| (விளக்கம்)  அணிநகர் - அழகிய 
      மாளிகை. அந்தக்கேணி - மறைக்கப்பட்ட   கேணி. பொறியால் நீரிறைக்கும் 
      கிணறு என்க. குன்று - செய்குன்று, சித்திரப்பூமி -   சித்திரித்தாற் 
      போன்ற நிலம். இதனோடு,    "எந்திரக் கிணறு மிடுங்கற் குன்றமும்வந்துவீழ் 
      அருவியும் மலர்ப்பூம் பந்தரும்
 பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு 
      நீர்க் கேணியும்
 ஒளித்துறை இடங்களும் பளிக்கறைப் 
      பள்ளியும்
 யாங்கணுந் திரிந்து தாழ்ந்து விளையாடி"
   எனவரும் மணிமேகலை (19 : 102 - 6) ஒப்புநோக்கற்பாலது.
 
 |