| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 38. விழா வாத்திரை | 
|  | 
| விசும்புற 
      நிமிர்ந்த பசும்பொன் 
      மாடத்து வெண்சுடர் வீதி விலக்குவனர் 
      போல
 எண்ணரும் பல்படை யியக்கிடம் பெறாஅ
 20    நகர நம்பிய ரரச 
      குமரர்
 நிறைகளி றிவைகா ணீங்குமி னெனவும்
 | 
|  | 
| (இதுவுமது) 17 - 21 
      :  விசும்புற.........எனவும்
 | 
|  | 
| (பொழிப்புரை)  இனி நகர 
      நம்பியரும் அரச குமரரும்   தெருக்களின் இருமருங்கும் வானுற உயர்ந்து நிற்கும் 
      தத்தம்   பசிய பொன்மாளிகையிலேறி நின்று தெருவிலே குழுமிய   
      சிறுவர்களை நோக்கி அரசனுடைய எண்ணுதற்கரிய பலவாகிய   படைகள் இயங்குதற்கு 
      வழி பெறாவாயின; உதோ ஊர்ந்து   வருகின்ற நிறைந்த யானைகள் காணுங்கோள் 
      என்றும், இவற்றிற்கு   வழி விடுங்கோள் என்றும், அகலுமின்! என்றும் 
      திங்கள் மண்டிலம்   செல்லும் வழியை விலக்குவார் போன்று கூவா நிற்ப 
      என்க. | 
|  | 
| (விளக்கம்)  நகர 
      நம்பியரும் அரச குமரரும் ஏறி   நின்று இடம் பெறாஅ, இவை களிறு காண் 
      நீங்குமின் எனவும்   என்று இயைத்துக் கொள்க. |