உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           எவ்வெத் தானத்துங் கவ்வை தோற்றி
          உதையண குமரனும் யூகியும் வாழ்கெனப்
          புதைவா ளுரீஇப் பூசல் விளைத்தலும்
 
               (யூகியின் மறவர் செயல்)

                112 - 114: எவ்.........விளைத்தலும்

 
(பொழிப்புரை) பல்வேறு இடங்களிலும் ஆரவாரத்தை யுண்டாக்கி ''உதயணகுமரன் வாழ்க'' என்றும், ''யூகி வாழ்க'' என்றும் வாழ்த்தி உறையினின்றும் வாட்படைகளை உருவிக்கொண்டு போர் ஆற்றா நின்ற காலத்தே என்க.
 
(விளக்கம்) கவ்வை - ஆரவாரம். புதை - உறை. பூசல் - போர்.