| 1. வயாக் 
 கேட்டது   | 
 
 | இதன்கண் : உதயணன் வணிகருடைய 
 வழக்கைக் கேட்டலும், அவன் மகப்பேறு விரும்பலும், வாசவதத்தையின் செயலும், உதயணன் 
 செயலும், அவன் கனவுகாண்டலும், அதன் பயனை அறிதலும் வாசவதத்தை வயிறுவாய்த்தலும், அவள் 
 ஒரு கனவு கண்டு உதயணனுக்கு உரைத்தலும், உதயணன் அக்கனவின் பயன் கூறலும், 
 வாசவதத்தைக்குத் தோன்றிய வயா விருப்பமும், உதயணன் அவள் விருப்பத்தை வினாதலும், 
 அவள் கூறலும், அது கேட்ட உதயணன் அமைச்சரொடு ஆராய்தலும் கூறப்படும். | 
 
 |  | 
 
 |  |               
 உதையணன் குமர உவந்துண் 
 டாடிச்சிதைவில் போகமொடு செங்கோல் 
 ஒச்சி
 ஒழுகுங் காலை ஓரிடத்து 
 ஒருநாள்
 கழிபெருங் கேள்விக் கண்போன் மக்களொடு
 5          பேர்அத் தாணியுள் 
 பொருந்தச் சென்றபின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | வாரமில் 
 ஒழுக்கின் வாணிகர் 
 ஈண்டி முறையொடு சென்று முறைமையில் 
 பிழையாக்
 கரைதீர் 
 செங்கோல் காவலற்கு 
 இசைத்து
 முறைஇது கேட்கெனக் கேட்பது விரும்பி
 10          உருமண் ணுவாவினைப் 
 பெருமகன் 
 பணியா
 வினாவஅன் னாற்கு வினாவெதிர் வழாமை
 | உரை | 
 
 |  | 
 
 |  |              மூவர் 
 ஆவார் ஒருமகற்கு 
 ஒருத்திகண்மேவரத் 
 தோன்றிய மக்களம் 
 மூவரும்
 ஆன்ற கேள்வியொடு அறநெறி திரியார்
 15         மூன்றுதிறம் பட்ட 
 விருப்பினர் அவருள்
 | உரை | 
 
 |  | 
 
 |  | எறிதிரை முந்நீர் ஊடுசென்று 
 அவ்வழி உறுவிலைப் பண்டத்தின் ஒருவன் 
 வாழும்
 கடையகத்து இருந்துதன் உடையது 
 பெருக்கிப்
 பிரிவிலன் வாழும் ஒருவன் ஒருவன்
 20         அரிய பண்டம் எளிதின் 
 அடக்கிஅவை
 உரிய காலத்து உற்றது 
 பகரும்
 இன்னவை மற்றவர் இயற்கை முன்னோன்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பொலம்படு 
 தீவிற்குக் கலந்தலைப் 
 பெயர்ந்துழிச் சூழ்வளி 
 சுழற்ற வாழ்கயத்து அழுந்தினன்
 25         அழுந்தினன் என்பது கேட்டே 
 அறிவயர்ந்து
 இழிந்த 
 இருவரும் உறுகடன் கழிப்பித்
 | உரை | 
 
 |  | 
 
 |  | தவ்வையைச் 
 சேர்ந்து கவ்விதின் 
 மொழியச் சென்றதும் 
 நின்றதும் சிதைவின்று 
 எண்ணி
 நன்றுசேய் 
 வாழ்க்கை என்றெடுத்து இற்றென
 30         ஒன்றும் உரையாள் 
 ஒருமைக் 
 கோடலின்
 வென்றித் 
 தானை வீர 
 வேந்தநின்
 அடிநிழல் 
 அடைந்தனம் அதுவெம் குறையென
 | உரை | 
 
