(விளக்கம்) இன்பமுந்துன்பமும் மாறி வருமியல்புடைய இவ்வுலகத்தே எனக்குத் துன்பம்
ஒன்றும் இடையறாது வருகின்றது என்றிரங்குவான் உயலருந்துன்பமொ டொருவழிப்
பழகி என்றான். பயலை கொண்ட என்பையுள் யாக்கை என்றது,
பசலை பாய்தல் என்னும் மெய்ப்பாடு. பையுள் - துன்பம். இது - இந்த மறை.
அலர் - ஊரவர் கூறும் பழமொழி. நோய்முத னாடுவோர் இஃது இவன்
வாசவதத்தையைக் காமுறுதலானே உண்டாயிற்று என்பர். இதனால் அவட்குப்
பழிச்சொல் பிறக்கும் என்றவாறு.
|