| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 33. மாலைப் புலம்பல் | 
|  | 
| யிறைஞ்சிய 155   வல்லிருள் புதைப்பச் 
      செல்சுடர் சுருக்கி
 வெய்யோ னீங்கிய வெறுமைத் 
      தாகிக்
 கையற வந்த 
      பைதன் மாலைத்
 தீர்ந்தவ ணொழிந்த திருநல் 
      லாயம்
 தேர்ந்தனர் 
      குழீஇப் பேர்ந்தனர் வருவோர்
 | 
|  | 
| 154 - 159: 
      இறைஞ்சிய............வருவோர் | 
|  | 
| (பொழிப்புரை)  வலிய இருள் உலகத்தை மறைக்கும்படி ஞாயிற்றுக் கடவுள்   பரவிச் செல்லாநின்ற தன்      கதிர்களைச் சுருக்கிக் கொண்டவனாய் மறைந்து   போனமையாலே வறியதாகி உலகோர் கையறவு கொள்ளும்படி வந்த துன்பந்தரும்  அம்மாலைப் பொழுதிலே தங்குழுவினின்றும் அகன்று போனமையாலே (அவளை)  இழந்து நின்ற அழகும் நலமும் உடைய தோழிமார் அவளைக்கண்டு   அடிபோற்றுதற் பொருட்டுத் தம்முட் கூடி யாண்டுளள் என்று அவ்விடத்தி   னின்றும் பெயர்ந்து தேடி வருகின்றவர் என்க. | 
|  | 
| (விளக்கம்)  வாசவதத்தையை 
      மாலைப் பொழுதிலே இழந்த ஆயம்   குழீஇத் தேர்ந்து வருபவர் என 
      வியைக்க.இருள் உலகைப் புதைப்ப என்க.   வெய்யோன் - ஞாயிறு: பைதல் - 
      துன்பம். தேர்ந்தனர், பேர்ந்தனர்:   முற்றெச்சங்கள். |