| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 37. விழாக் கொண்டது | 
|  | 
| கோபிர் 
      கைதொழக் கோயில் 
      போகி வேல்கெழு 
      முற்றமொடு வீதியி 
      னீங்கிக்
 குஞ்சரச் சேரித் தன்னக ரெய்தி
 அன்றை வைகல் சென்ற 
      பின்னர்
 | 
|  | 
| (அரசன் மக்கள் 
      படையரங்கேற்றம்) 1 - 4: கோலவர்..........பின்னர்
 | 
|  | 
| (பொழிப்புரை)  உதயணகுமரன் 
      இங்ஙனம் காவலர் கை தொழ   அரண்மனையைவிட்டுச் சென்று அதன் வேற்படை 
      பொருந்திய   முற்றத்தையும் வீதியையும் கடந்து குஞ்சரச் சேரிக்கண்ணதாகிய 
        தனது மாளிகையை அடைந்து அற்றை நாள் கழிந்தபின்னர் 
என்க. | 
|  | 
| (விளக்கம்)  கோயில் - 
      அரண்மனை, நகர் - மாளிகை. |