உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
38. விழா வாத்திரை |
|
இறைவன்
பணியென் றிறைகொண்
டீண்டி
நிறைபுனற் புகாஅர் நின்னகத்
தோரென
விழாக்கோ ளாளர் விரைந்துசென் றுரைத்தலும்
|
|
(விழாக்
கோளாளர் அரசனுக்குக்
கூறுதல்) 86 - 88
: இறைவன்............உரைத்தலும்
|
|
(பொழிப்புரை) இவ்வாறு நகர
மக்கள் இஃது இறைவன் பணியென்று குழுமித் தங்குதலை
அறிந்த விழாக்கோளாளர், விரைந்து மன்னன்பாற் சென்று
பெருமானே அரண்மனையகத்தே வாழுவோர் இன்னும் நிறைந்த நீரையுடை
திருநீர்ப் பொய்கைக்குப் போகப் புறப்பட்டிலர், என்றுணர்த்தா
நிற்றலாலே என்க.
|
|
(விளக்கம்) நகர்வாழ்மக்கள்எஞ்சாமல்சென்றமை கண்டு விழாக் கோளாளர்
சென்று இனி அரசன் முதலியோர் புறப்படலாம் என்று குறிப்பால்
உணர்த்தியபடியாம். ஈண்டி - ஈண்ட.
|