| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 32. கரடு பெயர்த்தது | 
|  | 
| இனைத்தோ 
      ரிளமையொ டெனைப்பல கேள்வியும் 10    தவத்தது பெருமையிற் றங்கின 
      விவற்கென
 மருட்கை 
      யுற்றதன் மனம்புரிந் தருளி
 | 
|  | 
| (பிரச்சோதனன் 
      உட்கோள்) 9 - 11 : இனைத்தோர்........அருளி
 | 
|  | 
| (பொழிப்புரை)  அதுகேட்ட பிரச்சோதன மன்னன் 'அம்மவோ !  இத்தகைய இளம்பருவத்திலேயே இவ்விறை 
 மகனுக்கு மிகவும் பலவாகிய கல்வியும் கேள்வியும் இவன் முற்பிறப்பின்கண் முயன்ற பெரிய தவம் காரணமாக உளவாயின ஆதல் வேண்டும்'   என்று தன்னுள்ளத்தே கருதி ஆற்றவும் வியந்த தன்னெஞ்சத்தாலே   உதயணகுமரனைப் பெரிதும் விரும்பி அவன்பால் அருள்கூர்ந்து என்க. | 
|  | 
| (விளக்கம்)  மாந்தர் 
      வேண்டிய வேண்டியாங்கெய்துதற்குத் தலை   சிறந்த காரணம் தவமேயாதலின் 
      'இவற்கு எனைப் பல கேள்வியும்   தவத்தது பெருமையிற் றங்கின' என்று 
      வியந்தவாறு. 'வேண்டிய   வேண்டியாங் கெய்தலாற் செய்தவம் ஈண்டு முயலப் 
      படும்' எனவரும்   திருக்குறளையும் (265) ஈண்டு நினைக. மருட்கை - வியப்பு. 
        இம்மருட்கை  பெருமை நிலைக்களனாகப் பிறந்தபடியாம். என்னை? 
        'புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமைசாலா மருட்கை நான்கே'   
      என்பவாகலின் (தொல் - மெய்ப். 7) என்க. |