 |  | 
 
 |  | முடிவுநனி 
 கேட்டலும் முன்னோன்கு 
 அமைந்த கழிபெருங் காதலி மறுமொழி எதுவெனச்
 35         சுற்ற மாந்தர் சொல்லுவார் 
 மாறல
 உற்றவர் உரைத்தவை ஒக்கும் 
 அவனொடு
 சென்றோர் ஒருவருஞ் சிதைகலத்து 
 உய்ந்து
 வந்தோர் இல்லை மாந்தளிர் 
 மேனிக்குக்
 கருவும் உண்டே திருவமர் மார்ப
 40         
 தெய்வம்........................................
 ..................படுத்த 
 மாற்றமும் 
 தெளியாள்
 ஐயத்து உள்ளமொடு அதுவும் 
 படாளென
 இருவர் மாற்றமும் தெரிகஎன்று ஏவலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | உருமண் 
 ணுவாஅதற்கு உறுவழக்கு உரைத்தனன் 45         வருக அப்பொருள் வந்தபின் 
 அவ்வழி
 இருவரும் 
 இலைச்சித்து ஈரறு 
 திங்கட்கு
 ஒருவன் 
 கையகத்து இருக்க 
 இருந்தபின்
 மிக்கோண் 
 மாற்றம் மெய்யெனின் 
 மேலை
 இயல்பே 
 ஆகு அதுதான் 
 அன்றி
 50         
 மறுவில் கொள்கையோர் சிறுவனைப் 
 பெறினே
 உறுபொருள் 
 மற்றிவர் உரைக்கவும் 
 பெறாஅர்
 வெண்குடை 
 நிழற்றிய வேந்தே 
 பெண்பெறின்
 புறநடை 
 ஒழித்திவர் திறவதின் 
 எய்துப
 நூல்நெறி 
 இதுவென நுழைந்தவன் உரைத்தலும்
 55         ஆனா அவரவர் அகத்திறத்து 
 அடைதர
 | உரை | 
 
 |  | 
 
 |  | அவையம் போக்கி நவையறு 
 நெஞ்சினன் மக்கள் 
 இன்றெனின் மிக்குயர் 
 சிறப்பின்
 என்குலம் 
 இடையறும் எனநினைந்து 
 ஆற்றான்
 கொற்றத் தேவியைக் குறுகலும் அவளும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 60        பொற்றொடித் 
 தோழியர் புரிந்துபுறங் 
 காப்பத் திருவொடு பூத்த நாள்வரை 
 இறந்தபின்
 பெருவிறல் நோன்பிகட்குப் பெலிக்கொடை 
 ஆற்றி
 ஆசிடைக் 
 கிளவி அவரின் 
 எய்தி
 மாசில் 
 கற்பின் மங்கலக் கோலமொடு
 65         உருவமை மாடத்து ஓரிடத்து 
 திருந்தோள்
 | உரை | 
 
 |  | 
 
 |  | விரிகொடிப் 
 பவழத்தின் விரிந்த 
 சேவடிக் காழகில் 
 புகைநிறம் கடுக்கும் 
 தூவிப்
 பல்சிறைப் 
 புறவம் பரிந்துடன் 
 ஆடி
 அவ்வாய்க் 
 கொண்ட ஆரிரை 
 அமிழ்தம்
 70         செவ்வாய்ப் 
 பார்ப்பிற்குச் சேர்ந்துஅவண் 
 சொரிதலின்
 உறுபசி 
 வருத்தமும் அன்பினது 
 பெருமையும்
 திறவதின் 
 நோக்கித் தெரியா நின்றுழி
 | உரை | 
 
 |  | 
 
 |  | வேந்தனும் 
 வினவியவள் வேட்கை 
 விரும்பித் தாம்படு 
 மாந்தர்க்குத் தண்ணீர் 
 போலும்
 75         காம்படு 
 தோளியொடு கலந்துமகிழ்வு எய்திய
 | உரை | 
 
 |  | 
 
 |  | துயிலிடை 
 யாமத்துத் துளங்குபு 
 தோன்றி அயில்வேல் நெடுங்கண்ஓர் ஆயிழை 
 அணுகி
 அருளும் எம்மிறை எழுபுவி 
 அளித்தற்குப்
 பொருளும் 
 அதுவே போதுக என்றலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 80        
 யாரவன் கூறென அவ்வழி 
 இறைஞ்சிப் பேரவள் உரைத்தலின் பெருமகன் 
 நோக்கித்
 துன்பமும் மின்பமுந் துறக்கல் 
 ஆற்றா
 மன்பெருந் தேவியொடு செலஉளம் 
 அமர்தலின்
 மற்றதை உணர்த்தி முற்றிழை 
 எழுகெனப்
 85          
 பற்றுநள் உடனே பறந்துவிசும்பு 
 இவர
 மேலுங் கீழும் மேவர 
 நோக்கி
 மாசறு மகளிர் மம்மர் 
 எய்தி
 ஆனாக் கனவிடை மாநிதிக் 
 கிழவன்
 விளங்கவை நாப்பண் துளங்கினர் புகுதலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 90          அரிமா 
 சுமந்த அமளி 
 காட்டத் திருமாண் 
 ஆகத்துத் தேவியொடு 
 ஏறி
 இருந்த 
 பொழுதின் பொருந்திய 
 வல்லியுள்
 வெள்ளேறு 
 கிடந்த வெண்தா 
 மரைப்பூக்
 கொள்வழி 
 யெழுதிய கொடுஞ்சி 
 உடைத்தேர்ப்
 95          
 பொன்னியல் தொடரின் புதல்வன் இருத்தலின்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பின்னர்ப் 
 பூவின் பிக்கம் 
 நோக்கிப் பிறழ்ந்த ஆழியிற் பெருநடு 
 வாக
 உறழ்ந்துநனி 
 அழுத்திய உறுபொன் 
 னல்லியின்
 ஒருமுடி 
 பிறழ்தலின் அருமையொடு 
 விரும்பிக்
 100          
 கொண்டது வாஎனக் கோமகள் 
 கொண்டு
 வண்டுஅவிழ் 
 நறுந்தார் வத்தவன்கு 
 அருளி
 நெடித்தனென் 
 எழுகென விடுத்தனள் போகக்
 | உரை | 
 
