1. வயாக்
கேட்டது
|
இதன்கண் : உதயணன் வணிகருடைய
வழக்கைக் கேட்டலும், அவன் மகப்பேறு விரும்பலும், வாசவதத்தையின் செயலும், உதயணன்
செயலும், அவன் கனவுகாண்டலும், அதன் பயனை அறிதலும் வாசவதத்தை வயிறுவாய்த்தலும், அவள்
ஒரு கனவு கண்டு உதயணனுக்கு உரைத்தலும், உதயணன் அக்கனவின் பயன் கூறலும்,
வாசவதத்தைக்குத் தோன்றிய வயா விருப்பமும், உதயணன் அவள் விருப்பத்தை வினாதலும்,
அவள் கூறலும், அது கேட்ட உதயணன் அமைச்சரொடு ஆராய்தலும் கூறப்படும். |
|
|
உதையணன் குமர உவந்துண்
டாடிச்
சிதைவில் போகமொடு செங்கோல்
ஒச்சி
ஒழுகுங் காலை ஓரிடத்து
ஒருநாள்
கழிபெருங் கேள்விக் கண்போன் மக்களொடு
5 பேர்அத் தாணியுள்
பொருந்தச் சென்றபின்
|
உரை
|
|
|
வாரமில்
ஒழுக்கின் வாணிகர்
ஈண்டி
முறையொடு சென்று முறைமையில்
பிழையாக் கரைதீர்
செங்கோல் காவலற்கு
இசைத்து
முறைஇது கேட்கெனக் கேட்பது விரும்பி
10 உருமண் ணுவாவினைப்
பெருமகன்
பணியா
வினாவஅன் னாற்கு வினாவெதிர் வழாமை |
உரை |
|
|
மூவர்
ஆவார் ஒருமகற்கு
ஒருத்திகண் மேவரத்
தோன்றிய மக்களம்
மூவரும்
ஆன்ற கேள்வியொடு அறநெறி திரியார்
15 மூன்றுதிறம் பட்ட
விருப்பினர் அவருள் |
உரை |
|
|
எறிதிரை முந்நீர் ஊடுசென்று
அவ்வழி
உறுவிலைப் பண்டத்தின் ஒருவன்
வாழும்
கடையகத்து இருந்துதன் உடையது
பெருக்கிப்
பிரிவிலன் வாழும் ஒருவன் ஒருவன்
20 அரிய பண்டம் எளிதின்
அடக்கிஅவை
உரிய காலத்து உற்றது
பகரும்
இன்னவை மற்றவர் இயற்கை முன்னோன் |
உரை |
|
|
பொலம்படு
தீவிற்குக் கலந்தலைப்
பெயர்ந்துழிச் சூழ்வளி
சுழற்ற வாழ்கயத்து அழுந்தினன்
25 அழுந்தினன் என்பது கேட்டே
அறிவயர்ந்து இழிந்த
இருவரும் உறுகடன் கழிப்பித் |
உரை |
|
|
தவ்வையைச்
சேர்ந்து கவ்விதின்
மொழியச் சென்றதும்
நின்றதும் சிதைவின்று
எண்ணி நன்றுசேய்
வாழ்க்கை என்றெடுத்து இற்றென
30 ஒன்றும் உரையாள்
ஒருமைக்
கோடலின் வென்றித்
தானை வீர
வேந்தநின் அடிநிழல்
அடைந்தனம் அதுவெம் குறையென |
உரை |
|
|
முடிவுநனி
கேட்டலும் முன்னோன்கு
அமைந்த
கழிபெருங் காதலி மறுமொழி எதுவெனச்
35 சுற்ற மாந்தர் சொல்லுவார்
மாறல
உற்றவர் உரைத்தவை ஒக்கும்
அவனொடு
சென்றோர் ஒருவருஞ் சிதைகலத்து
உய்ந்து
வந்தோர் இல்லை மாந்தளிர்
மேனிக்குக்
கருவும் உண்டே திருவமர் மார்ப
40
தெய்வம்........................................ ..................படுத்த
