(விளக்கம்) இப்பகுதியில்
(121) 'விழுக்கரு வாழ்க்கையின்' (123) 'கொடையகத் தோனென' எனவரும்
தொடர்கட்குப் பொருள் நன்கு புலப்படவில்லை. இவை, இழுக்குறு வாழ்க்கையன்
என்றும் கடையகத்தோன் என்று மிருந்த பாடங்களின் திரிபுகள் என்று
தோன்றுகின்றன. இப்பகுதியாற் கூறப்பட்ட பொருளின் சுருக்கம் வருமாறு :--
வயந்தகனும் தாயும் அளவளாயிருந்த பொழுது, நருமதையாற் காதலிக்கப்பட்ட
சேணிகனாகிய கயவன் சூதாடுகளத்தின்கண் நருமதை வழங்கிய அணிகலன்களைத்
தோற்று விட்டு அவள் மாளிகைவாயிலை அடைந்தானாக அதுகண்ட சிலர் அவள்பாற்
அவள் பின்னரும் அவன்பாற் பெரிதும் விருப்பமுடையவளாய் அவனைத்
தொடர்ந்து போகத் தலைப்படுவாளாயினள் என்பதும் அதுகண்ட தாய்
மனம் வருந்தி அவளைத் தடுத்து வயந்தகன் வரவையும் உதயணன் காதலையும்
கூறி உதயணன் வேண்டுகோட் கிணங்கும்படி வேண்டுவாளாயினள்
என்பதுமாம். இந்நிகழ்ச்சியாற் 'காமத்திற்கு கண்ணில்லை' என்னும் ஓர் இழி தகைமையை நமக்கு விளக்குகின்றார் என்க.
பூங்குழை : அன்மொழி. நருமதை - சேணிகச் சிறுதொழில் ...... வாழ்க்கையன்
என்னும் துணையும் அக்கயவன் இயல்பு கூறிய படியாம். கவறாடாளர்க்குக்
கலந்தொலைவெய்திக் கடையகத்தான் என்பது கண்டோர் கூற்றென்க. கடை -
வாயில். கவலை - நாற்சந்தி. கடைகழிந்து ஆங்குக்
காணாமையால் ஓடிக் கவலையிற் செல்லும் என்பது
கருத்தாகக்கொள்க. கவ்வை - துன்பம். ஐயன் - வயந்தகன். ஐயன் காரியமாகிய குறைகளைந்து என்றவாறு. சென்றீ - செல்வாயாக. கைவளை மாதர் என்றது இகழ்ச்சி வகையாக விளித்தபடியாம். ஏடி வளையற்காரி! நான்
கூறுவது கேள்! என்றார்போல வென்க.
|