 |  | 
 
 |  | கொடிக்கோ சம்பி குறுகித் 
 தமரிடை முடிக்கலம் எல்லாம் முறைமையின் 
 நோக்கிக்
 105          
 கைவினைக் கம்மத்துக் கதிர்ப்புநனி 
 புகழ்ந்து
 வேண்டுக இதுவென விளங்கிழைக் 
 கோமகட்கு
 ஈயக் 
 கொண்டுதன் இடைமுலைச் 
 சேர்த்தலும்
 காய்கதிர்க் 
 கனலியில் கதுமெனப் 
 போழ்ந்து
 புக்கது வீழ்தலும் பொருக்கென 
 வெரீஇ
 110          
 எழுந்த மாதரொடு இறைவனும் ஏற்றுக்
 | உரை | 
 
 |  | 
 
 |  |               
 கழிந்த கங்குல் கனவினை 
 வியந்துநூல்நெறி மரபின் வல்லோன் 
 பேணிக்
 கோலத் தேவியொடு கோமகன் 
 வினவக்
 கனவது விழுப்பம் மனவயின் ஆய்ந்து
 115          விளங்கொளி 
 விஞ்சையர் வெள்ளியம் 
 பெருமலைத்
 துளங்கா வாழி தோன்ற 
 வேந்தும்
 வெய்யோன் பெறுதலும் விறல்அவன் 
 எய்தலும்
 ஐயம் இல்லைஎன்று ஆய்ந்தவன் 
 உரைப்பப்
 புதல்வன்அஃது எதிர்மை பொருளென விரும்பித்
 120          திதலை அல்குல் 
 தேவியொடு 
 மகிழ்ந்து
 செல்லா நின்ற சின்நாள் எல்லையுள்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பல்கதிர் மதியமொடு பரந்துவிசும்பு 
 ஓடும் வியந்த நற்கோள் உயர்ந்துழி 
 நோக்கிப்
 பெயர்ந்துவரு 
 நாளில் பெருமையின் 
 வழாத
 125          
 நன்னாள் அமயத்து மின்என 
 நுடங்கி
 விஞ்சையர் ஆழி உருட்டும் வேட்கையொடு
 | உரை | 
 
 |  | 
 
 |  | அம்செந் தாமரை அகவயின் 
 நிறைந்த வெண்பால் புள்ளின் விழையுந் 
 தன்மையொடு
 அவந்தியன் மடமகள் அணிவயிற் 
 றங்கண்
 130          
 வியந்துதலை பனிக்கும் வென்றி 
 வேட்கையொடு
 சேட்படு 
 விசும்பில் சென்றவன் 
 அவ்வழிப்
 பொய்ப்படு 
 குருசில் பொலிவொடு பட்டென
 | உரை | 
 
 |  | 
 
 |  | முயக்கமைவு இல்லா நயப்புறு 
 புணர்ச்சியுள் அணிநிற அனிச்சம் பிணியவிழ்ந்து 
 அலர்ந்த
 135           
 அந்தன் நறுமலர் அயர்ப்பில் 
 தாங்கும்
 செந்தளிர்...........................வருந்த 
 வசாஅய்
 நிலாஉறழ் 
 பூந்துகில் ஞெகிழ்ந்திடைத் 
 தோன்றக்
 கலாவப் பல்காழ் கச்சுவிரிந்து 
 இலங்கத்
 திருநுதல் திலகமும் சுமத்தல் ஆற்றாள்
 | உரை | 
 
