(விளக்கம்) உலகம்
புன்மைத்தாக என்க. ஆகி - ஆக. கடன் மண்டிலம் - உலகம். நேமி - ஆணைச்
சக்கரம். இறை - இறைமைத் தன்மை. பெருவிறல்: அன்மொழித் தொகை;
முடிவேந்தன் என்க. எஞ்சிய - இறந்த, கடம் - கடமைப்பொருள்; திறை.
கண்ணரிதல் - தவிர்தல். கையர் - சிறுமையுடையோர். வயின் - இடம்.
விலங்கி - விளங்கி. பசலை - ஈண்டு நிறம் மங்குதன் மேற்று. இனி இவ்வினிய
உவமையோடு,
"உரைசெய் திகிரிதனை யுருட்டி யொருகோலோச்சி
யுலகாண்ட அரைச னொதுங்கத் தலையெடுத்த குறும்பு போன்ற
தரக்காம்பல்"
எனவரும் கம்பர் திருவாக்கு (மிதிலைக்காட்சி - 73) நினைக.
|