உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
47. உரிமை விலாவணை |
|
பின்னுந் தானே மன்னவன்
வினவ
மறுமொழி கொடாஅ மம்மர்
கண்டவன்
உறுமொழி கேட்கு முள்ள மூர்தர 65
நெஞ்சி னஞ்சாது நிகழ்ந்தது
கூறென்
றாருயிர்க் கபயங் கோமான் கொடுப்ப
|
|
(இதுவுமது)
62 - 66: பின்னுந்தானே.........கொடுப்ப
|
|
(பொழிப்புரை) மீண்டும் மன்னவன்
வினவவும் மறுமொழி கொடாமைக்குக் காரணமான அவனது
மனமயக்கத்தைக் கண்டு அரசன் அவன் கொணர்ந்துள்ள மிக்க மொழியைக்
கேட்டற்குத் தன் நெஞ்சம் பெரிதும் அவாவி மீக்கூர்தலானே மீண்டும்
"வராக ! நீ நின்னெஞ்சத்தே அஞ்சாமல் நிகழ்ந்ததனைச் சொல்லுக !"
என்று தேற்றி அவ்வராகனது ஆருயிர்க்கு அபயம் அளித்தருளா
நிற்றலாலே என்க.
|
|
(விளக்கம்) மம்மர்
- மயக்கம். உறுமொழி - மிக்கமொழி. கோமான் - பிரச்சோதனன். அபயம்
- அஞ்சற்க என்று ஒருவரைத் தேற்றிக்கூறும்
அருண்மொழி.
|