(விளக்கம்) இருவர் - உதயணனும்
வாசவதத்தையும். ஊழ்வினையால் நீக்கப்படுதலின்றிச் சூழ்வினையைப்
பயனிலாதனவாய்ச் செய்யும் நோய் என்க. கனலெரி: வினைத்தொகை. திசை -
தான் செல்லுந்திசை. அஃதாவது மேலைத்திசை. நினைப்பினராக என்க.
அவர்க்குக் காலை தோன்றலின் என்க. பின் அரிதிற்கண்ட கரைபோல என்க.
முகையின - கூம்பினவாகிய. பாயிருள் - வாளா அடை மாத்திரை. பொழில் -
உலகம்: ஆகு பெயர்.
33. மாலைப் புலம்பல் முற்றிற்று
|