உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
38. விழா வாத்திரை |
|
விசும்புற
நிமிர்ந்த பசும்பொன்
மாடத்து
வெண்சுடர் வீதி விலக்குவனர்
போல
எண்ணரும் பல்படை யியக்கிடம் பெறாஅ
20 நகர நம்பிய ரரச
குமரர்
நிறைகளி றிவைகா ணீங்குமி னெனவும்
|
|
(இதுவுமது) 17 - 21
: விசும்புற.........எனவும்
|
|
(பொழிப்புரை) இனி நகர
நம்பியரும் அரச குமரரும் தெருக்களின் இருமருங்கும் வானுற உயர்ந்து நிற்கும்
தத்தம் பசிய பொன்மாளிகையிலேறி நின்று தெருவிலே குழுமிய
சிறுவர்களை நோக்கி அரசனுடைய எண்ணுதற்கரிய பலவாகிய படைகள் இயங்குதற்கு
வழி பெறாவாயின; உதோ ஊர்ந்து வருகின்ற நிறைந்த யானைகள் காணுங்கோள்
என்றும், இவற்றிற்கு வழி விடுங்கோள் என்றும், அகலுமின்! என்றும்
திங்கள் மண்டிலம் செல்லும் வழியை விலக்குவார் போன்று கூவா நிற்ப
என்க.
|
|
(விளக்கம்) நகர
நம்பியரும் அரச குமரரும் ஏறி நின்று இடம் பெறாஅ, இவை களிறு காண்
நீங்குமின் எனவும் என்று இயைத்துக் கொள்க.
|