| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 34. யாழ் கைவைத்தது | 
|  | 
| நன்னர்க் கிளவி நயவாப் பயிற்றி 235   ஆசான் 
      கொடுக்கு மரும்பெறல் 
      விச்சை
 காண்போர் 
      செய்யுங் கடப்பா 
      டிதுவென
 வெள்வளை 
      முன்கை தோழியர் 
      பற்றி
 ஒள்ளிழை 
      மாத ரொழுக்கஞ் 
      செய்கெனக்
 காந்த 
      ளழித்த கைம்முகிழ் கூப்பிக்
 240    
      கஞ்சிகை திறந்த பொழுதி னன்
 | 
|  | 
| 234 - 240: 
      நன்னர்.........திறந்தபொழுதின் | 
|  | 
| (பொழிப்புரை)  அங்ஙனமிருந்தபொழுது தோழியர் ஒள்ளிய அணிகலன்களையுடைய மாதராய்! நன்மையுடைய இனிய மொழிகளைக் கேட்கும் மாணவர்க்கு விருப்பம் உண்டாகும்படி கற்பித்து நல்லாசிரியன் வழங்கும் பெறற்கரிய கலையைப் பயிலும் நன்மாணாக்கர் தொடக்கத்தே செய்யும் கடமை இஃதாம் என்றுணர்த்தி  அவளுடைய வெள்ளிய வளையல் அணிந்த இருமுன் கைகளையும் எடுத்து ஒரு சேரப்பற்றி நீ நின்னுடைய ஆசானை வணங்கும் கடமையைச் செய்தருள்க! என்று அறிவிக்க, அதுகேட்ட  நங்கை காந்தண்மலரின் அழகைக் கெடுத்த தன் கைம்மலரைக் கூப்பத் தோழியர் உருவு திரையைத் திறந்த பொழுதின்கண்  என்க. | 
|  | 
| (விளக்கம்)  நன்னர்க்கிளவி - கேள்வியானும் 
      பயனானும் இனிய   மொழி. நயவர - விருப்பம் உண்டாகும்படி. காண்போர் - 
      மாணவர்.   ஒழுக்கம் - சான்றோர் வகுத்த ஒழுக்கமாகிய வழிபாடு என்க. மாதர் 
      -   விளி. கஞ்சிகை - உருவுதிரை. கூப்ப - எனத் திரித்துக்கொள்க. |