6. நரவாணதத்தன் பிறந்தது

 

இதன்கண் : நரவாணதத்தன் பிறத்தலும், அவன் பிறந்த நாட் சிறப்பும், பிறந்த நாட்கணிப்பும், யாவருக்கும் பரிசளித்தலும், உதயணன் தன் தம்பி முதலியோர்க்குச் செய்திகூறி விடுத்தலும், பெயரிடலும், உருமண்ணுவா முதலியோரின் மக்கட்குப் பெயரிடலும், நகரமாந்தர் மகிழ்ந்து கூறுலும், கூறப்படும்.
 
 

              புனைஇழை தன்நகர் புக்கபின் இப்பால்
              துனைசேர் நெடுந்தேர் துவன்றிய தானை
              வத்தவர் பெருமகன் வானோர் விழையும்
              அத்தகு சிறப்பின் வந்தியன் மடமகள்
   5          உசாவின் அன்ன நுண்இடை உசாவினைப்
              பேதைக் குரைப்போன் பிழைப்பிற்று ஆகிய
              பொற்பமை சுணங்கில் பொம்மல் வெம்முலைப்
              பட்டத் தேவியைப் பதுமையின் நீக்கி
              முட்டில் செல்வமொடு முறைமையில் பிழையாது
   10          ஒழுகா நின்ற வழிநாள் காலைப்

 
                பிறைபுரை திருநுதல் அஃகப் பிறையின்
              குறைவிடந் தீர்ந்த கொள்கை போலத்
              திருவயிற்று வளர்ந்த திங்கள் தலைவர
              ஒருமையில் தீயவை நீங்கப் பெருமையின்
   15          முழுநோக் காக ஐம்பெருங் கோளும்
              வழுவா வாழ்நாள் மதியொடு பெருக்கிப்
              பெருஞ்சிறப்பு அயர்வர நல்கி ஒழிந்துழி
              நோக்கி மற்றவை ஆக்கம் பெருகப்
 
 

             பகைமுதல் சாயப் பசிபிணி நீங்க
   20        மாரியும் விளையுளும் வாரியும் சிறப்ப
             வழுக்கா வாய்மொழி வல்லோர் வாழும்
             விழுத்தகு வெள்ளி வியன்மலை விளங்கத்
             திருத்தகு தேவி வருத்தம் இன்றிப்
             பொய்கைத் தாமரைப் பூவின் உறையும்
   25        தெய்வத் திருமகள் சேர்ந்துமெய் காப்பப்

 
               பொய்யில் பொருளொடு புணர்ந்த நாளால்
             தெய்வ விளக்கந் திசைதொறும் விளங்க
             ஐவகைப் பூவும் பல்வகை பரப்ப
             மதிஉறழ் சங்க நிதியம் சொரிய
  30         அந்தர விசும்பின் ஆழிக் கிழவன்
             வந்துடன் பிறந்தனன் பிறந்த பின்றைச்
 
               சிறந்தோர் நாப்பண் சேதியர் பெருமகன்கு
             அறஞ்சேர் நாவின் அவந்திகை திருவயிற்று
             அரியவை வேண்டிய வசாவொடு தோன்றிப்
  35         பெரியவர் ஏத்தப் பிறந்த நம்பிக்கு
             உதையண குமரன் துதைத்தார்த் தோழரும்
             அகன்அமர் அவையு ஐம்பெருங் குழுவும்
             நகரமும் நாடும் தொகைகொண்டு ஈண்டி
 
               ஆயுள் தானம் யாவைஎன் னாது
  40         மேயவை எல்லாங் காவலன் வீசி
            முத்துமணல் பரந்த நற்பெருங் கோயில்
            முற்றந் தோறும் முழங்குமுரசு இயம்பப்
            பொலிகெனும் மாந்தர்க்குப் புறங்கடை தோறும்
            மலிபொன் மாசையும் மணியும் முத்தும்
  45         ஒலியமை தாரமு மொளிகால் கலங்களும்
            கோடணை இயற்றிக் கொடையொடு புரிகென
            ஆய்புகழ் வேந்தன் ஏயினன் ஆகிக்     
 
              கொலைச்சிறை விடுக தளைச்சிறை போக்குக
            கொற்றத் தானையொடு கோப்பிழைத்து ஒழுகிய
  50         குற்ற மாந்தரும் கொடிநகர் புகுதுக
            அருங்கடி நகரமும் நாடும் பூண்ட
            பெருங்கடன் விடுக இருங்கடல் வரைப்பின்
            நல்குரவு அடைந்த நசைசால் ஆடவர்
            செல்லல் தீரவந்து உள்ளியது கொள்க
 
    55         பொருந்தா மன்னரும் பொலிகெனுங் கிளவி
             பெருந்திறை ஆக விரைந்தனர் வருக
             நிலைஇய சிறப்பின் நாட்டுளுங் காட்டுளும்
             கொலைவினை கடிக கோநகர் எல்லாம்
             விழவொடு புணர்ந்த வீதிய ஆகெனப்
  60         பெருங்கை யானைப் பிணர்எருத் தேற்றி
            இருங்கண் அதிரப் பொற்கடிப்பு ஓச்சிப்
            பெருங்கண் வீதிதொறும் பிறபுலம் அறிய
            இன்னிசை முரசம் மியமர மெருக்க        
 
 

            மன்னிய சும்மையொடு மகாஅர் துவன்றி
  65         வல்லோர் வகுத்த மாடந் தோறும்
            நல்லோர் எடுத்த பல்பூம் படாகை
            ஈர்முகில் உரிஞ்சி எறிவளிக்கு எழாஅச்
            சீர்மைய ஆகிச் சிறந்துகீ ழெழுந்த
            நேர்துகள் அவித்து நிரந்துடன் பொலிய
  70        மையார் யானை மன்னரொடு மயங்கி
            நெய்யாட்டு அரவமும் நீராட் டரவமும்
            மறப்போர் உதயணன் மகிழ்ந்த பின்னர்ப்

