உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
43. ஊர் தீயிட்டது |
|
115 மட்டணி மூதூர்
மனைதொறு மரீஇய கட்டணி
கூந்தற் கள்ள மங்கையர்
அட்டிலு மறையும் விட்டெரி கொளுவலின
|
|
(கவ்வை மங்கையர் நகரில் தீயிடுதல்)
115 - 117:
மட்டணி..........கொளுவலின்
|
|
(பொழிப்புரை) சிறந்த நகரங்கட்கு
அளவையாகிய அழகிய பழைய ஊராகிய உஞ்சைநகரத்தின்கண் இல்லந்தோறும்,
இருந்த வேடமாகக் கட்டிய பல்வேறு அணிகளையும் கூந்தலையும் உடைய
கள்ளத்தன்மையுடைய மறமங்கையர் அட்டிற்சாலைகளினும், அறை களிலும் கொழுந்து
விட்டெரியும்படி தீயினைக் கொளுவுதலானே என்க.
|
|
(விளக்கம்) மட்டு - அளவு. மூதூர் - உஞ்சைநகரம். கள்ளம் -
வஞ்சம். அட்டில் - மடைப்பள்ளி. விட்டுஎரியும் எரி என்க. எரி -
தீ.
|