(விளக்கம்) குவைக்களம் -
மகளிர் குழுமிய உவளகம். குலமகள் என்றது கோப்பெருந்தேவியை. நீதி -
அறம். வெறுமை - அறியாமை. பெற்றநாளிற் கணவர் உவத்தலை 'கணவர் உவப்பப்
புதல்வர்ப் பயந்து' என்பதனானும் (மதுரைக் - 400)
'மற்ற வன்சொன்ன வாசகங் கேட்டலும்
மகனைப் பெற்ற வன்றினும்
பிஞ்ஞகன் பிடித்தவப் பெருவில் இற்ற
வன்றினும் எறிமழு வாளவன்
இழுக்கம் உற்ற வன்றினும்
பெரியதோர் உவகையன் ஆனான்'
எனவரும் இராமாவதாரத்தனும் (மந்திரப் - 42) உணர்க. கலி -
தழைத்தல் - ஈண்டு உவகை மேற்று.
|