உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
           நல்வினை யம்பலத் திருந்த நம்பிக்கு
          வல்லிதி னக்குறை யுரைத்த பின்னர்
 
             58 - 59: நல்வினை..........பின்னர்
 
(பொழிப்புரை) அப்பணி பெற்ற அமைச்சன் சென்று அழகிய தொழிற்றிறனமைந்த திருமணியம்பலத்தே வீற்றிருந்த உதயணனுக்கு அரசன் உரைத்த குறையை நாவன்மையோடு எடுத்துக் கூறிய பின்னர் என்க.
 
(விளக்கம்) நல்வினை - அழகிய தொழிற்றிறன். ஆகூழாகிய அம்பலம் எனவும் ஒரு பொருள் தோன்றுதல் உணர்க. நம்பி - உதயணன். வல்லிதின் - நாவன்மை தோன்ற.