(விளக்கம்) வெண்கோயிலுள், சேனாபதிமகள் வாசவதத்தை நீரணி காணிய போதரும் என்னும்
அவளோடு ஆடற்பொருட்டுப் புன்னைக் கோட்டில் அணைத்து வைத்த நாவாயைப்
பண்ணும் மள்ளர்க்குக் கள் அடுகின்ற மகள் சோர்ந்திட்ட வள்ளத்தைக்
கவ்வி ஏறி இவரும் கடுவன் திரிதரும் தோற்றம் காண்மின்
எனத் தொடர்பு காண்க. கம்பல் - கம்பலை: ஆரவாரம். கோமாணங்கையர்
என்றது மன்னன் மனைவிமாரை அரைசமங்கையர் என்றது பிறமன்னர் மனைவியரை.
அவள் பொருட்டு அணைத்த நாவாய் என்க. பண்ணும் - ஒப்பனை செய்யும்.
மள்ளர் என்றது தொழிலாளரை. கள்ளட்டு வாக்கும் மகள் என்பது கருத்து.
கூடம் - உள்ளிடம். கூம்பு - பாய் மரம். கடுவன் - ஆண்குரங்கு.
|