| (விளக்கம்)  இருவர் - உதயணனும் 
      வாசவதத்தையும். ஊழ்வினையால்   நீக்கப்படுதலின்றிச் சூழ்வினையைப் 
      பயனிலாதனவாய்ச் செய்யும் நோய் என்க.   கனலெரி: வினைத்தொகை. திசை - 
      தான் செல்லுந்திசை. அஃதாவது   மேலைத்திசை. நினைப்பினராக என்க. 
      அவர்க்குக் காலை தோன்றலின் என்க.   பின் அரிதிற்கண்ட கரைபோல என்க. 
      முகையின - கூம்பினவாகிய. பாயிருள் -   வாளா அடை மாத்திரை. பொழில் - 
      உலகம்: ஆகு பெயர்.                     
              33. மாலைப் புலம்பல் முற்றிற்று
 
 |