(விளக்கம்) ஓதியலாளர்
வேந்தன் வத்தவரிறைவனை விட்டு உழிதரல் உணர்வோர்க்கு நீதியாகத்
தோன்றமாட்டாது என உடலுநராய் உழிதர என்க.
கணிகை - கணிகைத்தன்மை. களிறாகிய ஒருத்தல் என்க. இளைஞர்
யானைப்பாகர். இசையினால் யானைவெறி தணியும் என்ப. நூல் - யானை நூல்.
இகழ்ச்சி - பொச்சாப்பினாலுண்டான இகழ்ச்சி. மகிழ்ச்சியுமது
"இகழ்ச்சியிற் கெட்டாரை
உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து"
எனவரும் திருக்குறள் (539) ஈண்டு நினையற்பாற்று.
உழிதரல் - சுழலுதல். ஓதியலாளர் - மன்னனைத் திருத்தலாகாமையிற் கையறவு
கொண்டு சுழன்றனர் என்பது கருத்து. நீதி - அரசநீதி. நெறி -
அரசியனெறி.
|