மாற்றமும்
தெளியாள்
ஐயத்து உள்ளமொடு அதுவும்
படாளென
இருவர் மாற்றமும் தெரிகஎன்று ஏவலின் |
உரை |
|
|
உருமண்
ணுவாஅதற்கு உறுவழக்கு உரைத்தனன்
45 வருக அப்பொருள் வந்தபின்
அவ்வழி இருவரும்
இலைச்சித்து ஈரறு
திங்கட்கு ஒருவன்
கையகத்து இருக்க
இருந்தபின் மிக்கோண்
மாற்றம் மெய்யெனின்
மேலை இயல்பே
ஆகு அதுதான்
அன்றி 50
மறுவில் கொள்கையோர் சிறுவனைப்
பெறினே உறுபொருள்
மற்றிவர் உரைக்கவும்
பெறாஅர் வெண்குடை
நிழற்றிய வேந்தே
பெண்பெறின் புறநடை
ஒழித்திவர் திறவதின்
எய்துப நூல்நெறி
இதுவென நுழைந்தவன் உரைத்தலும்
55 ஆனா அவரவர் அகத்திறத்து
அடைதர |
உரை |
|
|
அவையம் போக்கி நவையறு
நெஞ்சினன் மக்கள்
இன்றெனின் மிக்குயர்
சிறப்பின் என்குலம்
இடையறும் எனநினைந்து
ஆற்றான்
கொற்றத் தேவியைக் குறுகலும் அவளும் |
உரை |
|
|
60 பொற்றொடித்
தோழியர் புரிந்துபுறங்
காப்பத்
திருவொடு பூத்த நாள்வரை
இறந்தபின்
பெருவிறல் நோன்பிகட்குப் பெலிக்கொடை
ஆற்றி ஆசிடைக்
கிளவி அவரின்
எய்தி மாசில்
கற்பின் மங்கலக் கோலமொடு
65 உருவமை மாடத்து ஓரிடத்து
திருந்தோள் |
உரை |
|
|
விரிகொடிப்
பவழத்தின் விரிந்த
சேவடிக் காழகில்
புகைநிறம் கடுக்கும்
தூவிப் பல்சிறைப்
புறவம் பரிந்துடன்
ஆடி அவ்வாய்க்
கொண்ட ஆரிரை
அமிழ்தம் 70 செவ்வாய்ப்
பார்ப்பிற்குச் சேர்ந்துஅவண்
சொரிதலின் உறுபசி
வருத்தமும் அன்பினது
பெருமையும் திறவதின்
நோக்கித் தெரியா நின்றுழி |
உரை
|
|
|
வேந்தனும்
வினவியவள் வேட்கை
விரும்பித் தாம்படு
மாந்தர்க்குத் தண்ணீர்
போலும் 75 காம்படு
தோளியொடு கலந்துமகிழ்வு எய்திய |
உரை
|
|
|
துயிலிடை
யாமத்துத் துளங்குபு
தோன்றி
அயில்வேல் நெடுங்கண்ஓர் ஆயிழை
அணுகி
அருளும் எம்மிறை எழுபுவி
அளித்தற்குப் பொருளும்
அதுவே போதுக என்றலின் |
உரை
|
|
|
80
யாரவன் கூறென அவ்வழி
இறைஞ்சிப்
பேரவள் உரைத்தலின் பெருமகன்
நோக்கித்
துன்பமும் மின்பமுந் துறக்கல்
ஆற்றா
மன்பெருந் தேவியொடு செலஉளம்
அமர்தலின்
மற்றதை உணர்த்தி முற்றிழை
எழுகெனப் 85
பற்றுநள் உடனே பறந்துவிசும்பு
இவர
மேலுங் கீழும் மேவர
நோக்கி
மாசறு மகளிர் மம்மர்
எய்தி
ஆனாக் கனவிடை மாநிதிக்
கிழவன்
விளங்கவை நாப்பண் துளங்கினர் புகுதலின் |
உரை
|
|
|
90 அரிமா
சுமந்த அமளி
காட்டத் திருமாண்
ஆகத்துத் தேவியொடு
