| (விளக்கம்)  ஐயக்கிளவியாகிய 
      தீதுரையென்க. ஓசை:   ஆகுபெயர் - பழிச்சொல். 'எமர்தரவாரா தாயினும் இவண் 
      நோற்று அவண்  உறையுலகத்து அழித்துப் பிறந்தாயினும் எய்துதல் வலித்தனென்'
        என்னுமிக்கருத்தினை, 'ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற ஏனை உலகத்தும் 
        இயைவதால் நமக்கு' எனவரும் (குறிஞ்சிப்பாட்டு 23 - 4). தலைவி கூற்றினுங் 
        காண்க. இவ்வுழுவலன்பின் திறத்தினை,        'இம்மை மாறி மறுமை யாயினும்     
         நீயாகியர் என் கணவனை        யானா கியர்நின் 
      நெஞ்சுநேர் பவளே'  எனவரும் குறுந்தொகையானும் (49) உணர்க.
null
 |