| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 36. சாங்கித்தாயுரை | 
|  | 
| இன்றைக் 
      கேள்வி யிடையிடு மெனினும் 345   சென்றையா 
      நங்கையைச் செவ்வி 
      நோக்கி
 இன்றுணை 
      மகளிரொ டொன்றியான் 
      விடுத்தரும்
 சொல்லொடு 
      படுத்துச் செல்கவென் களிறென
 | 
|  | 
| (இதுவுமது) 344 - 347 : இன்றை..........களிறென
 | 
|  | 
| (பொழிப்புரை)  ஆதலால் என் 
      களிறுபோல்வோய்! வாசவதத்தைக்கு   இற்றைநாள் யாழ்க்கேள்வி இடையீடு 
      படினும் படுக! யான் சென்று   ஆங்கு வருந்திக்கிடக்கும் வாசவதத்தையின் 
      நிலைமையை நோக்கி   இனிய துணைவராகிய தோழியரோடு கூடி யான் அவர்பாற் கூறி 
        விடுக்கும் செய்திக்கிணங்க நீ செல்வாயாக! என்று அறிவுறுத்து 
      என்க. | 
|  | 
| (விளக்கம்)  அயாம் - வருந்தும். செவ்வி 
      - நிலைமை.   என் களிறு என்றது விளி. |