| (விளக்கம்)    குவைக்களம் - 
      மகளிர் குழுமிய உவளகம். குலமகள்     என்றது கோப்பெருந்தேவியை. நீதி - 
      அறம். வெறுமை - அறியாமை.     பெற்றநாளிற் கணவர் உவத்தலை 'கணவர் உவப்பப் 
      புதல்வர்ப் பயந்து'  என்பதனானும் (மதுரைக் - 400)             'மற்ற வன்சொன்ன வாசகங் கேட்டலும் 
      மகனைப்பெற்ற வன்றினும் 
      பிஞ்ஞகன் பிடித்தவப் பெருவில்
 இற்ற 
      வன்றினும் எறிமழு வாளவன் 
      இழுக்கம்
 உற்ற வன்றினும் 
      பெரியதோர் உவகையன் ஆனான்'
     எனவரும் இராமாவதாரத்தனும் (மந்திரப் - 42) உணர்க.   கலி - 
      தழைத்தல் - ஈண்டு உவகை மேற்று.
 
 |