ஏறி இருந்த
பொழுதின் பொருந்திய
வல்லியுள் வெள்ளேறு
கிடந்த வெண்தா
மரைப்பூக் கொள்வழி
யெழுதிய கொடுஞ்சி
உடைத்தேர்ப் 95
பொன்னியல் தொடரின் புதல்வன் இருத்தலின் |
உரை
|
|
|
பின்னர்ப்
பூவின் பிக்கம்
நோக்கிப்
பிறழ்ந்த ஆழியிற் பெருநடு
வாக உறழ்ந்துநனி
அழுத்திய உறுபொன்
னல்லியின் ஒருமுடி
பிறழ்தலின் அருமையொடு
விரும்பிக் 100
கொண்டது வாஎனக் கோமகள்
கொண்டு வண்டுஅவிழ்
நறுந்தார் வத்தவன்கு
அருளி நெடித்தனென்
எழுகென விடுத்தனள் போகக் |
உரை
|
|
|
கொடிக்கோ சம்பி குறுகித்
தமரிடை
முடிக்கலம் எல்லாம் முறைமையின்
நோக்கிக் 105
கைவினைக் கம்மத்துக் கதிர்ப்புநனி
புகழ்ந்து
வேண்டுக இதுவென விளங்கிழைக்
கோமகட்கு ஈயக்
கொண்டுதன் இடைமுலைச்
சேர்த்தலும் காய்கதிர்க்
கனலியில் கதுமெனப்
போழ்ந்து
புக்கது வீழ்தலும் பொருக்கென
வெரீஇ 110
எழுந்த மாதரொடு இறைவனும் ஏற்றுக் |
உரை
|
|
|
கழிந்த கங்குல் கனவினை
வியந்து
நூல்நெறி மரபின் வல்லோன்
பேணிக்
கோலத் தேவியொடு கோமகன்
வினவக்
கனவது விழுப்பம் மனவயின் ஆய்ந்து
115 விளங்கொளி
விஞ்சையர் வெள்ளியம்
பெருமலைத்
துளங்கா வாழி தோன்ற
வேந்தும்
வெய்யோன் பெறுதலும் விறல்அவன்
எய்தலும்
ஐயம் இல்லைஎன்று ஆய்ந்தவன்
உரைப்பப்
புதல்வன்அஃது எதிர்மை பொருளென விரும்பித்
120 திதலை அல்குல்
தேவியொடு
மகிழ்ந்து
செல்லா நின்ற சின்நாள் எல்லையுள் |
உரை
|
|
|
பல்கதிர் மதியமொடு பரந்துவிசும்பு
ஓடும்
வியந்த நற்கோள் உயர்ந்துழி
நோக்கிப் பெயர்ந்துவரு
நாளில் பெருமையின்
வழாத 125
நன்னாள் அமயத்து மின்என
நுடங்கி
விஞ்சையர் ஆழி உருட்டும் வேட்கையொடு |
உரை
|
|
|
அம்செந் தாமரை அகவயின்
நிறைந்த
வெண்பால் புள்ளின் விழையுந்
தன்மையொடு
அவந்தியன் மடமகள் அணிவயிற்
றங்கண் 130
வியந்துதலை பனிக்கும் வென்றி
வேட்கையொடு சேட்படு
விசும்பில் சென்றவன்
அவ்வழிப் பொய்ப்படு
குருசில் பொலிவொடு பட்டென |
உரை
|
|
|
முயக்கமைவு இல்லா நயப்புறு
புணர்ச்சியுள்
அணிநிற அனிச்சம் பிணியவிழ்ந்து
அலர்ந்த 135
அந்தன் நறுமலர் அயர்ப்பில்
தாங்கும்
செந்தளிர்...........................வருந்த
வசாஅய் நிலாஉறழ்
பூந்துகில் ஞெகிழ்ந்திடைத்
தோன்றக்
கலாவப் பல்காழ் கச்சுவிரிந்து
இலங்கத்
திருநுதல் திலகமும் சுமத்தல் ஆற்றாள் |
உரை
|
|
|
140
பெருமதர் மழைக்கண் இன்துயில்
பேணிய
