7. யூகி பிரச்சோதனனைக்
கண்டு வந்தது
|
இதன்கண் : பிரச்சோதனன்
நரவாணதத்தன் பிறந்ததை அறிதலும், முரசறைதலும், நகரை அலங்கரித்தலும், பிரச்சோதனன்
விழாக் கொண்டாடலும், யூகியைப் பிரச்சோதனன் வருவித்தலும், யூகியும் சாலங்காயனும்
தர்க்கஞ் செய்தலும், பிரச்சோதனன் யூகியின் சிறந்த குணங்களை வியத்தலும்,
பிரச்சோதனன் யூகிக்குச் சிறப்புச் செய்தலும், யூகிக்கு இரு மகளிரை மணம்
புரிவித்தலும், பிரச்சோதனன் யூகியைப் பாராட்டலும், யூகியை விடுத்தலும்
கூறப்படும். |
|
|
பொலிந்த
செல்வமொடு புகழ்மீக்
கூரி மலிந்த
திருவின் வத்தவர்
பெருங்குடி
உண்மகிழ் உவகை ஊக்கம்
இமிழப்
பண்மகிழ் பேரியாழ் பயிற்றிய கேள்வி
5 உலைவில் வென்றி உதயண
குமரன்கு
நலமிகு புதல்வன் நன்னாள்
பிறந்த
உகவை மாற்றம் உஞ்சையம்
பெருநகர்ப்
பகைஅடு வேந்தற்குப் பணிந்தனன் உரைப்பத் |
உரை |
|
|
தன்மைக் கேற்ற தலைப்பேர் அணிகலம்
10 புன்மை தீர முன்னிலை
நல்கிப்
பழனம் அணிந்த பதினாறு
ஆயிரம்
கழனி நன்னகர் கலக்கம்
இல்லன
மன்னன் அருளி மன்னரும்
மறவரும்
இன்னே வருகென்று இயமரம் வுறைகென
15 முரைசெறி முதியற்குப் பெறுவன
நல்கி
விரைசெலல் இவுளி வேந்தன் ஏவ |
உரை |
|
|
ஓடை
அணிந்த ஒண்பொன்
நெற்றிக்
கோடுடை வேழம் பாடுபெறப்
பண்ணி
எருத்தின் மீமிசைத் திருத்தக இரீஇத்
20 துகில்மடி அணைமிசைத்
துளக்கம்
இன்றிப் பாற்படு
வென்றி நாற்புடை
மருங்கினும்
கண்டோர் விழையும் தண்டாக்
கோலமொடு
நீத்திஆற் றன்ன நெடுங்கண்
வீதியுள்
போத்தர அமைந்து புகுவழி எல்லாம்
25 கனைபொன் கடிப்பின் காண்தக
ஓச்சிப் |
உரை |
|
|
புனைபொன்
பூந்தார்ப் புரவலன்
காக்கும்
கன்னி மூதெயில் நன்னகர்
கேட்ப
மதிமருள் நெடுங்குடை மறமாச்
சேனற்குப்
பதினா றாயிரம் பட்ட மகளிருள்
30 முதற்பெருந் தேவி திருநாள்
ஈன்ற
மதுக்கமழ் கோதை வாசவ
தத்தை
வடதிசை மீனில் கற்புமீக்
கூரி
வடுவில் செய்தொழில் வத்தவர்
பெருமகன்
குறிப்பறிந்து ஒழுகிக் கோடாக் குணத்தொடு
35 பொறிப்பூண் மார்பில்
புதல்வன் பயந்தனள் |
உரை |
|
|
கோமகன்
பெற்று...........................
