(விளக்கம்) ஏமம் -
காவல். முந்நீர் - கடல். எறிசுற : வினைத்தொகை. காமனும் என்புழி உம்மை
உயர்வு சிறப்பு, காமன் பிற மகளிரை விரும்பாதவன் என்ப.
காமர் - அழகு. காரிகை என்பது ஒருத்தி என்னும் பொருட்டு. மகளிர் ஈண்டுப்
பரத்தையர். வினை என்றது ஈண்டு நல்வினை தீவினை யிரண்டையுமாம், "இருள்
சேர் இருவினையுந் தீர்ந்த தூயோர் உயிர் அனைத்துலகிற்கும் மேலே சென்று
சித்தபதத்தை அடையும் என்பதுபற்றி வினைதீர் உயிரின் மிதந்தது
என்றார். "காதலின் ஆடலின்" என்றும் "காதலியாடலின்" என்றும் பாட
வேற்றுமைகள் உண்டு. "ஆயமாக்கள் என்றமையானும் நீணீர்
நீந்தி நெடும்புணை யொழியத்தன்வயிற் செல்லும் இல்வளக்கொழுநனை" என்றும்
பின்னர் வருதலின் "காதலனாடலின்" என்னும் பாடமே சிறந்தமை
காண்க.
|