 
              பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும்
            சிறந்த நற்கோள் உயர்ந்துழி நின்று
  75         வீக்கஞ் சான்றதும் விழுப்பம் அறாத
            ஆக்கஞ் சான்ற ஆருயிர் ஓகையும்
            நோக்கி யவரும் நுகருஞ் செல்வத்து
            யாண்டுந் திங்களுங் காண்டகு சிறப்பின்
            பக்கமுங் கோளும் உட்கோள் அளைஇ
  80         இழிவும் இவையென இசைய நாடி
            வழியோர் அறிய வழுவுதல் இன்றிச்
            சாதகப் பட்டிகை சாலவை நாப்பண்
            அரும்பொறி நெறியின் ஆற்ற அமைத்த
            பெருங்கணிக் குழுவுக்குப் பெறுதற்கு ஒத்த
  85         ஈரெண் கிரிசை யியல்புளி நடாஅய்
 
               ஆரியல் அமைநெறி அரசன் தன்னுரை
             ஏத்திய லாளருங் கூத்தியர் குழுவும்
             கோயில் மகளிரும் கோப்பெரு முதியரும்
             வாயில் மறவரும் சாயாச் செய்தொழில்
  90         கணக்கருந் திணைகளும் காவிதிக் கணமும்
             அணித்தகு மூதூர் ஆவண மாக்களும்
             சிறப்பொடு புணரும் மறப்பெருங் குழுவும்
             ஏனோர் பிறர்க்கும் இவையென வகுத்த
             அணியும் ஆடையு மணியு நல்கித்
 
    95         தணியா இன்பந் தலைத்தலை பெருகத்
             தம்பியர் தமக்கும் தருசகன் தனக்கும்
             நங்கையைப் பயந்த நலத்தகு சிறப்பின்
             உரத்தகு தானைப் பிரச்சோ தனன்கும்
             உவகை போக்கி யூகியும் வருகெனத்
  100         தவிர்வில் செல்வம் தலைவந்து ஈண்ட
             ஆசான் முதலா வந்த ணாளரும்
             மாசில் வேள்வி மகிழ்ந்தனர் தொடங்கி
             ஏனை வகையின் மேனிலை திரியாது
             பன்னிரு நாளும் பயத்தொடு கழிப்பிப்
 
    105         பெயர்நிலை பெறீஇய பெற்றி நாடி
              உயர்நிலை உலகின் உலோக பாலன்
              நயமிகு சிறப்பொடு நகர்மிசைப் பொலிந்த
              பலர்புகழ் செல்வன் தந்தன ஆதலின்
              உருவாண மாகிய ஓங்குபுகழ்ச் செல்வன்
  110          நரவாண தத்தன் என்றுபெயர் போக்கி
 
                உறுவிறல் தானை உருமண் ணுவாவும்
              அறிநரை வழிபட்டு அன்றே பெயர்தலின்
              ..................................................................
              பொருவின் மாக்கள் பூதிஎன் றுரைஇ
              ஒழிந்த மூவர் உருவார் குமரருள்
  115          கழிந்தோர் ஈமத்துக் கட்டழல் சேர்ந்த
              கரியகல் ஏந்திக் காவயின் பெற்றோன்
              அரிசிக னாகப் பெயர்முதல் கொளீஇப்
              பயந்தலை நிற்கும் பல்கதிர்ச் செல்வன்
              நயந்துதரப் பட்டோன் தவந்தகன் ஆமெனத்
  120          தாயர் போலத் தக்கது நாடிய
              ஆவழிப் படுதலின் ஆகிய இவனே
              கோமுகன் என்று குணங்குறி யாக
              மற்றவர் மகிழ்ந்து...........................
 
              .....................தொன்னகர் ஆளரும்
  125         பெற்றனம் பண்டே பெருந்தவம் என்மரும்
             இன்னோர் அன்ன எடுத்துரை சொல்லித்
             தன்னோர் அன்ன தன்மையன் ஆகி
             மதலை மாண்குடி தொலைவழி ஊன்றும்
             புதல்வன் பெற்றான் எனப்புகழ் வோரும்
  130         உதவி நண்ணரும் உதயண குமரன்
             போகமும் பேரும் புகழ்மேம் பட்டதும்
             ஆகிய அறிவின் அரும்பெறல் சூழ்ச்சி
             யூகியின் அன்றோ எனவுரைப் போரும்
             குறிகோள் கூறிய நெறிபுகழ் வோரும்
 
    135        வெண்முகில் ஒழுகிய வெள்ளியம் பெருமலை
             உண்முதல் உலகிற்கு ஒருமீக் கூறிய
             தெய்வ வாழி கைவலத்து உருட்டலும்
             பொய்யாது ஆதல் உறுபொருள் என்மரும்
             இவையும் பிறவும் இயைவன கூறி
 
 

  140        நகரத் தாளரொடு நாடுபுகழ்ந்து ஏத்த
             நிகரில் செல்வத்து நிதியம் தழீஇ
             யாப்புடை மகன்வயின் காப்புடன் புரிகென
             விதிஅறி மகளிரொடு மதிபல நவின்ற
             மருந்துவகுப் பாளரைப் புரந்துறப் பணித்துத்
  145         தளர்வில் ஊக்கந் தலைத்தலை சிறப்ப

             6. நரவாணதத்தன் பிறந்தது