சேய்முதல் வந்த சிறப்பினர்
ஆகி ..............................யக்கடம்
பூண்டபின் வருபரி
சார மணிநீர்ப் பேரியாற்று
40 இருகரை மருங்கினும் இந்நிலம்
ஏத்தச்
சீர்மையொடு பொருந்திச் சிறப்பு
முந்துறீஇ
அறிவின் அமர்வார் நெறிமையில்
திரியா
இருபான் மாக்களும் ஒருபாற்று
இருந்த
ஊர்திரை நெடுங்கடல் உலப்பில் நாளொடு
45 வாழ்கநம் கோமான் வையகம்
எல்லாம் |
உரை |
|
|
பகையும் பிணியும் பசியும்
நீங்கித்
தகையும் செல்வமும் தாம்படு
கென்ன
மிகைபல புகழ்ந்து தொகைஇ
ஆற்றிய
இன்ப மொழியவன் பன்முறை
அறைந்தபின் |
உரை |
|
|
50 ..................ஒண்புகழ்
உவந்தனர்
ஏத்தி
வரைநிரைத் தன்ன மாடந்
தோறும் திரைநிரைத்
தன்ன படாகையுங்
கொடியும்
காட்சிக்கு ஆகா மாட்சிய
ஆகி அணிபெற
உயரிப் பணிவிலர் மறல
55 இந்திர உலகம் இழுக்குபு
வீழ்ந்து
வந்திருந்து அன்றெனக் கண்டவர்
ஏத்த
வேனல வேந்தன் விழுப்பெருங்
கோயிலுள்
பன்னா றாயிரம் பண்முரசு ஆர்ப்ப |
உரை |
|
|
நன்னீர் விரவிய செந்நிறச் சுண்ணம்
60 குலநல மகளிரொடு கோமகன்
நாடி
ஐந்நூற்று இரட்டி அருங்கடை
தோறும்
பசும்பொன்
மாசையும்...................
பிடிப்புவிலை அறியாப் பெருங்கலம்
உட்படக்
கொடித்தேர் முற்றத்துக் குறையுடை யோர்கட்கு
65 ஈகென அருளி எண்டிசை மருங்கினும் |
உரை |
|
|
ஆய்படை வேந்தற்கு அரும்பெறற்
திருமகள்
வாசவ தத்தை தீதில்
சிறப்பொடு
புத்திரன் பெற்றனள் பொலிவு
முந்துறீஇ
மொய்த்த மாநகர் முறைமுறை வருகென
70 அதர்கடி தோடுறும் அமைதி
யாளரைப்
பொறியொற்று ஓலையொடு அறியப் போக்கி |
உரை |
|
|
ஆராக்
காதலொடு அணிபா
ராட்டி
நீராட்டு அயர்ந்து பல்கலன்
அணிந்து
சீரார் செல்வமொடு செவ்வி கொடீஇத்
75 தெரிமாண் ஆளர் திறவதின்
சூழ அரிமா
சுமந்த ஆசனத்து இருந்து |
உரை |
|
|
பொன்றாப் புகழோன் போக்கல்
வேண்டி
ஒன்றார் அட்ட யூகியைத்
தரீஇ
இன்றியான் எய்தினென் எனின் ...........
80 பிரச்சோ தனன்அவன் உரைத்ததன்
பின்னர்ப் |
உரை |
|
|
பாற்பட்டு எய்திய பதினா
றாயிரம்
தூப்பால் அமைச்சர் மேற்பால்
அறிவின்
தலைக்கை யாகிய நலத்தகு
நாட்டத்து
ஞாலம் புகழுஞ் சாலங் காயன்
85 ஏற்ற சிறப்பி னியூகி
தன்னொடு
மாற்றங் கொடுத்தல் வலித்தனன் ஆகி |
உரை |
|
|
முதல்வன் செவ்வி முகமுதல்
நோக்கிச் சிதைபொருள்
இன்றிச் செந்நெறி
தழீஇ உதையத்து
இவரும் ஒண்சுடர் போல
90 எல்லா மாந்தர்க்கும் இருளற
விளங்கும்
செல்லாறு இதுவெனச் சொல்லுதல் வேண்டிச் |
உரை |
|
|
சாலவை
நாப்பண் சலத்தில்
தீர்ந்த
கேள்வி யாளரை வேறுதெரிந்து
அமைத்து வாதம்
வேண்டிய சாலங் காயன்
95 மாற்றம் பகுத்தற்கு ஆற்றின்
நாடி
மேற்கொண்டு உரைக்கும் மெய்த்துறை
மருங்கின் நூல்பால்
தழீஇய குற்றம்
இவையெனக்
கேட்டோர் மனமுணக் கிளந்தவன் கடாவ |
உரை |
|
|
மெய்த்தகு
நுண்பொருண் மெத்தப் பன்னி
100 உத்தர வாக்கியம் யூகியும்
நிறீஇக்
கழிபேர் உவகையொடு காவல்
வேந்தன்
ஒழிக நாமிவற்கு ஆற்றேம்