இன்ப யாமம் இயைந்த
வைகறை
நன்பெருங் கனவின் நடுங்குவனள்
ஏற்று
வெள்ளத் தானை வியலக
வேந்தன்
பள்ளி ஏற்றபின் பதன்அறிந்து வணங்கி
145 என்னைகொல் அடிகள்
இன்றியான்
கண்டது
விண்ணக மருங்கில் வெண்முகில்
புரைவதோர்
அண்ணல் யானைஎன் கண்ணுற
வந்துதன்
ஆய்வலித் தடக்கை சுருட்டுபு
முறுக்கிஎன்
வாய்புக்கு அடங்கிய பொழுதில் சேய்நின்று |
உரை
|
|
|
150 அந்தர
மருங்கில் துந்துபி
கறங்கப் புகழ்ந்துபலர்
ஏத்தப் பொருக்கெனப்
பெயர்த்தே
உமிழ்ந்தனென் உமிழப் பரந்துஇறகு
தோற்றிப்
பல்லோர் மருளப் பறந்துசென்று
உயர்ந்ததோர்
வெண்மலை மீமிசை ஏறி வேட்கையின்
155 விண்மிசை ஞாயிறு
விழுங்கக்
கண்டனென்
என்னைகொல் இதனது பயமென
வினவிய
நன்னுதல் கேட்ப மன்னவன் உரைக்கும் |
உரை
|
|
|
மறுவின்று
விளங்கு மறப்போர்
ஆற்றலோர்
சிறுவனைப் பெறுதி சேயிழை மற்றவன்
160 உறுதிரைப்
பக்கமும் வானமும்
போகி
அச்சமில் ஆற்றலோர் விச்சா
தரர்இடை
ஆழி உருட்டுமென்று அறிந்தோர்
உரைத்த வீழா
விழுப்பொருள் மெய்பெறக்
கண்டனை
தீதின்று ஆகித் திருவொடு
புணர்கென 165
மாதாங்கு குருசிலும் அதுவே
இறுப்பப்
போதேர் கண்ணியும் புகன்றனள் ஒழுக |
உரை |
|
|
மங்குல் விசும்பின் வளர்பிறை
போலவும்
பொங்குநீர்ப் பொய்கையில் பூவே
போலவும்
நாளினும் நாளினும் நந்திவனப்பு
எய்தித் 170
தோளுந் தாளும் உடம்புந்
தலையும்
உகிரும் மயிரும் ஒருங்குகுறைவு
இன்றி
ஓதிய வனப்போடு உயர்நெறி
முற்றி
அருவினை விச்சை அவன்ஊடு
உறைதலின்
பெருமலை உலகம் பேணும்
அவாவொடு 175 பறத்தல்
ஊற்றம் பிறப்பப்
பைம்பூண்
சிறப்பொடு புணர்ந்த சேயிழை
மாதர் குடர்வயின்
கிடந்த குழவியது
உள்ளத்து இடர்வகை
அறியாள் எவ்வம் எய்தி |
உரை
|
|
|
உணர்ந்தோர் உரைப்ப உரையில்
கேட்கும் 180
இருவகை இமயமும் பெருகுபுனல்
யாறும்
நீலப் பருப்பமும் தீபமும்
அப்பால்
கோல அருவியம் சிகரியும்
ஞாலத்து
ஒருநடு வாகிய உயர்பெருங்
குன்றமும் பெருமலை
பிறவும் அருமையொடு புணர்ந்த |
உரை
|
|
|
185 இறுவரை ஏறி
இமையோடு
ஆடும் நறுமலர்ப்
பொய்கையும் நந்தா
வனமும் உத்தர
குருவினோடு ஒத்தவை
பிறவும்
ஆண்டுபோந்து எழுந்து காண்டல்உற
விழையா
ஐவகைச் சோதிடர் அணிபெறு கற்பம்
190 கைவைத்து ஒழியக்
கடந்துசென்று
உப்பால்
அமரா பதியும் அந்தரத்து
எல்லையும்
நுகர்பூங் காவும் நோக்குபு
வருதற்கு
உற்றதென் மனனெனும் உணர்வினள் ஆகி |
