(விளக்கம்) தோட்டியின் வணக்கம் யானையைத் துன்புறுத்தற பொருட்டாமாறு போல உதயணனுடைய
மொழியிற் காணப்பட்ட வணக்கமும் தீமையே குறித்தலின் ''தோட்டியின்
வணக்கம்'' என்றார். தோட்டியின் வணக்கம் போன்ற வணக்கம் என்க.
"சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந்
தீங்கு குறித்தமை யான்"
எனவரும் திருக்குறளையும் (827) ஈண்டு நினைக. ஏற்றம் - ஏறுதலை,
எடுப்பி - தூண்டி. மன்னன் - உதயணன். வெருளி - அஞ்சி, ஓவியர் தமக்கு
எழுதவொண்ணாமையான் உட்குவர் என்றவாறு. உட்குதல் - அஞ்சுதல். உருவி -
உருவமுடையவள்; வாசவதத்தை. ஒய்யென - விரைவுக்
குறிப்பு.
|