உரையெனச் சாலங்
காயனைத் தோல்வினை
ஏற்றி
உரைத்த கிளவிக்கு ஒன்றே போல
105 விரித்துப்பல குற்றம் விளங்கக் காட்ட |
உரை |
|
|
ஏற்ற
முகத்தின் இறைவனும்
விரும்பி
நண்பின் மாட்சியுங் கல்வியது
அகலமும்
பண்பின் தொழிலும் படைத்தொழில்
மாண்பும்
காயும் மாந்தர் ஆயினும் யாதும்
110 தீயவை கூறப் படாத
திண்மையும்
இவற்கலது இல்லை இவனாற்
பெற்ற
அவன்குஅலது இல்லை அரசின் மாட்சியென |
உரை |
|
|
மன்னிசை
நிறீஇய நன்னர்
ஆளனொடு
நுண்ணெறி நுழையும் நூற்பொருள் ஒப்புமைத்
115 தன்வயின் மக்களை அவன்வயின்
காட்டி
வேண்டல் பால வெறுக்கை
நாடி வேண்டார்
அட்டோன் வேண்டான்
ஆயினும்
அற்பில் பிணித்த அருள்மறுப்பு
அரிதா நற்பல
கொடுத்து நம்பி பிறந்த |
உரை |
|
|
120 திருநாள் தானம்
பெருநாள்
காலை ஏற்போர்க்கு
ஈக வின்றே
போன்மெனக் கோப்பெருங்
கணக்கரைக் குழுவிடை
விளங்கக் கடைப்பிடி
நுகும்பினுள் இடைப்பட
எழுதுகென்று யூகியும்
உணர ஏயின் ஆகிப் |
உரை |
|
|
125 பரதகன் தங்கை
பறந்தரி
சிந்திய
மதரரி மழைக்கண் மடம்படு
காரிகைத்
திலகமா சேனைஎன்று உலகறி
பவளையும்
சாலங் காயற்கு கிளையோ
ளாகிய நீல
வுண்கண் நிலவுவிடு கதிர்நுதல்
130 பாக்கியம் அமைந்த பார்ப்புயாப்
பியையும்
ஆகிய அறிவி னரும்பொருட்
கேள்வி
யூகிக்கு ஈத்துப் பாகுபடல்
இன்றி யாதே
ஆயினும் ஆகஇனி
எனக்கென மாதாங்கு
திண்டோள் மகிழ்ந்தனன் நோக்கி |
உரை |
|
|
135 அங்கண் ஞாலத்து
அரசியல்
அமைதி
எங்கட்கு எல்லாம் இன்றி
உதயணன்
தன்கண் தங்கிய தகைமை
நாடின்
நின்கண் மாண்பின் நெடுமொழி யாள
ஆயிற்று என்றுபல அருளொடும்
புணர்ந்த 140 யூகிக்கு
உரையா ஒருங்குடன் நிழற்றிப் |
உரை |
|
|
கனவினும் நனவினும் மின்பம் அல்லது
நுனைவேல் தடக்கைநம் புனைமுடி வேந்தன்
காணலன் கண்டீர் மாநலம் இயைந்த
நல்வினை உடையன் பெரிதெனப் பல்லோர் 145 இகழ்தல் செல்லார்
புகழ்வனர் புகன்று
வாசவ தத்தையும் வத்தவ மன்னனும்
ஏசினன........................................ |
உரை |
|
|
நவில்தொறும் இனிய ஞானம்
போலப்
பயில்தொறும் இனியநின் பண்புடைக் கிழமை
150 உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம்
இன்புறப்
பிரிவுறு துன்பம் எம்மாட்
டெய்த எரியுறு
நெடுவேல் ஏய
இறைவன்
வருக என்றனன் சென்மதி நீஎனப் |
உரை |
|
|
பருகுவனன்
போலப் படைப்பெரு வேந்தன்
155 அவணே இருப்பன் இவணேன்
எனவே
கருதல் வேண்டுமெனக் கைவிரல்
பற்றி
விடுக்கும் பொழுதின் எடுத்தவன்
நின்னேர் உண்டோ
ஒழுக்கின் என்றுபின் விடுப்ப |
உரை |
|
|
அருங்கலம்
பிறவும் ஒருங்கு முந்துறீஇ
160 வேந்துறை முதுநகர் வியன்மலை
ஆகப்
போந்துகடன் மண்டும் புண்ணிய
நீர்த்துறைப்
பேரியாறு என்ன வார்பெருஞ்
செல்வமொடு
நன்பல் நாட்டகம் பின்பட நீந்தி
வளங்கவின் எய்திய வத்தவன்
இருந்த 165 நலம்பெறு நகரம்
புக்கனன் இனிதுஎன்.
7. யூகி பிரச்சோதனைக்
கண்டு வந்தது முற்றிற்று
|
உரை |
|
|
|