| (விளக்கம்)  நால்வகைப் 
      படையினும் தேர்ப்படை முதன்மை பெறுதலின் தலைத்தேர்த்தானை எனப்பட்டது. 
      முலைப்பாற் காலம் - முலையுண்ணும்   குழவிப்பருவம். முறை - தாயமுறை.
    "கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்பிறர்பிணி யகத்திருந்து ........................
 ....................................................
 உருகெழு 
      தாயம் ஊழின் எய்தி"
   (பட்டினப் 221 - 227)   என்றார் பிறரும்,   இனி, ''முலைப்பாற்காலத்து முடிமுரை யெய்திக் குடைவீற்றிருத்த குழவி போல" 
      என்னும் இதனோடு,
    "கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக்குடுமி 
      களைந்தநுதல் வேம்பின் ஒண்டளிர்
 நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு 
      மிலைந்து
 குறுந்தொடி கழித்தகை சாபம் பற்றி
 நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
 யார்கொல் வாழ்கவவன் 
      கண்ணி தார்பூண்டு
 தாலி களைந்தன்று மிலனே 
      பால்விட்டு
 அழினியும் இன்றயின்றனனே" (புறநா - 77)
   எனவரும் பாடல் நினையற்பாலது.   புயலாகிய மாசென்க. மாநிலம் உலவாது தாங்க என மாற்றுக. புணிற்றுநாள் 
        - பிறந்து அணிமைக்காலம். கன்னி மகளிர் பிறை தொழுதல் மரபு. செக்கர் 
        - செவ்வானம், தூய்மை - தூய நிலாவொளி. மதர்வை - மயக்கம். ஓர்: 
        அசை.
 
 |