன்னது செய்கென ஏவல் இன்றியும்
         மன்னிய கோமான் மனத்ததை உணர்ந்து
         முன்னியது முடிக்கும் முயற்சியள் ஒன்னார்
   30    சிறந்தன பின்னும் செயினும் அறியினும்
         புறஞ்சொல் தூற்றாது புகழும் தன்மையள்
         புல்லோர் வாய்மொழி ஒரீஇ நல்லோர்
         துணிந்த நூற்பொருள் செவிஉளம் கெழீஇப்
         பணிந்த தீஞ்சொல் பதுமை என்னும்
   35    கட்டுரை மகளொடு கருமம் நுனித்து
 
           விட்டுரை விளங்கிய விழுப்புகழ் ஆளரும்
         கற்ற நுண்தொழில் கணக்கரும் திணைகளும்
         காய்ந்த நோக்கின் காவ லாளரும்
         தேன்தார் மார்பன் திருநகர் முற்றத்துக்
 
     40    கைபுனைந் தோருங் கண்டு காணார்
         ஐஐந்து இரட்டி யவன வையமும்
         ஒள்இழைத் தோழியர் ஓரா யிரவரும்
         சேயிழை ஆடிய சிற்றில் கலங்களும்
         பாசிழை அல்குல் தாயர் எல்லாம்
   45    தம்பொறி ஒற்றிய தச்சுவினைக் கூட்டத்துச்
         செம்பொன் அணிகலம் செய்த செப்பும்
 
           தாயும் தோழியும் தவ்வையும் ஊட்டுதல்
         மேயலள் ஆகி மேதகு வள்ளத்துச்
         சுரைபொழி தீம்பால் நுரைதெளித்து ஆற்றித்
   50    தன்கை சிவப்பப் பற்றித் தாங்காது
         மகப்பா ராட்டும் தாயரின் மருட்டி
         முகைப்புரை மெல்விரல் பானயம் எய்த
         ஒளிஉகிர் கொண்டு வளைவாய் உறீஇச்
         சிறகர் விரித்து மெல்லென நீவிப்
   55    பறவை கொளீஇப் பல்லூழ் நடாஅய்த்
         தன்வாய் மழலை கற்பித்து அதன்வாய்ப்
         பரத கீதம் பாடுவித்து எடுத்த
         மேதகு கிளியும் மென்நடை அன்னமும்
 
           அடுதிரை முந்நீர் யவனத்து அரசன்
   60    விடுநடைப் புரவியும் விசும்புஇவர்ந்து ஊரும்
         கேடில் விமானமும் நீர்இயங்கு புரவியும்
         கோடி வயிரமும் கொடுப்புழிக் கொள்ளான்
         சேடிள வனமுலைத் தன்மகள் ஆடும்
         பாவை அணிதிறை தருகெனக் கொண்டுதன்
   65    பட்டத் தேவிப் பெயர்நனி போக்கி
         எட்டின் இரட்டி ஆயிர மகளிரும்
         அணங்கி விழையவும் அருளான் மற்றென்
         வணங்கிறைப் பணைத்தோள் வாசவ தத்தைக்கு
         ஒருமகள் ஆகெனப் பெருமகன் பணித்த
   70    பாவையும் மற்றதன் கோயிலும் சுமக்கும்
         கூனுங் குறளும் மேல்நாம் கூறிய
 
           நருமதை முதலா நாடக மகளிரும்
        ஆன்வீற் றிருந்த வரும்பெறல் அணிகலம்
         தான்வீற் றிருத்தற்குத் தக்கன இவைஎன
   75    முடியுங் கடகமும் முத்தணி ஆரமும்
         தொடியும் பிறவும் தொக்கவை நிறைந்த
         முடிவாய்ப் பேழையும் முரசும் கட்டிலும்
         தவிசும் கவரியும் தன்கை வாளும்
         குடையும் தேரும் இடையறவு இல்லா
   80    இருங்களி யானை இனமும் புரவியும்
         வேறுவே றாகக் கூறுகூறு அமைத்துக்
         காவல் ஒம்பிக் காட்டினிர் கொடுமின்என்று
        ஆணை வைத்த அன்னோர் பிறரும்
         நெருங்கிமேற் செற்றி ஒருங்குவந்து இறுப்பப்
 
