(விளக்கம்) அணிநகர் - அழகிய
மாளிகை. அந்தக்கேணி - மறைக்கப்பட்ட கேணி. பொறியால் நீரிறைக்கும்
கிணறு என்க. குன்று - செய்குன்று, சித்திரப்பூமி - சித்திரித்தாற்
போன்ற நிலம். இதனோடு,
"எந்திரக் கிணறு மிடுங்கற் குன்றமும் வந்துவீழ்
அருவியும் மலர்ப்பூம் பந்தரும் பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு
நீர்க் கேணியும் ஒளித்துறை இடங்களும் பளிக்கறைப்
பள்ளியும் யாங்கணுந் திரிந்து தாழ்ந்து விளையாடி"
எனவரும் மணிமேகலை (19 : 102 - 6) ஒப்புநோக்கற்பாலது.
|