உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           இன்னா வின்பத் தியற்கை யென்னென
           மன்னவன் வினாய மாத்திரைக் கண்ணே
 
           (பிரச்சோதனன் வினவுதல்)
           16 - 17: இன்னா..........கண்ணே
 
(பொழிப்புரை) அது கேட்ட பிரச்சோதனமன்னன் நிமித்திகனை நோக்கி "நின்னாற் கூறப்படும் அவ்வின்னாமையையுடைய இன்பந்தான் எத்தகையது? கூறுக!" என்று வினவிய பொழுதே என்க.
 
(விளக்கம்) இந்நிகழ்ச்சி எதுபற்றி நிகழும் என்று வினவியபடியாம்.