     85    பழியில் ஒழுக்கில் பதுமை என்னும்
         கழிமதி மகளொடு கற்றோர் தெரிந்த
         கோல்வ லாளர் கொண்டனர் புக்குத்தம்
         கால்வல் இவுளிக் காவலன் காட்டத்
 
           தொடித்தோள் வேந்தன்முன் துட்கென்று இறைஞ்சினள்
   90    வடிக்கேழ் உண்கண் வயங்கிழை குறுகி
         முகிழ்விரல் கூப்பி இகழ்விலள் இறைஞ்சி
         உட்குறும் உவணம் உச்சியில் சுமந்த
         சக்கர வட்டமொடு சங்குபல பொறித்த
         தோட்டுவினை வட்டித்துக் கூட்டுஅரக்கு உருக்கி
   95    ஏட்டுவினைக் கணக்கன் ஈடறிந்து ஒற்றிய
         முடக்கமை ஓலை மடத்தகை நீட்டி
 
           மூப்பினும் முறையினும் யாப்பமை குலத்தினும்
         அன்பினும் கேளினும் என்றிவை பிறவினும்
         மாசனம் புகழும் மணிபுனைந்து இயற்றிய
  100     ஆசனத்து இழிந்த அமைதிகொள் இருக்கையன
 
           சினைக்கெடிற்று அன்ன செங்கேழ்ச் செறிவிரல்
         தனிக்கவின் கொண்ட தகைய வாக
         அருமறை தாங்கிய அந்த ணாளரொடு
         பொருள்நிறை செந்நாப் புலவர் உளப்பட
  105     ஏனோர் பிறர்க்கும் நாள்நாள் தோறும்
         கலன்நிறை பொழியக் கவியின் அல்லதை
         இலமென மலரா வெழுத்துடை அங்கையின்
         ஏற்றனன் கொண்டு வேற்றுமை இன்றிக்
         கோட்டிய முடியன் ஏட்டுப்பொறி நீக்கி
  110     மெல்லென விரித்து வல்லிதின் நோக்கிப்
 
           பிரச்சோ தனன்எனும் பெருமகன் ஓலை
         உரைச்சேர் கழற்கால் உதயணன் காண்க
         இருகுலம் அல்லது இவணகத்து இன்மையின்
         குருகுலக் கிளைமை கோடல் வேண்டிச்
  115     சேனையொடு சென்று செங்களம் படுத்துத்
         தானையொடு தருதல் தானெனக்கு அருமையின்
         பொச்சாப்பு ஓம்பிப் பொய்க்களிறு புதைஇ
         இப்படித் தருகென ஏவினேன் எமர்களை
         அன்றைக் காலத்து அந்நிலை நினையாது
  120     இன்றைக் காலத்து என்பயந்து எடுத்த
         கோமான் எனவே கோடல் வேண்டினேன்
 
           ஆமான் நோக்கி ஆயிழை தன்னொடு
         மகப்பெறு தாயோடு யானும் உவப்பப்
         பெயர்த்துஎன் நகரி இயற்பட எண்ணுக
  125     தன்அலது இலளே தையலும் தானும்
         என்அலது இலனே இனிப்பிறன் ஆகல்என்
         பற்றா மன்னனைப் பணிய நூறிக்
         கொற்றம் கொண்டதும் கேட்டனென் தெற்றென
         யான்செயப் படுவது தான்செய் தனன்இனிப்
 
    130     பாம்பும் அரசும் பகையும் சிறிதென
         ஆம்பொருள் ஓதினர் இகழார் இதனால்
         தேம்படு தாரோன் தெளிதலொன்று இலனாய்
         ஓங்குகுடை நீழல் உலகுதுயில் மடியக்
         குழவிகொள் பவரின் இகழாது ஓம்பிப்
  135     புகழ்பட வாழ்க புகழ்பிறிது இல்லை
 
