| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 35. நருமதை சம்பந்தம் | 
|  | 
| வலிதி னென்னை வத்தவர் 
      பெருமகன்
 கொலிய செய்வது குழுக்கள் காண்கெனப்
 155    பூசற் கிளவி சேயிழை பயிற்ற
 | 
|  | 
| (நருமதை 
      அரற்றுதல்) 153 - 155: 
      வலிதின்..........பயிற்ற
 | 
|  | 
| (பொழிப்புரை)  அங்ஙனம் கொண்டுபோகும் 
      பொழுது சிவந்த   அணிகலன்களையுடைய நருமதை வழியின்கண் குழுமிநின்று 
      காண்கின்ற   கூட்டத்தார்களை நோக்கிக் கூட்டத்தீரே! கூட்டத்தீரே! 
      வத்தவநாட்டு   மன்னனாகிய உதயணன் எளியேனைக் கொல்லும் பொருட்டுச் 
      செய்கின்ற   கொடுமையைக் காணுங்கோள் ! என்றென்று பலகாலும் 
      முறையிடாநின்ற   ஆரவாரச் சொற்களைக் கூறியழா நிற்ப என்க. | 
|  | 
| (விளக்கம்)  கொடுபோவான் 
      வயந்தகனேனும் இந்நிகழ்ச்சிக்காரணம்   உதயணனே யாகலின் ''வத்தவர் 
      பெருமகன் செய்வது'' என்றாள்.   கொலிய - கொல்லிய, கொல்லுதற்கு. குழுக்கள் 
      - விளி.   பூசல் - ஆரவாரம.் சேயிழை: அன்மொழித்தொகை. |