 |  | 
 
 |  | 140         
 பெருமதர் மழைக்கண் இன்துயில் 
 பேணிய இன்ப யாமம் இயைந்த 
 வைகறை
 நன்பெருங் கனவின் நடுங்குவனள் 
 ஏற்று
 வெள்ளத் தானை வியலக 
 வேந்தன்
 பள்ளி ஏற்றபின் பதன்அறிந்து வணங்கி
 145         என்னைகொல் அடிகள் 
 இன்றியான் 
 கண்டது
 விண்ணக மருங்கில் வெண்முகில் 
 புரைவதோர்
 அண்ணல் யானைஎன் கண்ணுற 
 வந்துதன்
 ஆய்வலித் தடக்கை சுருட்டுபு 
 முறுக்கிஎன்
 வாய்புக்கு அடங்கிய பொழுதில் சேய்நின்று
 | உரை | 
 
 |  | 
 
 |  | 150         அந்தர 
 மருங்கில் துந்துபி 
 கறங்கப் புகழ்ந்துபலர் 
 ஏத்தப் பொருக்கெனப் 
 பெயர்த்தே
 உமிழ்ந்தனென் உமிழப் பரந்துஇறகு 
 தோற்றிப்
 பல்லோர் மருளப் பறந்துசென்று 
 உயர்ந்ததோர்
 வெண்மலை மீமிசை ஏறி வேட்கையின்
 155          விண்மிசை ஞாயிறு 
 விழுங்கக் 
 கண்டனென்
 என்னைகொல் இதனது பயமென 
 வினவிய
 நன்னுதல் கேட்ப மன்னவன் உரைக்கும்
 | உரை | 
 
 |  | 
 
 |  | மறுவின்று 
 விளங்கு மறப்போர் 
 ஆற்றலோர் சிறுவனைப் பெறுதி சேயிழை மற்றவன்
 160           உறுதிரைப் 
 பக்கமும் வானமும் 
 போகி
 அச்சமில் ஆற்றலோர் விச்சா 
 தரர்இடை
 ஆழி உருட்டுமென்று அறிந்தோர் 
 உரைத்த
 வீழா 
 விழுப்பொருள் மெய்பெறக் 
 கண்டனை
 தீதின்று ஆகித் திருவொடு 
 புணர்கென
 165           
 மாதாங்கு குருசிலும் அதுவே 
 இறுப்பப்
 போதேர் கண்ணியும் புகன்றனள் ஒழுக
 | உரை | 
 
 |  | 
 
 |  | மங்குல் விசும்பின் வளர்பிறை 
 போலவும் பொங்குநீர்ப் பொய்கையில் பூவே 
 போலவும்
 நாளினும் நாளினும் நந்திவனப்பு 
 எய்தித்
 170           
 தோளுந் தாளும் உடம்புந் 
 தலையும்
 உகிரும் மயிரும் ஒருங்குகுறைவு 
 இன்றி
 ஓதிய வனப்போடு உயர்நெறி 
 முற்றி
 அருவினை விச்சை அவன்ஊடு 
 உறைதலின்
 பெருமலை உலகம் பேணும் 
 அவாவொடு
 175           பறத்தல் 
 ஊற்றம் பிறப்பப் 
 பைம்பூண்
 சிறப்பொடு புணர்ந்த சேயிழை 
 மாதர்
 குடர்வயின் 
 கிடந்த குழவியது 
 உள்ளத்து
 இடர்வகை 
 அறியாள் எவ்வம் எய்தி
 | உரை | 
 
 |  | 
 
 |  | உணர்ந்தோர் உரைப்ப உரையில் 
 கேட்கும் 180          
 இருவகை இமயமும் பெருகுபுனல் 
 யாறும்
 நீலப் பருப்பமும் தீபமும் 
 அப்பால்
 கோல அருவியம் சிகரியும் 
 ஞாலத்து
 ஒருநடு வாகிய உயர்பெருங் 
 குன்றமும்
 பெருமலை 
 பிறவும் அருமையொடு புணர்ந்த
 | உரை | 
 
 |  | 
 
 |  |    
 185          இறுவரை ஏறி 
 இமையோடு 
 ஆடும்நறுமலர்ப் 
 பொய்கையும் நந்தா 
 வனமும்
 உத்தர 
 குருவினோடு ஒத்தவை 
 பிறவும்
 ஆண்டுபோந்து எழுந்து காண்டல்உற 
 விழையா
 ஐவகைச் சோதிடர் அணிபெறு கற்பம்
 190          கைவைத்து ஒழியக் 
 கடந்துசென்று 
 உப்பால்
 அமரா பதியும் அந்தரத்து 
 எல்லையும்
 நுகர்பூங் காவும் நோக்குபு 
 வருதற்கு
 உற்றதென் மனனெனும் உணர்வினள் ஆகி
 | உரை | 
 