           ஆகிய விழுச்சீர் அரும்பெறல் அமைச்சன்
         யூகியை எமரொடும் உடனே விடுக்க
         கருமம் உண்டுஅவன் காணல்உற் றனென்என
         ஒருமையிற் பிறவும் உரைத்தவை எல்லாம்
  140     பெருமையில் கொள்கெனப் பிரியாது புணர்த்த
         மந்திர விழுப்பொருள் மனத்தே அடக்கி
         வெந்திறல் வீரன் விளங்கிய முறுவலன்
 
          ஆனாக் காதல் அவந்திகை தன்னகர்
        மேநாள் காலை வெவ்வழல் பட்ட
  145    தீயுண் மாற்றம் வாயல எனினும்
        உரைஎழுதி வந்தஇவ் ஓலையுள் உறாக்குறை
        பழுதால் என்று பதுமையை நோக்கப்
 
          பவழச் செவ்வாய் படிமையில் திறந்து
        முகிழ்விரல் கூப்பி முற்றிழை உரைக்கும்
  150    பரும யானையிற் பற்றார் ஓட்டிய
        பெருமையின் மிக்கஎம் பெருமகன் தன்னோடு
        ஒருநாட்டுப் பிறந்த உயிர்புரை காதல்
        கண்ணுறு கடவுள் முன்னர் நின்றுஎன்
        ஒண்ணுதற்கு உற்றது மெய்கொல்என் றுள்ளிப்
  155    படுசொல் மாற்றத்துச் சுடர்முகம் புல்லெனக்
        குடைகெழு வேந்தன் கூறாது நிற்பச்
 
          சினப்போர்ச் செல்வ முன்ன மற்றுநின்
        அமைச்சரோடு அதனை ஆராய்ந் தனன்போல்
        நூல்நெறி மரபின் தானறிவு தளரான்
  160    தொடுத்த மாலை எடுத்தது போல
        முறைமையின் முன்னே தெரிய அவன்எம்
        இறைமகற்கு உரைத்தனன் இத்துணை அளவவள்
        மாய இருக்கையள் ஆய்வ தாமென
        நீட்ட மின்றுஅவள் நீயள விடினே
  165    கூட்டம் எய்தும் நாளும் இதுவென
        இன்றை நாளே எல்லை ஆகச்
        சென்ற திங்கள் செய்தவன் உரைத்தனன்
 
         ஆணம் ஆகிய வருந்தவன் வாய்மொழி
       பேணும் ஆதலின் பெருமகன் தெளிந்தவன்
  170   ஒத்த தோவது வத்தவ வந்தென
       வாழ்த்துபு வணங்கிய வயங்கிழை கேட்பத்
 
         தாழ்த்துணைத் தலைப்பொறிக் கூட்டம் போலப்
       பொய்ப்பின்று ஒத்தது செப்பிய பொருளென
       உறுதவன் புகழ்ந்து மறுவில் வாய்மொழி
  175   மனத்தமர் தோழரொடு மன்னவன் போந்து
       திருக்கிளர் முற்றம் விருப்பொடு புகுந்து
       பல்வகை மரபின் பண்ணி காரம்
       செல்வனல் எல்லாஞ் செவ்விதிற் கண்டு
 
         பல்வகை மரபின் பண்ணி காரம்
       செல்வனல் எல்லாஞ் செவ்விதிற் கண்டு
 
         வந்தோர்க்கு ஒத்த இன்புறு கிளவி
  180  அமிர்துகலந்து அளித்த அருளினன் ஆகித்
       தமர்திறந் தேவி தானுங் கேட்கென
       வேறிடம் பணித்தவர் வேண்டுவ நல்கி
 
         யாறுசெல் வருத்தம் ஊறுஇன்று ஓம்பி
       அவந்தியர் கோமான் அருளிட நூல்நெறி
  185   இகழ்ந்துபிழைப் பில்லா வியூகி சென்றுஇவண்
       நிகழ்ந்ததுங் கூறிநின் நீதியும் விளக்கி
       நெடித்தல் செல்லாது வாவென வழிநாள்
       விடுத்தனன் அவரொடு விளங்கிழை நகர்க்குஎன்.
 

10.பிரச்சோதனன் தூதுவிட்டது முற்றிற்று