(விளக்கம்) ஒருதலைவி என எழுவாய் வருவித்துக் கொள்க. பொறிமயில் - புள்ளிமயில்.
மணி - நீலமணி. குரல் - கொத்து. ஈர்முத்து - குளிர்ந்த முத்துமாலை.
அழல் - வெப்பந்தருகின்ற - உண்ணும் பொருட்டு வந்து சுழல்
வண்டென்க. குறிக்கோளாளனாகிய காதலன் என்க. பொறி - பெயர். பெண்மை -
ஈண்டுப் பேதைமை. இச் செய்யுளோடு,
"விடனொக்கு
நெடிய நோக்கி னமிர்தொக்கு மின்சொ லார்தம்
மடனொக்கு மடனு முண்டே வாணுத லொருத்தி காணத்
தடனொக்கு நிழலைப் பொன்செய் தண்ணறுந் தேறல் வள்ளத்
துடனொக்க வுவந்து நீயே யுண்ணுதி தோழி யென்றாள்"
எனவும்,
(கம்ப - உண்டாட் - 10)
"அச்சநுண் மருங்கு லாளோ ரணங்கனா ளளக
பந்தி நச்சுவேற் கருங்கட் செவ்வாய் நளிர்முக
மதுவுட் டோன்றப் பிச்சிநீ யென்செய் தாயிப்
பெருநற விருக்க வாளா எச்சிலை நுகர்தி
யோவென் றெயிற்றரும் பிலங்க நக்காள்"
எனவும் வரும் செய்யுள்களை ஒப்புநோக்குக (கம்ப - உண்டாட் - 11).
|