| (விளக்கம்)  பாகராற் 
      கைவிடப்பட்டு வெறிகோள் பண்ணி உழலும்   யானை என்க. பண்ணியும் என்புழி 
      உம்மை இசைநிறை.   பெயர்த்தவன்: உதயணன். பெயர்த்தவன் அரசவை விடுத்துப் 
        போகிப் பிணிக்கெனக் (கூறி) இழிதந்து அகம் புக்கனன் என   
      இயைக்க. வெறிகோள் - வெறிகொண்டு கொலைசெய்தல்.   கலி - ஆரவாரம். இஃது 
      உதயணனைக் கண்டுழி மாந்தர்   மகிழ்ச்சியாலெடுத்த ஆரவாரம். ஆவணம் - 
      அங்காடித்தெரு.   கைதொழுதல் - நன்றி யுணர்வினை உணர்த்தல். அரைமதி இரும்பு 
      -   தோட்டி, கரீஇ - கருவி. வேணு - மூங்கில். தானம் - கூடம். தகை - 
        அழகு. ஆல், அசை. விடுத்தென் என்புழி னகரவீற்றான் முடிவது காண்க. 
        இவ்வாறே இந்நூலின் ஒவ்வொரு காதையும் னகரவீற்றான் முடிவதும்   
      காண்க. இஃது இயைபு என்னும் வனப்பாகும். இதுபற்றிப் பேராசிரியர்,   தொல் 
      - செய்யுளியல் 236 ஆம் சூத்திரவுரை விளக்கத்தே 'இயைவு   என்றதனானே 
      பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வரும் என்பது   கருத்து; சீத்தலைச் 
      சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும் கொங்கு   வேளிராற் செய்யப்பட்ட 
      தொடர்நிலைச் செய்யுளும் போல்வன; அவை   னகர வீற்றான் இற்றன' என்று 
      கூறுதலும் உணர்க.                
                  32. கரடு பெயர்த்தது முற்றிற்று.
 
 |