இதன்கண் : வாசவதத்தையும்
பதுமாபதியும் பந்தடி காணுதலும், வயந்தகன் உதயணனுக்குக் கூறுதலும், உதயணன் மறைந்து சென்று
பந்தடி காணுதலும், இராசனை இயல்பும், பந்து வண்ணனையும், இராசனை பந்தடித்தலும்,
காஞ்சனமாலை பந்தடித்தலும், அயிராபதி பந்தடித்தலும், விச்சுவலேகை பந்தடித்தலும்,
ஆரியை பந்தடித்தலும், வாசவதத்தை தன் தோழியரை நோக்கலும், கோசல நாட்டின்
பெருமையும், கோசலத்தரசன் மகள் வண்ணனையும், கோசலத்தரசன் மகள் பந்தடித்தலும்,
வாசவதத்தை தன்னுள் நினைதலும் உதயணன் கோசலத்தரசன் மகளை விரும்பலும் கூறப்படும். |