(விளக்கம்) இதனோடு,
"ஆணை ஆணை யகலுமி
னீரென
வேணுக் கோலின் மிடைந்தவ
ரொற்றலின்
ஆணை யின்றெம தேயென்
றணிநகர்
காணுங் காதலிற் கண்ணெருக் குற்றவே"
எனவரும் சீவகசிந்தாமணியை (634) ஒப்புக் காண்க.
அறாஅ விருப்பிற் சிறாஅர் மொய்த்த என மாறுக. கம்பலை -
ஆரவாரம். எம்பரும் - எவ்விடததும். கூந்தற்பிச்சம் - மயிற்பீலியாற்
கட்டப்பட்ட ஒருவகை விருது. காண் - காண்டல் ; அழகுமாம்.
|