| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 34. யாழ் கைவைத்தது | 
|  | 
| தெய்வத் தாமரைத் திருமகட் கெடுத்தோர் 150    ஐயப் படூஉ மணியிற் 
      கேற்ப
 ஒண்மையு 
      நிறையு மோங்கிய 
      வொளியும்
 பெண்மையும் பெருமையும் பிறவு 
      முடைமையிற்
 பாசிழை 
      யாயத்துப் பையென 
      நின்ற
 வாசவ தத்தை 
      வல்ல ளாகென
 155    ஊழ்முறை பொய்யாது கரும 
      மாதலின்
 யாழ்முறைக் கரும மிவளதென் றருளி்
 | 
|  | 
| 149 - 156: 
      தெய்வ.........அருளி | 
|  | 
| (பொழிப்புரை)  கடவுட் பண்புடைய 
      தாமரை மலரின்மேல் வீற்றி  ருக்கும் திருமகளைத் தம்மிடத்தினின்றும் 
      காணாமற் போக்கியவர்   தன்னைக் காண்பரேல் இவள்தான் திருமகளோ? என்று 
      ஐயுறுவதற்  குக் காரணமான தனது பேரழகிற்குப் பொருந்தும்படி மேலும் 
      நுண்  ணறிவு ஒளியுடைமையும் நிறையுடைமையும் பெருகிய ஒளியுடை  மையும் 
      பெண்மைப் பண்புடைமையும்  பெருமையும் பிறவுமாகிய   பேறுகள் எல்லாம் 
      பெற்றிருத்தலாலே  பசிய அணிகலன்களையுடைய   தன் தோழியர் குழுவின்கண் 
      பெரிதும் அடங்கி நின்ற வாசவதத்தையை   அவ்வரசன் சிறப்பாக நோக்கினன் ; 
      உலகின்கண் நிகழும் செயல்கள்   எல்லாம் ஊழ்வினை வகுத்தபடியே 
      பொய்த்தலின்றி நிகழ்வனவேயாத  லால் நோக்கிய மன்னன் இவ்வாசவதத்தையே 
      (உதணன்பால்) யாழ்கற்று   வல்லுநள் ஆகுக! என்று கருதி முன்னிலைப் 
      புறமொழியாக யாழ்பயிலும்   முறையாகிய செயல் இவளுடைய தாகுக! என்று கூறி 
      என்க. | 
|  | 
| (விளக்கம்)  கெடுத்தோர் - காணாமற் போக்கியவர். அணி - அழகு.   ஒண்மை - கூரிய அறிவு. 
      நிறை - மறைபுலப்படாமல் நிறுத்தும் உள்ளம்.    இவற்றோடு 'செறிவு 
      நிறையுஞ் செம்மையுஞ் செப்பு  மறிவு மருமையும் பெண்பா லான' எனவரும் 
      தொல்காப்பியமும்  (பொருளியல் 15.) நினைக.    ''ஊழ்முறை 
      பொய்யாது கருமம்'' என்றது நூலாசிரியர் கூற்று. |