உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
           வலிதி னென்னை வத்தவர் பெருமகன்
           கொலிய செய்வது குழுக்கள் காண்கெனப்
     155    பூசற் கிளவி சேயிழை பயிற்ற
 
             (நருமதை அரற்றுதல்)
         153 - 155: வலிதின்..........பயிற்ற
 
(பொழிப்புரை) அங்ஙனம் கொண்டுபோகும் பொழுது சிவந்த அணிகலன்களையுடைய நருமதை வழியின்கண் குழுமிநின்று காண்கின்ற கூட்டத்தார்களை நோக்கிக் கூட்டத்தீரே! கூட்டத்தீரே! வத்தவநாட்டு மன்னனாகிய உதயணன் எளியேனைக் கொல்லும் பொருட்டுச் செய்கின்ற கொடுமையைக் காணுங்கோள் ! என்றென்று பலகாலும் முறையிடாநின்ற ஆரவாரச் சொற்களைக் கூறியழா நிற்ப என்க.
 
(விளக்கம்) கொடுபோவான் வயந்தகனேனும் இந்நிகழ்ச்சிக்காரணம் உதயணனே யாகலின் ''வத்தவர் பெருமகன் செய்வது'' என்றாள். கொலிய - கொல்லிய, கொல்லுதற்கு. குழுக்கள் - விளி. பூசல் - ஆரவாரம.் சேயிழை: அன்மொழித்தொகை.