உரை |
|
|
மற்றுப்பிறர்க்கு
உரையாள் மனத்தே
அடக்கி 195
ஈர்க்கொடு பிறந்த இளந்தளிர்
போல மாக்கேழ்
ஆகமும் மருங்குலும்
வருந்த
முலைக்கண் கறுப்பத் தலைக்கவின் எய்தி |
உரை
|
|
|
வளம்பால் தன்மையின் வந்துபுடை
அடுத்த இளம்பாற்கு
எதிர்ந்த இடத்த
ஆகிய 200
முலைபொறை யாற்றா முனிவின்று
அலையும்
மலைபொறுத்து என்ன மகனையும்
தாங்கி
நொந்துபுறம் மெலிந்தது அன்றியும்
அந்தரத்து இயங்கல்
வேட்கையன் இருக்குநன்
ஆதலின்
அயங்கவன் அழற்ற அசைவு முந்துறீஇ |
உரை
|
|
|
205 முக்கூட்டு
அரத்த ஒண்பசை
விலங்கி
நெய்க்கூட்டு இலங்கு நித்திலம்
நிகர்த்துக் கூரிய
ஆகிய நேரியன்
முறுவல்
செவ்வாய் திறந்து சில்லென
மிழற்ற ஐதேந்து
அல்குலும் ஆகமும் அசைஇ 210
மைதோய் கண்ணி மதியின் மெலியப் |
உரை
|
|
|
பசைவுறு
காதல் பட்டத்
தேவி
அசைவுறு வெந்நோய் றிந்த
அரசன்
அசாஅ வரும்பொருள் யாதென
வுசாஅய்க்
கேட்பஅஃது உரையாள் வேட்பது
விளம்பின் 215
நயந்தோர்க்கு ஆயினும் நாணுத்தக்கு
அன்றென
உயர்ந்தோர் கொள்கையின் ஒண்தொடி
ஒதுங்க
மன்னவன் மறுத்து மடவோய்
மற்று
............................................................... நின்உயிர்
மதியாய் ஆயின்
என்னுயிர்
யானும் வேண்டேன் ஆயிழை கேண்மோ |
உரை |
|
|
220 கூடிய கொழுநன்
கொழுங்குடர்
மிசைகுற
ஓடிய உள்ளத்து உயர்துணைத்
தேவியைக்
குறையில் கேட்டுக் கொடுத்துநோய்
தணித்த
மறைஇல் பெரும்புகழ் மன்னவன்
போல
என்னது ஆயினும் ஈகுவன்
மற்றுநின் 225
இன்னா வெந்நோய் எத்திறத்து
ஆயினும்
ஒடுங்கா உள்ளமொடு அகற்றுவல்
யான்எனக்
கடுஞ்சூள் அறைஇக் காவலன்
கேட்ப |
உரை |
|
|
ஒழுக்கினும்
கற்பினும் இழுக்கம்
இன்றெனப்
பசைஇய கேள்வனைப் பைந்தொடி
வணங்கி 230 அசையா
ஊக்கத்து அடிகளென்
உள்ளம் விசைகொள்
நோன்றாள் விச்சா
தரர்போல் மிசையே
சென்றுற மேன்மேல்
நெருங்கும்
இசையா அரும்பொருள் இற்றென
உரைத்தல்
வசைதீர் வையத்து நகையது
ஆதலின் 235
சொல்லியது இலன்என மெல்லியல் மிழற்ற |
உரை
|
|
|
எளிதெனக்கு என்ன அமைச்சரோடு
ஆராய்ந்து ஒளிமலர்க்
கோதாய் உற்றபின்
அறிஎனத்
துன்பம் நீக்குந் தோழரோடு
இயைந்தே
இன்பக் கோட்டியுள் இனிதின்
இருந்து 240 பேராக்
கழல்கால் பெருந்தகை
வேந்தன்
ஆர்வவேய்த் தோளி அசாநோய்
தீரிய
ஆராய்ந் தனனால் அமைச்சரோடு ஒருங்குஎன்.
1.
வயாக்கேட்டது
முற்றிற்று
|
உரை |
|
|
|