உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           இன்றைக் கேள்வி யிடையிடு மெனினும்
    345   சென்றையா நங்கையைச் செவ்வி நோக்கி
          இன்றுணை மகளிரொ டொன்றியான் விடுத்தரும்
          சொல்லொடு படுத்துச் செல்கவென் களிறென
 
                  (இதுவுமது)
            344 - 347 : இன்றை..........களிறென
 
(பொழிப்புரை) ஆதலால் என் களிறுபோல்வோய்! வாசவதத்தைக்கு இற்றைநாள் யாழ்க்கேள்வி இடையீடு படினும் படுக! யான் சென்று ஆங்கு வருந்திக்கிடக்கும் வாசவதத்தையின் நிலைமையை நோக்கி இனிய துணைவராகிய தோழியரோடு கூடி யான் அவர்பாற் கூறி விடுக்கும் செய்திக்கிணங்க நீ செல்வாயாக! என்று அறிவுறுத்து என்க.
 
(விளக்கம்) அயாம் - வருந்தும். செவ்வி - நிலைமை. என் களிறு என்றது விளி.