உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
42. நங்கை நீராடியது |
|
155 சிறப்பவை யாதலிற்
சீர்மையொ
டிருந்து காமர்
கோலங் கதிர்விரித்
திமைப்பத் தாமரை
யுறையுண் மேவாள்
போந்த தேமலர்க்
கோதைத் திருமகள்
போலக் கோமகள்
போதுங் குறிப்புநனி நோக்கி
|
|
(இதுவுமது)
155 - 159: சிறப்பு..........நோக்கி
|
|
(பொழிப்புரை) அவ்வணிகலன்கள் அணிதல் சிறப்பாகலின் வாசவதத்தை அவற்றை அணியுந்துணையும்
அமைதி யோடிருந்து அழகிய அவ்வொப்பனை அணிகலன்கள் ஒளி
பரப்பி விளங்கா நிற்பத் தனக்குரிய தாமரைமலராகிய உறையுளை விரும்பாது
ஈண்டெழுந்தருளிய தேன் துளிக்கும் மலர்மாலையணிந்த திருமகளே போன்று அக்
கோமகள் எழுந்தருளாநின்ற குறிப்பினை நன்குணர்ந்து, என்க.
|
|
(விளக்கம்) நோக்கி
வந்த (166) என இயையும், சீர்மை ஈண்டு அமைதியின் மேற்று. இமைப்ப -
விளங்க. கோமகள் - பிரச்சோதன மன்னன் மகள். மேவாள் -
விரும்பாள்.
|