(விளக்கம்) ஞாழல்
- குங்குமமரம். நீர்பாய்ந்து ஆடுவார் கரைக்கண் உள்ள மரக்கிளையில்
ஏறிநின்று நீரிற் பாய்தல் வழக்கம். நீர் பாய்தற்கு
ஒருத்தி ஞாழற் சினையிலே ஏறிநின்றாளாக அப்பொழுது அச்சினையை அவள்
தோழியர் அசைத்தனர் என்பது கருத்து. அசைத்தலாலே நிலைகொள்ளமாட்டாமல்
பாய்ந்தாள் என்க. சிகழிகை - மயிர்முடி. பின் - பின்னல், சடை. புறம்பு
- முதுகு. பொன்னரிமாலை புடைத்தலைத் தன்கணவன் தன் கூந்தலைப்
பற்றுவானாகக் கருதி என்க. தான் ஊடியிருப்பவும்
ஊடல் தீர்த்தலின்றித் தனது சினமாகிய கதவைத் தனது வன்கண்மையால்
உடைத்தெறிந்து தன்னைப் பண்பின்றித் தீண்டுகின்றான் என்று கருதிச்
சினந்து என்றவாறு. ஊடியிருத்தலால் கடைக்கண்ணால்
நோக்கினள். அன்மையின் - ஆங்குக் கணவனில்லாமையாலே, செற்றப்புதவு -
சினமாகிய கதவு. குத்திவாங்கி என்றது - இனிதே பேசி ஊடலுணர்த்தாமல்
வலிந்து தீண்டுகின்றான் என்றபடியாம்.
|