(விளக்கம்) அரசன் பண்பினன் ஆதலின்
எள்ளியும் உரையானாய்க் கேட்டது கரந்து பட்டதற்கு நாணாது குமரற்குக் காலம்
அன்மை என்னும் குறையே அன்றி காலமும் இடனும் தக்கனவாயின் இச்செயலும்
கோலமன்றோ என இரங்கி இளமையதியல்பு என முறுவலித்து அவன் வேட்ட
அவ்வின்பத்தைப் பெருக்க என இயைபு காண்க. பெருக்கி என்பதனைப்
பெருக்க எனத் திரித்துக்கொள்க. காழ்ப்படல் -
முதிர்தல். நகை உதயணன் பேதமைபற்றிப் பிறந்தது. நாணம் பிறர்பழியும்
தம் பழிபோற்கொண்டு நாணும் பெருந்தகைமை பற்றிப் பிறந்தது
என்க. 'பிறர்பழியுந் தம்பழியும் நாணுவார்
நாணுக் குறைபதி யென்னு முலகு' எனவரும் திருக்குறளும்
(1015) நினைக . 'பிறர் தீமை சொல்லா நலத்தது' (குறள் 984)
என்பது பற்றிப் ''பழிப்புறஞ் சொல்லாப்பண்பினன்'' என்று பாராட்டினர்
என்க. பண்பு, ஈண்டுச் சால்புடைமை மேனின்றது. வேட்டது பெருக்க என்னும்
எச்சத்தை (40) அருளி என்பதனால் முடித்துக்கொள்க.
|