(விளக்கம்) நன்னகர் என்றது வேள்விச்சாலையை. அந்தணர்
சேரியும் அருந்தவர்பள்ளியும் தீயிடப்படாமல் யூகியால் விலக்களிக்
கப்பட்டன என்க. சுதைமாடம் முதலியன தீப்பற்ற வியலாதன என்க. இதனோடு
கண்ணகியார் சினந்து எரித்தபோதும் ''பார்ப்பார் அறவோர்
பசுப் பத்தினிப் பெண்டிர், மூத்தோர் குழவி
எனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க'' என்று
தீக்கடவுட்குக் கட்டளையிட்டமையையும்
நினைக.
|