உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
32. கரடு பெயர்த்தது |
|
இனைத்தோ
ரிளமையொ டெனைப்பல கேள்வியும்
10 தவத்தது பெருமையிற் றங்கின
விவற்கென மருட்கை
யுற்றதன் மனம்புரிந் தருளி
|
|
(பிரச்சோதனன்
உட்கோள்)
9 - 11 : இனைத்தோர்........அருளி
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட பிரச்சோதன மன்னன் 'அம்மவோ ! இத்தகைய இளம்பருவத்திலேயே இவ்விறை
மகனுக்கு மிகவும் பலவாகிய கல்வியும் கேள்வியும் இவன் முற்பிறப்பின்கண் முயன்ற பெரிய தவம் காரணமாக உளவாயின ஆதல் வேண்டும்' என்று தன்னுள்ளத்தே கருதி ஆற்றவும் வியந்த தன்னெஞ்சத்தாலே உதயணகுமரனைப் பெரிதும் விரும்பி அவன்பால் அருள்கூர்ந்து என்க.
|
|
(விளக்கம்) மாந்தர்
வேண்டிய வேண்டியாங்கெய்துதற்குத் தலை சிறந்த காரணம் தவமேயாதலின்
'இவற்கு எனைப் பல கேள்வியும் தவத்தது பெருமையிற் றங்கின' என்று
வியந்தவாறு. 'வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம் ஈண்டு முயலப்
படும்' எனவரும் திருக்குறளையும் (265) ஈண்டு நினைக. மருட்கை - வியப்பு.
இம்மருட்கை பெருமை நிலைக்களனாகப் பிறந்தபடியாம். என்னை?
'புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமைசாலா மருட்கை நான்கே'
என்பவாகலின் (தொல் - மெய்ப். 7) என்க.
|