(விளக்கம்) நகரநம்பியர் (219) நலம் கரியப் பற்றிச் சென்மோ இன தெளிகெனக்
களைஇப் பயிற்றிப் புல்லிச் சென்னியராய்ப் பின்னும் வீணையின்கண்
காட்டி மாசு கழீஇத் திரிதரும் மறுகின்கண் என இயைபு காண்க. நகரநம்பியர்
பூங்குழை மகளிர் மனமாசு கழீஇத் திரிதரும் மறுகின் என
அனைத்தையும் மறுகிற்கே அடையாக்குக. நாட்போது -
அன்றலர்ந்த மலர். முகை - அரும்பு. பதம் - சுவை. நகைப்பதம் - நகையையுடைய
கூடற் செவ்வி. பண்ணின்கண் அமைந்த சொல்லின் நுண்பொருளும் தோன்ற
இசையிற்காட்டி என்க. மனமாசு - மனக்குறை, இல்
- தேற்றாமரம். படுகாழ் - முற்றிய விதை. தேய்வை யுறீஇ - ஒரு சொல்;
தேய்த்து என்க. கலுழி - கலங்கல்.
|