உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
34. யாழ் கைவைத்தது |
|
நல்வினை யம்பலத் திருந்த
நம்பிக்கு வல்லிதி
னக்குறை யுரைத்த பின்னர்
|
|
58 - 59:
நல்வினை..........பின்னர்
|
|
(பொழிப்புரை) அப்பணி
பெற்ற அமைச்சன் சென்று அழகிய தொழிற்றிறனமைந்த திருமணியம்பலத்தே
வீற்றிருந்த உதயணனுக்கு அரசன் உரைத்த குறையை நாவன்மையோடு எடுத்துக் கூறிய
பின்னர் என்க.
|
|
(விளக்கம்) நல்வினை - அழகிய தொழிற்றிறன். ஆகூழாகிய அம்பலம் எனவும் ஒரு பொருள்
தோன்றுதல் உணர்க. நம்பி - உதயணன். வல்லிதின் - நாவன்மை
தோன்ற.
|