(பொழிப்புரை) நிலத்தை
வழங்குவோரும், பொருளை வழங்கு வோரும், களிற்றியானையை வழங்குவோரும்,
குதிரைகளை வழங்கு வோரும், ஆகி இங்ஙனம் வழங்குவோர் வழங்க அவ்விடத்தே
மீண்டும் வழங்குவோர் வந்து குழுமி வழங்குதலில் பெயர்த்தலின்றித் தாம்
வழங் கும் பொருளை ஏற்கும் இரவலரைக் காணாமல் அழைக்கின்ற
குரலை யுடையராகி மணல் பொருந்திய அப்பொய்கைப் பெருந்துறை தோறும்
பொருந்தித் தத்தம் உறவினரோடு கூடிய அழகினையுடையராகி விரும்பி
அந்நகரமாந்தர் எல்லோரும் நீராடலாயினர் என்க