 |  | 
 
 |  | மற்றுப்பிறர்க்கு 
 உரையாள் மனத்தே 
 அடக்கி 195         
 ஈர்க்கொடு பிறந்த இளந்தளிர் 
 போல
 மாக்கேழ் 
 ஆகமும் மருங்குலும் 
 வருந்த
 முலைக்கண் கறுப்பத் தலைக்கவின் எய்தி
 | உரை | 
 
 |  | 
 
 |  |               
 வளம்பால் தன்மையின் வந்துபுடை 
 அடுத்தஇளம்பாற்கு 
 எதிர்ந்த இடத்த 
 ஆகிய
 200         
 முலைபொறை யாற்றா முனிவின்று 
 அலையும்
 மலைபொறுத்து என்ன மகனையும் 
 தாங்கி
 நொந்துபுறம் மெலிந்தது அன்றியும் 
 அந்தரத்து
 இயங்கல் 
 வேட்கையன் இருக்குநன் 
 ஆதலின்
 அயங்கவன் அழற்ற அசைவு முந்துறீஇ
 | உரை | 
 
 |  | 
 
 |  | 205         முக்கூட்டு 
 அரத்த ஒண்பசை 
 விலங்கி நெய்க்கூட்டு இலங்கு நித்திலம் 
 நிகர்த்துக்
 கூரிய 
 ஆகிய நேரியன் 
 முறுவல்
 செவ்வாய் திறந்து சில்லென 
 மிழற்ற
 ஐதேந்து 
 அல்குலும் ஆகமும் அசைஇ
 210   
        மைதோய் கண்ணி மதியின் மெலியப்
 | உரை | 
 
 |  | 
 
 |  | பசைவுறு 
 காதல் பட்டத் 
 தேவி அசைவுறு வெந்நோய் றிந்த 
 அரசன்
 அசாஅ வரும்பொருள் யாதென 
 வுசாஅய்க்
 கேட்பஅஃது உரையாள் வேட்பது 
 விளம்பின்
 215        
   நயந்தோர்க்கு ஆயினும் நாணுத்தக்கு 
 அன்றென
 உயர்ந்தோர் கொள்கையின் ஒண்தொடி 
 ஒதுங்க
 மன்னவன் மறுத்து மடவோய் 
 மற்று
 ...............................................................
 நின்உயிர் 
 மதியாய் ஆயின் 
 என்னுயிர்
 யானும் வேண்டேன் ஆயிழை கேண்மோ
 | உரை | 
 
 |  | 
 
 |  | 220         கூடிய கொழுநன் 
 கொழுங்குடர் 
 மிசைகுற ஓடிய உள்ளத்து உயர்துணைத் 
 தேவியைக்
 குறையில் கேட்டுக் கொடுத்துநோய் 
 தணித்த
 மறைஇல் பெரும்புகழ் மன்னவன் 
 போல
 என்னது ஆயினும் ஈகுவன் 
 மற்றுநின்
 225        
  இன்னா வெந்நோய் எத்திறத்து 
 ஆயினும்
 ஒடுங்கா உள்ளமொடு அகற்றுவல் 
 யான்எனக்
 கடுஞ்சூள் அறைஇக் காவலன் 
 கேட்ப
 | உரை | 
 
 |  | 
 
 |  | ஒழுக்கினும் 
 கற்பினும் இழுக்கம் 
 இன்றெனப் பசைஇய கேள்வனைப் பைந்தொடி 
 வணங்கி
 230        அசையா 
 ஊக்கத்து அடிகளென் 
 உள்ளம்
 விசைகொள் 
 நோன்றாள் விச்சா 
 தரர்போல்
 மிசையே 
 சென்றுற மேன்மேல் 
 நெருங்கும்
 இசையா அரும்பொருள் இற்றென 
 உரைத்தல்
 வசைதீர் வையத்து நகையது 
 ஆதலின்
 235        
 சொல்லியது இலன்என மெல்லியல் மிழற்ற
 | உரை | 
 
 |  | 
 
 |  |              
 எளிதெனக்கு என்ன அமைச்சரோடு 
 ஆராய்ந்துஒளிமலர்க் 
 கோதாய் உற்றபின் 
 அறிஎனத்
 துன்பம் நீக்குந் தோழரோடு 
 இயைந்தே
 இன்பக் கோட்டியுள் இனிதின் 
 இருந்து
 240        பேராக் 
 கழல்கால் பெருந்தகை 
 வேந்தன்
 ஆர்வவேய்த் தோளி அசாநோய் 
 தீரிய
 ஆராய்ந் தனனால் அமைச்சரோடு ஒருங்குஎன்.
                 1. 
 வயாக்கேட்டது 
 முற்றிற்று                    
    | உரை | 
 
 |  |  |  |