உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
34. யாழ் கைவைத்தது |
|
ஆன்பாற் றெண்கட லமுதுற
வளைஇய தேன்பெய்
மாரியிற் றிறவ
தாகப் பருகு வன்ன
பயத்தொடு கெழீஇ
உருகு வன்ன வுவகைய னாகி
|
|
101 - 104:
ஆன்பால்..........உவகையனாகி
|
|
(பொழிப்புரை)
அக்கருத்தாலே மன்னவன் பணி ஆன்பாலா னியன்றதொரு கடலின்கண்
அமைத்த அமுதத்திலே கலத்தற் பொருட்டுத் தேனாகப் பெய்ததொரு
மழைபோலப் பெரிதும் நலமுடையதொரு பணியே ஆகிவிடுதலாலே அப்பணியால் வரும்
பருகற்கொத்த சிறந்த பயனைக் கருதி மனம் உருகி ஒழுகுவது
போலும் பேருவகையுடையனாகி என்க.
|
|
(விளக்கம்) 'திருவிளை
தேம்பெய் மாரி பாற்கடற் பெய்த தென்றாள்' எனவரும் சீவக
சிந்தாமணியையும் (2077) நினைக. உருகு - உருகுதல். மனம் உருகுதல்
போன்றதோர் உவகை என்க.
|