| (விளக்கம்)  பாப்புரி - 
      பாம்புச்சட்டை. இருமருங்கினும் காற்றாலே   பறக்கின்ற மெல்லிய வெள்ளாடை 
      இருமருங்கினும் சாமரை வீசுதல்   போன்று தோன்ற என்றவாறு. மீட்சி மிக்கு 
      வாய்கூரும் வேட்கையன் என்க.   வாய்கூருதல் : ஒருசொல். பெரிதும் வளர என்று 
      பொருள் கொள்க. நலிவது   - நலியும் மாற்றுச்செய்கை. கொக்குவாய் - 
      கொக்கின் அலகு. உதயணன்   ஆராய்ச்சி செய்யுங்கால் அவன் விரல் கொக்கலகு 
      போன்று கூம்பியிருந்தன   என்றவாறு. யாதேனுமொன்றனைச் சிந்திப்போர் 
      விரல்களை அங்ஙனம்   கூம்பவைத்துக் கோடல் இயல்பு என்க.                 
      42. நங்கை நீராடியது முற்றிற்று.
 
 |